செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மாவீரன் மருத நாயகம் வரலாறு 01........

அமீரகத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ப்ரெடர்னிடி ஃபோரம்( EIFF), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்தது தான் வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையில் தென்றல் வீசும். சிலருக்கு சூறாவளியாக மாறும். மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால் பிரச்சனைகள் வரும்பொழுது மனமுடைந்து போகின்றான்.

பிரச்னைகளைத் தீர்க்கவே முடியாது என்று எண்ணுகின்றவன் தற்கொலை எனும் கோழைத்தனமான முடிவை எடுக்கின்றான். வாழ்க்கையைப் பற்றிய தவறான பார்வை தான் அவனை இந்த முடிவுக்குக் கொண்டு செல்கிறது. இன்று சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலைகள் நிகழ்கின்றன.

உளவியல் வல்லுனர் சிகமன் ஃப்ராய்ட் மனிதன் தற்கொலையின் பக்கம் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார்:

“பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையும், சாக வேண்டும் என்ற ஆசையும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தேங்கியுள்ளன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் உள்ளன. ஏதேனுமொரு காரணத்திற்காக சாக வேண்டும் என்ற எண்ணம் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மிகைத்து வெற்றி கொள்ளுமாயின் வாழ வேண்டும் என்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப் போகும். எனவே சாவது தான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்.”

சமூகவியல் ஆய்வாளர் எமைல் துர்ஹம் என்பவர் தற்கொலை செய்வதற்கு சமூகச் சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். தற்கொலைகளை இவர் 3 வகைப்படுத்துகிறார்:

1. தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide): காதல் தோல்வி, திருமண உறவில் பிரச்சனை, கடன் தொல்லை, மன அழுத்தம் போன்ற தனிநபர் தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

2. நியம மறு தற்கொலை (Anomic Suicide): இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்வு, அகதி வாழ்வு, போர், கலவரம், இனப்படுகொலை போன்ற சமூகத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்களால் வாழ்க்கை சீர்குலைவதைக் கண்டு கலங்கி செய்துகொள்ளும் தற்கொலைகள் இதில் அடங்கும்.

3. உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide): இனம், தேசம், கலாச்சாரத்திற்காகச் செய்யப்படும் தற்கொலைகள். ஆனால் இவை அரிதாகவே நிகழ்கின்றன.

உலகளவில் வருடாவருடம் 10 லட்சம் தற்கொலைகள் நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகின்றது. அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு 16 பேர் தற்கொலை செய்கின்றனர். இந்தியாவில் 2008-ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப் பதிவகம் கூறுகின்றது. தற்கொலை செய்துகொள்வதில் இலங்கைதான் முதலிடத்தில் உள்ளது. அங்கே ஒரு லட்சம் பேருக்கு 47 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அமீரகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 147 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஃபாத்திமா அல் மஸ்கரி தலைமையில் அல் அய்னைச் சேர்ந்த 239 கட்டடத் தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், 6 சதவீதம் பேர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும், 2.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்பங்களும், துன்பங்களும் எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டும் வாழ்க்கையில் நுழைவதில்லை. மாறாக, இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன. “ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு இலேசும் இருக்கின்றது” (அல் குர்ஆன் 94:6) என்று சிந்தித்தாலே துயரங்கள் எல்லாம் தூசிகளாக மாறிவிடும்.

இஸ்லாம் தற்கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. “இன்னும் உங்கள் கரங்களாலேயே உங்களை நீங்கள் அழிவின்பால் இட்டுச் செல்லாதீர்கள்” (அல் குர்ஆன் 2:195). மனித வாழ்க்கை இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஓர் அமானிதம். எனவே, தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு ஒருவனுக்கும் உரிமை கிடையாது. மனிதனை இறைவன் பரீட்சிக்க நாடுகின்றான். “உங்களில் மிகச் சிறந்த செயல் புரிபவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்” (அல் குர்ஆன் 67:2).

தற்கொலைக்கான காரணிகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது. ஒரு மனிதனது வாழ்க்கைக் காலம் அவன் தாயின் கருவறையில் 4 மாதச் சிசுவாக இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தன்னுயிரை மாய்த்துக்கொள்பவனது நிலை மிகக் கொடுமையானதாகவே அமையும்.

“யார் ஒரு மலையிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்கிறானோ அவன் நரகிலும் அவ்வாறே தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருப்பான். யார் விஷமருந்தி தற்கொலை செய்கிறானோ அவன் நரகிலும் விஷம் அருந்திக் கொண்டே இருப்பான். யார் தன்னுயிரை ஓர் இரும்புக் கருவியால் அழித்துக் கொள்கிறானோ அவன் மறுமையில் நெருப்புக் கிடங்கில் நிரந்தரமாக இரும்புக் கருவியால் தன்னைக் குத்திக் கொண்டே இருப்பான். (நூல் : புகாரீ)

தற்கொலை செய்வதால் இம்மை, மறுமை ஈருலகிலும் கொடூரமான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும். எனவே தற்கொலை என்னும் மாபாதகச் செயலிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வோம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.

EIFF - Dubai

தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் - MMK

"மனிதநேய மக்கள் கட்சியை வலுப்படுத்துங்கள் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

மத, இன பாகுபாடுகளை ஒழித்து தமிழக மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்க பட்ட கட்சிதான் ம.ம.க. என்றார் அவர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்.


எல்லா தரப்பு மக்களுக்கும் வேண்டி இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் நடத்தி வருகிறோம். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.

பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம்.  இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம்.

திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்

பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

இதற்காக மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரமின் மாவட்ட அமைப்பாளர் சகோ.அப்துல் லதீப் ,மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் குழு பல சிகிச்சைகளுக்கு அவசர ரத்த தான உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி

"மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இவர்களின் போராட்டத்தால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாகவும், அன்னா ஹசாரே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற தனிப்பட்ட நபர்கள், தங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரசுக்கு இணையான, அதிகாரமிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, நெருக்கடி கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து தீவிரவாத அமைப்புகளும், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், தடுத்து நிறுத்தி விட முயற்சிக்கின்றனர். பா.ஜ., முகமூடியை அணிந்து கொண்டு, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் போராட்டங்களை, இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.இவர்களுக்கு எதிராக, தீவிரமாக செயல்படுவதற்கு, காங்., பொதுச் செயலர் ராகுலை களம் இறக்க வேண்டும்.

ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய இணை அமைச்சரும், உ.பி., மாநில காங்., மூத்த தலைவருமான பெனி பிரசாத் வர்மா கூறுகையில், "அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் முயற்சிகளை முறியடிக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களுக்கு எதிராக, ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சி மேலிடம் அனுமதிக்க வேண்டும்' என்றார்.

தவறான தொடர்புகளால் தரிகெடும் நம் சமுதாயம்









TNTJ - KOOTHANALLUR

பா.ஜ.கவை ஆதரிக்க தயார்! உ.பி முஸ்லிம் அமைப்பு தகவல்!

உத்திரபிரதேசத்தில் வருகின்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.கவை ஆதரிக்கப்போவதாக அங்குள்ள முஸ்லிம் அமைப்பான பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் (பி.மு.ச) தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தங்களுடைய சமுதாயத்தினுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் அறிவித்துள்ளது.

சமீபத்தில் லக்னோவில் பீட்டர் மஹாலில் வைத்து நடைபெற்ற அவ்வமைப்பின் ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியின் போது அவ்வமைப்பின் மாநில தலைவர் அனீஸ் மன்சூரி இதனை தெரிவித்தார். அவர் கூறும் போது அரசியல் களத்தில் பா.ஜ.கவை தீண்டத்தகாத கட்சியாக நாம் கருதக்கூடாது,  பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகவே நாங்கள் இவ்வமைப்பை தொடங்கியுள்ளோம். அந்த முன்னேற்றம் பா.ஜ.கவினால் தான் ஏற்படமுடியும் என்று இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆதரிக்க ஒரு போதும் நாங்கள் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.



பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் செயல்படுவோம், வியாபாரம், கல்வி, தொழில்துறை, அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர். பா.ஜ.க தங்களுடைய ஆட்சயின் கீழ் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்து தரும் பட்சத்தில் அவர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவளிப்போம் என அவர் கூறியுள்ளார். ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம்களுக்கு சிறிது அளவே வசதிகளை செய்துள்ளது என்றும், அந்த அரசாங்கத்தை பொருளாதாரத்தில் மிகைத்து விழங்கும் முஸ்லிம்கள் தவறான பாதையில் அழைத்துச்செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அதே போன்ற ஒரு நிலை உத்திரபிரதேசத்திலும் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.
"புலி பசித்தாலும் புல்லைத்திண்ணாது!" என்பது பழமொழி!
பா.ஜ.க தோற்றாலும் முஸ்லிம்களுக்காக உழைக்காது என்பது புதுமொழி!

கருவருக்கத்துடிக்கும் வெறியர்களிடமே சமுதாயத்தை அடகு வைப்போம் என்ற நிலையில் தான் இவர்களைப்போன்ற இஸ்லாமிய அமைப்புகள் என்று தங்களை கூறிக்கொண்டு திரியும் இத்தகைய மதிக்கெட்டவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றது. இதனால் வரை பா.ஜ.க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செய்துவருகிறதே! அங்கேயெல்லாம் எத்தகைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்? என்பதை இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு அதே இடத்தில் ராமர் கோயிலை கட்ட துடியாய்த்துடிக்கும் இத்தகைய கையவர்களா முஸ்லிம் சமுதாயத்தினை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லப்போகிறார்கள்? முஸ்லிம் சமூகம் பா.ஜ.கவை ஒதிக்கி வைத்தது போல் இத்தகைய பெயர்தாங்கி அமைப்புகளையும் ஓரங்கட்டவேண்டும்.


Thanks : Muthu

பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்து, முஸ்லிம் சகோதரிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.

இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தாம் சகோதரி பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார்.இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் MLA ஜவாஹிருல்லா பேட்டி



 

TMMK 

பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை

இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகையானது வட்டியில்லா கடனாகும். உதவித் தொகையை பெறும் பயனீட்டாளர்கள் படிப்பை முடித்த பிறகு வேலையில் சேர்ந்தால் அல்லது படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இத்தொகையை எளிதான தவணை முறைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

இலவசமாக வழங்காமல் கல்வி உதவித் தொகையை கடனாக வழங்குவதற்கு காரணம் தேவையுடைய ஏராளமான மாணவர்கள் இதன் மூலம் சுழற்சி முறையில் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கமாகும்.

+2க்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு குறையாத டிகிரி, டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வட்டியில்லா கடன் உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு அனுமதி பெறாத கல்வி நிலையங்களில் பயில்வோர் இந்த கடன் உதவித்தொகையை கேட்டு விண்ணப்பிக்க இயலாது.

இந்த ஆண்டு டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்குவங்காளம், மணிப்பூர், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சார்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த வட்டியில்லா கடன் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை popularfrontindia.org என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் (Download) செய்யலாம். ஜூலை மாதம் 20-ஆம் தேதி விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அளிப்பதற்கான கடைசி தினமாகும். இத்திட்டத்திற்கு 24 லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

துருக்கி ,எகிப்து ஆகியவற்றின் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் சந்திக்கின்றன

எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் Freedom and Justice Party (FJP) பிரதிநிதிகள் துருக்கி சென்று பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் The Justice and Development Party (AKP) தலைவர்களை சந்தித்து கட்சின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளனர் என்று இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் கட்சியின் தலைவர் Dr. Mohamed Morsy மற்றும் அதன் பொது செயலாளர் Dr. Saad Katatny ஆகியோர் செல்லவுள்ளனர்      இதன்போது இரு கட்சிகளுக்கு இடையிலான மிகவும் நெருக்கமான உறவுப்பாலம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது என்று எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது விரிவாக

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி எகிப்து நாட்டுக்கு புதிதாக இருந்தாலும் அது சிறந்த அரசியல் அனுபவங்களை கொண்டது பாராளுமன்றத்தில் 80 வரையான உறுபினர்களை கொண்டுள்ளது முழுமையான இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளை கொண்டியங்குகின்றது.

அதேபோன்று துருக்கியின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான AKP கட்சி இஸ்லாமிய அடித்தளத்தை கொண்டுள்ள அதேவேளை மற்ற அரசியல் இஸ்லாமிய இயக்கங்களுக்கு புறம்பான அரசியல் அணுகு முறைகளை கடைபிடித்து மூன்றாவது தடவையாகவும் துருக்கியில் வெற்றிபெற்றுள்ளது.

துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் அர்பகான் தலைமையிலான  AKP கட்சி பாரிய வெற்றியை பெற்றுகொண்டுள்ளது இந்த AKP கட்சி – 50.% வாக்குகளை பெற்று, 21,465,541 கோடி வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க 326 ஆசனங்களை பெற்றுகொண்டுள்ளது இந்த இரண்டு கட்சிகளும் தற்போது பகிரங்கமான உறவை பேணிக்கொள்ள முன்வந்துள்ளது .

எகிப்தில் மிகவும் விரைவில் எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீன் அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்கப்படுகின்றது.

Our Ummah

KEO நடத்தும் இஸ்லாமிய கல்வி கருத்தரங்கம்

KEO அறக்கட்டளை ( Koothanallur Emirates Organisation )   நடத்தும் இஸ்லாமிய மாணவர் கல்வி கருத்தரங்கம், சாதனை மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தல் மற்றும் இஸ்லாமிய மகளிர் கல்வி வளர்ச்சி மாநாடு, இன்ஷா அல்லாஹ் 11-06-2011 சனிகிழமை காலை 9 மணியளவில் மன்ப உல் உலா மேல்நிலை பள்ளி, பரக்கத் ஹால்-ல் நடைபெற உள்ளது. காலையில் ஆண்களுக்கான நிகழ்ச்சியும், மாலையில் பெண்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.







நன்றி : KEO

11,000 தீவிரவாதிகளை உருவாக்க பயங்கரவாத ராம்தேவ் திட்டம்

அடுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட ஆயுத படையை உருவாக்குவோம், அனைவருக்கும் ஆயுத பயிற்சி அளிப்போம் என்று கூறியுள்ள பயங்கரவாதி பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனது ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் பயங்கரவாதி ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அடுத்த முறை போராடும்போது வெறும் கையுடன் வர மாட்டோம். 11,000 ஆண், பெண்களைக் கொண்ட ஆயுத படையை உருவாக்குவோம்.

அடுத்து ராம்லீலா மைதானத்தில் ராவண லீலாதான் நடைபெறும். எங்களை யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் 20 ஆண்களையும், 20 பெண்களையும் தேர்வு செய்து அவர்களை ஊழலுக்கு எதிரான போர்ப்படையாக உருவாக்குவோம். இவர்கள் 35 முதல் 40 வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களை படை போல தயாரிப்போம். இது ஒரு ராணுவம் போல செயல்படும் என்றார் ராம்தேவ்.

இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராம்தேவின் இந்தப் பேச்சை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இது தேச விரோத பேச்சாகும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் அவர்.

இது போலே பயங்கரவாத செயல் திட்டத்துடன் செயல் படும் போலி சாமியார்களையும் இவர்களுக்கு ஆதரவாக செயல் படும் பாசிச தீவிரவாத அமைப்பான RSS மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யுமா என்பதே நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வி...

சுஷ்மாவின் நள்ளிரவு நடனம் - நாட்டிற்கே அவமானம்

ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு முன்பு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜின் நடனமாடியது நள்ளிரவில் தூங்குவதற்காக பா.ஜ.க தலைவர்கள் நழுவியது என பா.ஜ.கவினர் அடித்த கூத்தினால் நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.

பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தேசிய அளவிலான போராட்டத்திற்கு துவக்கம் குறிப்பதற்கு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தான் அக்கட்சிக்கு கடுமையான அவமானத்தை பெற்று தந்துள்ளது.

கோடிக்கணக்கான பணத்தை முடக்கி ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திய ஹைடக் உண்ணாவிரத நாடகத்தின் இன்னொரு நகலாக மாறியது பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் கிழமை மாலை 7 மணிவரையிலான 24 மணிநேர சத்தியாகிரகத்தை பா.ஜ.க நடத்தியது.

திங்கள் கிழமை அதிகாலை இரண்டு மணி அளவில் மேடையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடினார்.இருகைகளையும் மேலே உயர்த்தி பாடலுக்கு தகுந்தவாறு ஆடினார் சுஷ்மா. முன்னாள் டெல்லி மேயர் ஆரதி மெஹ்ராவும், பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் விஜய் கோயலும் தாளத்துடன் கைக்கொட்டி சுஷ்மாவுடன் ஆடினர்.பா.ஜ.க வின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் தேசிய தலைவர் அனுராக் தாக்கூர் விசில் அடித்து உச்சஸ்தாதியில் பாட்டு படித்து உற்சாகம் ஊட்டினார்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் அரங்கேறியது.சத்தியாகிரக போராட்டம் நடத்திய பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் நள்ளிரவில் தூக்கம் கண்ணை கறக்கியவுடன் வசமாக ஏ.சி அறைகளுக்கு உறங்குவதற்காக நழுவினர். முரளி மனோகர் ஜோஷி தூங்குவதற்காக 12.30 மணிக்கே நழுவிவிட்டார்.

அதிகாலை இரண்டரை மணிக்கு அத்வானியும், அருண்ஜெட்லியும் நழுவினர். நடனமாடி தளர்ந்துபோன சுஷ்மா சுவராஜும் ஷானவாஸ் ஹுஸைனும் சற்றுநேரம் நழுவுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு மூன்று மணிக்கு எஸ்கேப் ஆகினர். இறுதியில் பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்கரியும் தூங்க சென்றுவிட்டார். குளித்து முடித்து காலை 8 மணிக்கு ஃப்ரஸ்ஸாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர் பா.ஜ.க தலைவர்கள்.

பா.ஜ.கவின் போராட்டத்தை கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்கள் அவருடைய சமாதிக்கு அருகில் போராட்டம் நடத்துகின்றனர். எதிர்கட்சி தலைவரும், அவருடைய தோழர்களும் நடனமாடியது எவ்வகையான போராட்டம்? என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தனன் திரிவேதி கேள்வி எழுப்பினார். ராம்தேவின் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறதா? அல்லது கொண்டாடுகிறதா? என மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கெதிரான இயக்கத்தை பாசிச சக்திகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்: PFI

ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற போராட்டங்களின் மூலம் கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியது. காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்ட்த்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உனர்வுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்ட்த்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக மிக உயர் மட்டத்தில் ஊழலை பிரித்துப்பார்க்க முடியாது தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ் பாஜக மற்றும் சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக மீண்டும் இக்கூட்டம் நினைவுகூர்கிறது.

PFI - Media Team

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கட்சிக்கு அங்கீகாரம்

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் சட்டரீதியான அந்தஸ்தை பெற்றுள்ளது.இதனால் செப்டம்பரில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்க உறுப்பினர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த பெப்ருவரி மாதம் மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் விளைவாக ஹுஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்ட எகிப்தில் இயக்கரீதியான கட்டுக்கோப்புடன் செயல்படும் அமைப்புதான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்.1928-ஆம் ஆண்டு இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் 1954 ஆம் ஆண்டுமுதல் தடையை சந்தித்துவருகிறது.

ஆனால், தொடர்ந்து சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டுவருகின்றார்கள்.2005-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இவ்வியக்கத்தின் சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றனர்.நாட்டின் 50 சதவீத மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக இயக்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெண்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள கட்சிதான் ப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி என தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thoothu Online 

சுதந்திர தின அணிவகுப்புக்கான பயிற்சிகள்

வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. தீண்டாமை இல்லாத இந்தியா, வகுப்பு வாதம் இல்லாத‌ ஊழல் இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து சமுதாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும், என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இப்பேற்பட்ட அணிவகுப்பை நடத்தி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் உறுப்பினர்களின் நேர்த்தியான நடை மற்றும் ஒழுக்கமான வழிகளை கண்ட தமிழ முஸ்லிம் மக்களுக்கு சதந்திர வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.

கடுமையான பயிற்சியின் மூலமாகவே இத்தகைய நேர்த்தியான அணிவகுப்பை நடத்த முடியும் என்பதுதான் உண்மை. இன்னும் சரியாக 2 மாதங்களே உள்ள நிலையில் அணிவகுப்பு கேடர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது. இறைவன் கிருபையால இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ முஸ்லிம்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பு இனிதே நடைபெறும்.


POPULAR FRONT OF INDIA

ஏழைகளுக்கு மறுவாழ்வு கிராமம் திறப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். அருகிலுள்ள கிராமங்களில் வாழும் வீடு இல்லாத 45 ஏழை குடும்பங்களுக்கு இந்நிகழ்ச்சியில் வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.

1000 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதுதான் இத்திட்டம். இதில் 51 வீடுகளின் நிர்மாணம் பூர்த்தியாகிவிட்டது.  இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிலமும் வாங்கப்பட்டுவிட்டது.

வீடுகள் தவிர கல்வி நிலையம் மற்றும் மஸ்ஜிதும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் வீடுகளுக்கான சாவிகளை உரியவர்களுக்கு வழங்கினார்.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொது செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், பொன்கய்காவ் மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்துற்றஹீம் ஷேக், ரிஹாப் அறங்காவலரும் (trustee) மில்லி கஸட் பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் ஷஃபருல் இஸ்லாம் கான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Rehab India Foundation

நீண்ட காலமாக சிறைவாடும் கோவை சிறைவாசிக்கு திருமணம்


கோவை குனியமுத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் காஜா உசேன். இவருடைய மகன் அமானுல்லாஹ் (வயது 29). கடந்த 1996ம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற அலிம்ஜார்ஜ் என்பவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமானுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அமானுல்லா, திருமணம் செய்ய முடிவு செய்தார்.கோவை பி.கே.புதூரை சேர்ந்த முகமது ரபி என்பவருடைய மகள் ரிசானா பானுவுக்கும், அமானுல்லாவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

ரிஸானாபானு பி.ஏ. பட்டதாரி பெண், ஆயுள் தண்டனை கைதியான அமானுல்லாவை திருமணம் செய்ய முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெற இருப்பதையொட்டி  பரோலில் விடுவிக்க அனுமதிக்குமாறு அமானுல்லாஹ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

அவருக்கு வருகிற 21ந் தேதி வரை பரோல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 ;30 மணி அளவில் கரும்புக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் அமானுல்லாவுக்கும், ரிஸானா பானுவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது 2 1/2 பவுன் தங்கநகையை மணப்பெண்ணுக்கு திருமண கொடையாக அமானுல்லாஹ் வழங்கி, திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

திருமணம் முடிந்த பின்பு அமானுல்லாஹ் கூறும்போது, இருவரின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த எனக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை கைதிகளை விடுவிப்பதில் முன்பு பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. புதிய அரசு இந்த விஷயத்தில் கருணை காண்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். பரோல் விடுதலை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வருகிற 21ந்தேதி அமானுல்லாஹ் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை கைதியின் திருமணத்தையொட்டி  கரும்புக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நன்றி : தினந்தந்தி.
INTJ ONLINE

போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி கலவரம் நடத்த சதி திட்டம்

ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் ராம்லீலா மைதான போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படு கொலை செய்தது போல் இனப்படு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு போராட்ட பந்தலுக்கு தீ வைத்துக்கொளுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டது. இதனைக் குறித்த ரகசிய தகவல் கிடைத்தவுடன் புலனாய்வு பிரிவு அரசுக்கு உடனடியாக தெரிவித்தது. இதன் அடிப்படையில் போராட்ட பந்தலில் இருந்து ஆட்களை வெளியேற்ற போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு.

புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியான செய்தி உண்மையானது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து ஷப்னம் ஹாஷ்மி கூறியதாவது:போராட்ட பந்தலை தீ வைத்துக்கொளுத்த எல்லா தயாரிப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் நடத்தியதாக புலனாய்வுகள் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் நாடு முழுவதும் மத கலவரத்தை உருவாக்குவது தான் சங்க்பரிவாரின் லட்சியம் என அவர்கள் சுட்டி காட்டினர்.

மேலும் தெளிவான தகவல்களை தெரிந்த மத்திய அரசு அதனைக குறித்து மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட தயாராக வேண்டும். உண்ணாவிரத பந்தலுக்கு தீவைத்து கொளுத்திவிட்டு தொடர்ந்து உருவாகும் வகுப்புவாத மோதல்கள் ஆதாயம் பெற்று நாட்டில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம்.

அதனை மத்திய அரசு போலீஸ் நடவடிக்கை மூலம் தகர்த்துவிட்டது. இவ்வாறு கூறிய ஷப்னம் ஹாஷ்மியிடம் ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பியபொழுது ஹாஷ்மி,’முன்னர் காவி பயங்கரவாதத்தை குறித்து நாங்கள் கூறியபொழுது எல்லோரும் ஆதாரங்களை கேட்டனர். ஆனால் அது உண்மை என நிரூபிக்கப்பட்டது’ என்றார்.

மேலும் அவர்,’அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்பி சமூக துறையில் தனது 30 ஆண்டுகால வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்த நான் ஒரு முட்டாள் அல்ல’ என அவர் தெரிவித்தார். ஆனால் ஆதாரங்களை வெளியிட இயலாது என அவர் தெரிவித்துள்ளார். இத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு நாட்டின் மதசார்பற்ற கொள்கையை பாதுகாப்பது அரசின் கடமை என ஹாஷ்மி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீவைத்துக்கொளுத்தி கரசேவகர்களை தீக்கிரையாக்கிய சம்பவத்திற்கு பின்னணியில் சங்க்பரிவார் அமைப்பு செயல்பட்டதாக சில புலனாய்வு குழுக்கள் கண்டறிந்தன.

கோத்ரா சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச்செய்த இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய உடையில் கால்பந்து ஆட ஈரான் அணிக்கு தடை

இஸ்லாமிய உடையில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள களமிறங்கிய மகளிர் அணியினருக்கு தடை விதித்த நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஃபிஃபாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் நடைபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிராக ஆடுவதற்கு ஈரான் கால்பந்தாட்ட மகளிர் அணியினர் கண்ணியமிக்க இஸ்லாமிய ஆடையை அணிந்தவாறு களமிறங்கினர். அப்பொழுது போட்டியை நடத்தும் அதிகாரிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு தடை விதித்தனர்.

இதனால் எதிர் அணியினருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வியட்நாம் அணிக்கு எதிராக ஆட இருந்த போட்டியிலும் ஈரான் அணிக்கு கலந்துக்கொள்ள இயலாது போனது.

மத-அரசியல் கலாச்சார ஆடைகளை அணிந்துக்கொண்டு வீரர்களோ, அதிகாரிகளோ மைதானத்தில் இறங்கக்கூடாது என ஃபிஃபா சட்டத்தின் பின்னணியில் பஹ்ரைன் போட்டி அதிகாரிகள் ஈரானுக்கு வாய்ப்பை மறுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதமும் இதே காரணத்தைக்கூறி ஈரான் அணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், ஃபிஃபாவின் கட்டளையின்படி ஆடையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி களத்தில் ஆட இறங்கியதாக ஈரான் கால்பந்து ஃபெடரேசன் தலைவர் அலி கஃபாஷியான் தெரிவித்துள்ளார். இதற்கு ஃபிஃபா தலைவர் ஸெப் ப்ளாஸ்டர் அனுமதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பஹ்ரைன் அதிகாரிகள் அரசியல் விரோதத்தின் காரணமாக ஈரான் அணிக்கு தடை ஏற்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பஹ்ரைனில் ஜனநாயக எழுச்சிப்போராட்டத்தை ஈரான் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

கோவையில் பாரதீய சேனா அமைப்பினர் இருவர் கைது...

காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தில்லியில் உண்ணாவிரதத்தில் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப் பகுதியில் பதற்றம் நிலவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.  பூங்கா காவலாளி, அப் பகுதியைச் சேர்ந்தவர்களின் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், நாகராஜ் ஆகியோரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வேலு என்பவரைப் தேடி வருகின்றனர்.
Muthupet - Popular Front of India

பல கோடி செலவில் நடத்தப்படும் உண்ணா விரத போராட்டம்

ஊழலுக்கு கறுப்பு பணத்திற்கும் எதிராக ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளும் RSS-ன் யோகா குரு பாபா ராம்தேவின் உண்ணாவிரத நாடக போராட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடபுடல் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

ஊழலுக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டது. ஆனால், ராம் தேவின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு கோடிக்கணக்காண ரூபாய் செலவிடப்படுகிறது.

ராம்லீலா மைதானத்தில் மழை, வெயிலை தாங்கும் இரண்டரை லட்சம் சதுர அடி அகலத்தில் பிரம்மாண்டமான பந்தல் கட்டப்படுகிறது. எட்டு அடி உயரமும், எழுபது அடி நீளமும் கொண்ட மேடையில் ராம்தேவ் உட்காருவார்.20 எல்.சி.டி ஸ்க்ரீன்களும், 1000 கூலர்கள், ஃபேன்கள் மாட்டப்பட்டுள்ளன.

இரண்டரை லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ராம் லீலா மைதானத்தில் 1000 கழிப்பறைகளும், 650 சிறுநீர் கழிக்கும் அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 100 படுக்கைகள் வீதமுள்ள சிறப்பு கூடாரங்களும் உள்ளன. ராம்தேவின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் பேனர்கள் டெல்லி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

ராம்லீலா மைதானத்தில் வருகைதரும் ராம்தேவின் ஆதரவாளர்களுக்கு தினமும் ஐந்து லட்சம் லிட்டர் சுத்தநீர் வழங்க ஏற்பாடுச்செய்யப்பட்டுள்ளது. போராட்டம் குறித்த செய்திகளை அவ்வப்போது தெரிவிக்க மூன்று டவர்கள் கொண்ட நவீனதொழில்நுட்ப மீடியா செண்டரும் உள்ளது.

எல்லா மருத்துவ வசதிகளையும் கொண்ட ஐ.சி.யு மைதானத்தில் உள்ளது.ஐம்பது ஆம்புலன்சுகள் உள்ளன.ஈவண்ட் மேனேஜ்மெண்ட் குழுமமும், ஆயிரம் வாலண்டியர்களும் உள்ளனர்.இதில் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்களாவர்.

ஆனால், ராம்தேவ் ஒருமாதம் முன்பு 5000 பேர் பங்கேற்கும் யோகா முகாம் நடத்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ராம் லீலா மைதானத்தை முன்பதிவு செய்துள்ளார். மாநிலத்திற்கு வெளியே இருந்து வருபவர்களுக்கு நடத்தும் யோகா முகாம் எனவும், முகாம் முடியும் வரை அவர்கள் இங்கு தங்கியிருப்பார்கள் என தெரிவித்ததாக டெல்லி செண்ட்ரல் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் விவேக் கிஷோர் அறிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதிலும் டெல்லி போலீஸ் மறுத்துவிட்டது.


Thoothu Online

மாவீரன் மருத நாயகம் வரலாறு 01

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. 1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது. காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.

கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!

ஊரும், பெயரும்

மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார். 1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்

சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.

மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம்

பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப்

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.

அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.

இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.

ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.

திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.

நிஜாம் – நவாப்?

இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.

யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.

வீரமும் – பரிசும்

மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது. ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

பொறாமை

இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட! இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.

சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்! கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர். திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!


தொடரும்… இன்ஷா அல்லாஹ்

எம். தமிமுன் அன்சாரி
சமுதாய ஒற்றுமை

ஆபாச எதிர்ப்பு பிரசாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்


 
 
POPULAR FRONT OF INDIA - MRF

இஸ்ரேல் : ஓநாய்களின் பள்ளத்தாக்கு

ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது

இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது திரைப்படம் வீடியோ

இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Valley of the Wolves Palestine

பழமைவாத அமைப்புகளும்… பலஹீனமான அரசியலும்…

தமிழ்நாடு,அஸ்ஸாம்,மேற்கு வங்காளம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்து அஸ்ஸாம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிய அரசுகள் பதவியேற்றுள்ளன…

இவற்றுள் கடந்த ஐந்து மாநில பேரவைகளிலும் மொத்தமாக 105 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருந்துள்ளனர். தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக 130 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர்… ஆக 25 முஸ்லிம்கள் அதிகமாக வென்று சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.

இவற்றுள் குறிபிட்டதக்கது மேற்குவங்கம் 34 ஆண்டுகால கம்யூனிச அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு செல்வி.மம்தாபானர்ஜி  அவர்களின் தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியை பெரும் வெற்றிபெற செய்துள்ளனர்.  294 தொகுதிகளைகொண்ட மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் 59 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர்… அஸ்ஸாம் மாநில தேர்தலில் முஸ்லிம்கள் 33 பேர் வென்று பேரவைக்கு சென்றுள்ளனர்… இதில் கடந்த முறை 9 இடங்களை வென்றிருந்த அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி இம்முறை 18 தொகுதிகளை வென்று பிரதான எதிர்கட்சியாக வளர்ந்துள்ளது… 140 தொகுதிகளைகொண்ட கேரளாவில் 36 தொகுதிகளை முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.. கேரளாவை தவிர்த்து அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகமான அளவில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் பெரிய அளவில் பொருளாதார பின்பலமோ சமுதாய அமைப்புகளின் பலமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…

ஆனால் பெரும் வீரியமிக்க அமைப்புகள் எல்லாம் வீதியெங்கும் கிளைகள் பரப்பிவிட்ட தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளின் சார்பாக 17 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றிருப்பது வெறும் 6 இடங்கள்தான் என்பது வெட்ககேடான விஷயம் அல்லவா…? எவ்விதமான பின்புலமும் இல்லாத மேற்குவங்க மற்றும் அஸ்ஸாம் முஸ்லிம்களால் வெல்லமுடிந்த அரசியல் அங்கீகாரத்தை ஏன் தமிழக முஸ்லிம்களால் வெல்லமுடியவில்லை…?!!!

காரணம் இருக்கிறது… என்னவெனில் அங்கெல்லாம் தமிழகத்தில் உள்ளதுபோல வீதிக்கொரு சமுதாய அமைப்புகள் இருந்து மக்களை பிளவுபடுத்தவில்லை… இளைஞர்களிடையே அமைப்புவெறியினை விதைத்து சந்திசிரிக்கும் சமுதாய சண்டைகள் இல்லை… அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லிம்லீக் மாநில முதல்வரையே நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது… ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு கட்சிக்கு கூஜாதூக்குவதையே புத்தியாக கொண்டுள்ளது… ஏன் இந்த இழிநிலை…???

கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் காலத்திற்கு பிறகு தமிழக முஸ்லிம்களின் அரசியல் என்பது கேலிக்குரியதாகவும்… கேள்விக்குறியதாகவும் மாறிப்போனதை மறுக்க இயலாது… 90 களின் துவக்கத்தில் தமிழக முஸ்லிம்களின் அரசியல் அங்கீகாரத்தை வென்றெடுக்க தனது வீரியமான உரைவீச்சுக்களால் இளைஞர்களை அணிதிரட்டினார் ஷஹீத் பழனிபாபா ஒரு காலகட்டத்தில் திமுகவுடனும் பின்னொரு காலகட்டத்தில் அதிமுகவுடனும் நெருக்கமான உறவு வைத்திருந்த பழனிபாபா அவர்களின் சமுதாய அரசியல் இரு பெரும் கட்சிகளுக்குமே தலைவலியை தந்ததால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு அவர் ஆளாகினார் பழனிபாபா அவர்களுடன் தொடர்பில் இருந்தாலே தாங்களும் கைது செய்யபடுவோம் என்கிற அச்சம் சமுதாய மக்களுக்கு ஏற்பட்டதால் அவரால் நிலையான அரசியல் கட்டமைப்பை நிறுவமுடியாமல் போனது…

ஷஹீத் பழனிபாபா அவர்களின் மறைவிற்குப் பிறகு தனது வீரியமான போராட்டங்களால் தமுமுக சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தது… தமுமுகவின் எழுச்சிக்குப் பிறகு தமிழகத்தில் பெருவாரியாக இஸ்லாமிய அமைப்புகள் முளைக்க ஆரம்பித்தது… அதுவரை சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து திரையரங்குகளில் தங்களின் வாழ்கையை தேய்த்துகொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சமுதாய அமைப்புகளில்  இணைந்து
பணியாற்ற துவங்கினார்கள்…

எழுச்சியான இலக்கை நோக்கி பயணிக்க துவங்கிய தமிழக முஸ்லிம் சமுதாயம் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை  ஈர்த்த முஸ்லிம்கள் தங்கள் உரிமைக்கான குரலை உயர்த்திய வேளையில் தமுமுகவில் இருந்து சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன் விலகி தனியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இயக்கத்தை ஆரம்பித்ததும் ஓரணியில் நின்ற இளைஞர்கள் பிளவுபட்டனர்… வீரியமாக அவர்கள் முன்னெடுத்து சென்ற சமுதாய பணிகள் சகோதர யுத்தங்களால் தேக்கம் கண்டது…

மறுமையிணையும் மார்கத்தையும் குர்ஆன்  ஹதீஸையும் போதித்த இயக்க தலைமைகள் இம்மைக்கு தேவையான அரசியலை கற்றுகொடுக்க தவறியது… இவர்கள் மார்கத்தையும் அரசியலையும் ஒன்றாக போட்டு குழப்பி வருவதால் நமது இளைஞர்களுக்கு தெளிவான அரசியல் பாதை தெரியாமலேயே இருந்து வருகிறது… இவர்கள் இங்கு ஆம்புலன்ஸ் அற்பனிப்புகளையும் ரத்ததான முகாம்களையும் நடத்திவந்த வேளையில் அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முஸ்லிம்கள் அரசியலை கையாள துவங்கிவிட்டார்கள்…இன்று அதிகாரத்தில் அமர்ந்துவிட்டார்கள்…

புற்றீசல்போல் பெருகிவிட்ட சமுதாய அமைப்புகள் நேரடி அரசியலை தவிர்க்கும் அதேவேளையில் மற்றவர்களின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட தயங்குவதில்லை… தனிமனித துதிபாடல் தனிமனித விமர்சனங்கள் இவைகள்தான் இன்றைய அமைப்புகளின் தலையாய கடமையாக பார்க்கப்படுகிறது… தலைமைகள் எட்டடி பாய்ந்தால் தொண்டர்கள் பதினாறடி பாய்கிறார்கள்… மற்றவரின் குறைகளை பறைசாற்ற… ஒவ்வொரு ஊர்களிலும் சமுதாய அமைப்புகளுக்கு அலுவலகம் இருக்கிறதோ இல்லையோ தனித்தனியாக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது… இவற்றால் ஏதாவது சமுதாய நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை மாறாக பகைமைதான் ஏற்பட்டிருக்கிறது… என்பதற்கு பல சான்றுகளை சொல்லலாம்…

ஊரெங்கும் பள்ளிவாசல்கள் கட்ட விரும்பும் அமைப்புகள் எங்காவது ஒரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் இல்லை… எந்த ஒரு சமூகத்தில் கல்வியாளர்கள் பெருகுகிறார்களோ அந்த சமூக மக்கள்தான் தன்னிறைவு பெற்ற மக்களாக உருவாக முடியும்…அதற்க்கான மிகப்பெரிய சான்று வன்னிய சமூக மக்கள் முஸ்லிம்களைவிட பலவகைகளில் பின்தங்கி இருந்த வன்னிய சமூக மக்கள் இன்றைக்கு பல்வேறு அரசுத்துறைகளில் கோலோய்ச்ச முடிகிறது என்றால் அவர்களில் கல்வியாளர்கள் பெருகியதுதான் காரணம்…இதனை ஏன் நமது சமுதாய அமைப்புகள் செய்ய தவறியது…?
 

தமிழக சமுதாய அமைப்புகளில் தமுமுக மற்றும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் தற்போது மமக எஸ்டிபிஐ போன்ற அரசியல் கட்சிகளை களமிறக்கி உள்ளது வரவேற்க்கதக்கது… இதில் மமக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வென்றிருப்பது தாமதமான நல்ல துவக்கம்… பன்முக தன்மைகொண்ட சமூக மக்கள் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்கள் விரும்பும் வகையில் அரசியலை இட்டுசென்றால்தான் வெற்றிகொள்ள முடியும் அதற்க்கான நல்ல உதாரணம் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி…

சமுதாய அமைப்புகளில் அங்கம்வகிக்கும் சமுதாய சொந்தங்கள் சுயசிந்தனையுடன் ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும்… உங்களின் பொருளாதாரம்… உழைப்பு… தியாகம் இவைகள் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பயன்பட்டுள்ளதா…? பழைமைவாதம் பேசக்கூடிய சமுதாய அமைப்புகளால் நமது அரசியல் எதிர்காலம் பலஹீனபட்டே உள்ளது… இன்றைக்கு நம்மில் சிந்தனைவளமிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உண்டு… இந்த சமுதாய அமைப்புகளால் எவ்விதமான நன்மையையும் சமுதாயம் அடையவில்லை என்கிறஉண்மையை உணர்ந்தும் ஊமையாக இருத்தல் நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம்… மௌன வலையை அறுத்து வெளியில் வரவேண்டும்… சரியான திட்டமிடளோடு பிற சமூக மக்களுடன் அரசியலை முன்னெடுத்தால் அஸ்ஸாமும் மேற்குவங்கமும் ஏன் கேரளாவும்கூட நமது வெற்றியை உதாரனமாக்கிகொள்வார்கள்…

இனியாவது உண்மையை மறைக்க முயலும் சமுதாய அமைப்புகள் சமுதாய நலனை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்… இல்லையெனில் எந்தஇளைஞன் உதிரத்தை உழைப்பாக்கி  தருகிறானோ…  எந்த இளைஞன் நீங்கள் சொல்வதற்கெல்லாம் சுயசிந்தனை இல்லாமல் தலையசைக்கிறானோ… அவன் கேள்விகேட்க ஆரம்பிப்பான்… அப்போது உங்களிடம் பதில்கள் இருக்காது… 

வேங்கை சு.செ.இப்ராஹீம்

பாவப்பட்ட கோடீஸ்வரன் பாபா ராம்தேவ்!

பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.

எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி, தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.

மக்களை ஏமாற்றி தான் சம்பாதித்த பணங்களை பாதுக்காத்து கொள்ள கொலைகாரர்களின் கூடாரமாகிய ஆர் எஸ் எஸ் இன் "யோக" ஆசிரியராகவும் மாறினார்.

ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இன்று உலகம் முழுவதும் தெரியக்கூடிய அஸ்தா டிவி சொந்தமாக உள்ளது.

தனித்திருந்து இருந்து தியானம் செய்ய என்று காரணம் சொல்லி  ஸ்கட்லாந்து உள்ள கும்ப்ரை என்ற தீவையே ரெண்டு மில்லியன் பவுண்டிற்கு விலைக்கு வாங்கினார்.

இதுவல்லாமல் நாற்பதுக்கு மேற்பட்ட யோக கேந்திரங்கள், ஐநூறு படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனைகள், யோக ரீசெர்ச் சென்டர்,  ஆயுர்வேத காலேஜ், ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை, ஏக்கர் கணக்கில் தோட்டங்கள்,  இப்படி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள்.

இவர் பயணம் செய்வது எல்லாம் சார்ட்டர் விமானத்திலும், ஹெலிஹோப்டரிலும்,  மட்டும்தான்! இவருடைய மருந்து கம்பனிகளில் தயாரிக்க கூடிய மருந்துகளில் மனிதர்களுடைய எலும்புகள் பயன்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் லேப் ரிப்போடுடன் கூடிய கம்ப்ளைன்ட்டை CPM உடைய பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும், அனுப்பி உள்ளார்.

இவருடைய மருந்து கம்பெனி மூலமாக எயிட்ஸ், கான்செர், போன்ற நோய்களுக்கு மருந்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி உள்ளார். யோக மூலமாக இந்த நோய்களை மாற்றலாம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துவந்தார்.

இதற்க்கு எதிராக இந்திய சுகாதார கட்டுப்பாடு நடவடிக்கை தொடக்கிய போது,  நான் அப்படி சொல்லவே இல்லை என்று மழுப்பினார். படிக்ககூட வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது,

என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று அகிலபாரதிய அகண்ட பரிசத் என்ற இயக்கம் பிரதமருக்கும்,  ஜனாதிபதிக்கும்,  கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பது தெரிந்த உடன் முதலில் அதை மறுத்து பகிரங்கமாக அறிக்கை வெளிவிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வங்கியில் உள்ள கள்ளப்பணத்தை வெளி கொண்டு வரும் நடவடிக்கையே தள்ளி வைத்து விட்டு,  இந்த சங்பரிவார சாமியார்களிடம் இருக்கும் கள்ளப்பணத்தை முதலில் வெளி கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசநல விரும்பிகள் எதிர் பார்க்கிறார்கள்.

இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் தான் லஞ்சத்தை ஒழிக்க அன்ன ஹசாரேவின் மாடலில் அரங்க பிரவேசம் செய்ய போகிறானாம். இந்திய ஹிந்துத்துவா பத்திரிக்கைகள், இயக்கங்களும் முன்னிறுத்தும் ஒரு மாயாவிதான் இந்த பாபா ராம் தேவ்.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.

SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம். இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.

புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.

கருத்துகள் இல்லை: