ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

வசூலித்த இடத்தில் தான் ஃபித்ராவை வினியோகிக்க வேண்டுமா?

வசூலித்த இடத்தில் தான் ஃபித்ராவை வினியோகிக்க வேண்டுமா?

கேள்வி: சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் தங்களது ஃபித்ராவை வசூல் செய்து தங்களது தாயகத்திற்கு அனுப்பி அங்கேயே வினியோகம் செய்யக் கூடாது, எங்கே வசூல் செய்யப்படுகின்றதோ அங்கேயே வினியோகம் செய்ய வேண்டும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு உங்களது விளக்கம் என்ன? அஷ்ரப் அலி, ஜுபைல்

 பதில்: அபூதாவூதில் இடம் பெற்றுள்ள ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் இவ்வாறு கூறி வருகிறார்கள்.

 இவர்கள் குறிப்பிடும் ஹதீஸுக்கும் வேலை நிமித்தம் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியச் சகோதரர்கள் ஃபித்ராவை சேகரித்து தங்களது நாடுகளுக்கு அனுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 முதலில் அந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை பார்ப்போம்.

حدثنا نَصْرُ بن عَلِيٍّ أخبرنا أبي أخبرنا إِبْرَاهِيمُ بن عَطَاءٍ مولى عِمْرَانَ بن حُصَيْنٍ عن أبيه أَنَّ زِيَادًا أو بَعْضَ الْأُمَرَاءِ بَعَثَ عِمْرَانَ بن حُصَيْنٍ على الصَّدَقَةِ فلما رَجَعَ قال لِعِمْرَانَ أَيْنَ الْمَالُ قال وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهَا من حَيْثُ كنا نَأْخُذُهَا على عَهْدِ رسول اللَّهِ  وَوَضَعْنَاهَا حَيْثُ كنا نَضَعُهَا على عَهْدِ رسول اللَّهِ

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களை ஜியாத் அல்லது கவர்னர் ஒருவர் ஸதகா பொருட்களை வசூலித்து வருமாறு அனுப்புகிறார். அவர் திரும்பி வந்த பொழுது, ‘(வசூலித்த) பொருட்கள் எங்கே?’ என்று இம்ரானிடம் கேட்டார். ‘(வசூலித்து) பொருட்களை கொண்டு வருவதற்காக அனுப்புனீர்களா? நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்று கூறினார். (நூல்: அபூதாவூது 1626)

 இந்த ஹதீஸில் அஸ்ஸதகா என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபித்ராவையும் குறிக்கும் ஜகாத்தையும் குறிக்கும். இமாம் அபூதாவூது அவர்கள் ஜகாத் என்ற கிதாபின் கீழ் இந்த ஹதீஸை பதிவு செய்ததோடு, ஃபித்ரா சம்பந்தப்பட்ட பாடங்களின் வரிசையில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதனால் நாம் நமது வசதிக்காக ஃபித்ராவோடு தொடர்புள்ளதாக கொள்வோம்.

 வசூலிக்கப்பட்ட இடத்தில் தான் ஃபித்ராவை கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸில் நேரடியாக சொல்லப்பட வில்லை என்பது முதல் விஷயம்.

 வசூலிக்கப்பட்ட இடம் என்றால் என்ன அளவு கோல்?, கிராமத்தில் வசூலித்ததை அந்த கிராமத்திலேயே கொடுக்க வேண்டும் என்பதா? நகரம், பெரிய நகரம், அல்லது நாடு என்று எடுத்துக் கொண்டு அந்தந்த இடங்களில் வினியோகம் செய்வதா?

 ‘நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்ற வாசகத்தில் வசூலித்த இடமும் வினியோகித்த இடமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை விளங்கலாம்.

 வாதத்திற்காக ஃபித்ராவை வசூல் செய்த இடமும் வினியோகித்த இடமும் ஒன்றே என்று வைத்துக் கொண்டாலும், வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பதை சட்டமாக ஏற்க முடியாது, ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிப்பவர்களிடம் கிராமப் புறங்களில் வசூலித்து மதீனாவிற்கு கொண்டு வருமாறு சொன்னார்கள். தேவையுள்ள முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் வழங்கினார்கள் என்ற வரலாற்றுச் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகிறது.

 இதிலிருந்து ஃபித்ராவை வசூல் செய்த இடத்திலும் வினியோகிக்கலாம் மற்ற இடங்களிலும் வினியோகிக்கலாம். ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

 ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகிக்க வேண்டும் என்று மதீனாவையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒரே இடமாக மனதில் நினைத்துக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால், இந்த சட்டம் குறிப்பாக சவுதியில் இருக்கும் அந்த நாட்டுப் பிரஜைகளுக்குத் தான் பொருந்தும். வேலை நிமித்தம் வந்துள்ள இந்திய பிரஜைகளுக்கு அது பொருந்தாது.

 பெரும்பாலான இந்தியர்கள் குடும்பத்தினரை பிரிந்து வந்து, சவுதியில் வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பம் என்றால் தாய், பிள்ளைகள், பெற்றோர்கள் என்று ஃபித்ரா கொடுக்க வேண்டியவர்கள் அதிகமானோர் இந்தியாவில் இருக்கும் போது, சவுதியில் வேலை செய்பவர் தனது ஃபித்ராவை இந்தியாவிற்கு அனுப்புவது தான் ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் சட்டமாகும்.

 இன்னொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

 ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த நோக்கங்கள் நிறைவேறும் அளவிற்கு ஃபித்ரா வினியோக முறை அமைந்திருக்க வேண்டும்.

بن عَبَّاسٍ قال فَرَضَ رسول اللَّهِ  زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ من اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ من أَدَّاهَا قبل الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ من الصَّدَقَاتِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 நோன்பாளிகளிடம் நேர்ந்து விட்ட சிறு தவறுகளுக்காகவும் வீணான பேச்சுக்களுக்காகவும் (நிவர்த்தியாகவும்), ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை கடமையாக்கினார்கள். யாரெல்லாம் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுத்து விட்டனரோ அது ஜகாத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்படும், தொழுகைக்கு பிறகு அவர் கொடுத்தால் அவர் ஸதகா செய்தவராவார். (நூல்: அபூதாவூது 1609, இப்னுமாஜா 1827)

 ஒன்று, நோன்பாளிகளிடத்தில் நேர்ந்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாக ஃபித்ரா விளங்குகிறது. அதாவது ஃபித்ரா நோன்பாளியை பாவங்களை விட்டும் பரிசுத்தப்படுத்துகிறது.

 இரண்டு, ஃபித்ராவின் மூலம் ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்ற செய்தியை நாம் குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து பெற முடிகிறது. அதாவது ஏழைகள் ஃபித்ராவை பெற்று பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற விஷயத்தை மற்ற ஹதீஸ்களிலிருந்து பெற முடிகிறது.

 நாம் இங்கே முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், நாம் வழங்கும் ஃபித்ராவின் மூலம் ஏழைகள் பலன் பெற வேண்டுமானால், ஏழைகள் அதிகமாக வாழும் நமது தாய் நாட்டுக்கு ஃபித்ராவை அனுப்புவது கட்டாயமாகும்.

 சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஃபித்ராவை பெற்று பெருநாள் கொண்டாடக் கூடிய அளவுக்கு, சவுதியிலுள்ள மக்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மக்களின் நிலை உள்ளது.

 அது மாத்திரமின்றி ஃபித்ரா பொருட்களை விற்கிறோம் என்ற பெயரில் ஒரு பெரும் வியாபாரக் கூட்டமும், அதை வாங்கும் ஏழைகள் நாங்கள் என்ற பெயரில் ஃபித்ரா பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இன்னொரு கூட்டமும் அமர்ந்திருப்பதை சவுதி போன்ற இடங்களில் தாராளமாகவே பார்க்க முடியும்.

 ஃபித்ரா பொருட்களை வாங்கி அருகில் அமர்ந்திருக்கும் ஃபித்ராவை வாங்குபவர்களிடம் கொடுத்தால் சிறிது நேரத்தில் அந்த ஃபித்ரா பொருட்கள் திரும்பவும் ஃபித்ரா பொருட்களை விற்பனை செய்பவரிடத்திலே வந்து விடுவதை கண்கூடாக பார்க்க முடியும். இங்கே நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஃபித்ராவின் நோக்கம் சிதைக்கப்படுவதை பார்க்க முடியும்.

 இதனாலும் நாம் நமது ஃபித்ராவை நமது தாயகத்திற்கு தான் அனுப்ப வேண்டும்.

 எல்லாவற்றிற்கும் மேலாக, சவுதியில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ ஏராளமாக அமைப்புக்கள் தாராளமாக உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜம்இய்யத்துல் பிர்ரிய்யா, ஜம்இய்யத்துல் ஹைரிய்யா போன்ற அமைப்புகள் ஏழைகளை தேடிச் சென்று ஏசி, ஃபிரிஜ் போன்ற அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கு ஃபித்ரா பொருட்களை கொடுப்பது என்பது பெரிய தமாஸாக போய் விடும்.

 ஃபித்ராவை வினியோகம் செய்வதற்கு நமது தாயகம் தான் மிக மிக பொருத்தமானது.

தொடர்புடைய ஆக்கங்கள்

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா?

கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா? . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

ஒரு நாள் நோன்பு நோற்கலாமா? (கேள்வி பதில்)

ஒருநாள் நோன்பு நோற்கலாமா? . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

நோன்பிற்கான நிய்யத் (வாஜிபு) எவ்வாறு செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்?

கேள்வி : நோன்பிற்கான நிய்யத் (வாஜிபு) எவ்வாறு செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வது (கேள்வி பதில்)

பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? என்ற கேள்விக்கு வழிமுறை என்பது இல்லை என கூறியுள்ளீர்கள். இங்கு உள்ள பள்ளிகளில் குறிப்பாக ரஹிமாவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தஃவா சென்டரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் (ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பள்ளி வெளி வாயிலில் வைத்து) வசூல் செய்து அதிலிருந்து தான் ஏற்பாடு செய்கிறார்கள். நோன்பு திறக்க தம்மிடம் வசதியிருந்தும் சில சகோதரர்கள் பள்ளிக்கு சென்று நோன்பு திறப்பதினால் அவர்களுக்கு வசூல் செய்யும் சுமை கூடுதலாகின்றது, இவ்வாறு செய்வது கூடுமா? விளக்கவும். (அப்துல் குத்தூஸ் – ரஹிமா, அராம்கோ மெயில் மூலமாக) . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? (கேள்வி-பதில்)

பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும், முன்னுரை: நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும். நோன்பை முறிப்பவை, 1. உண்பதும் பருகுவதும்: ‘இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்’ (அல்குர்ஆன் 2:187) ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம். . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

நோன்பு திறத்தல்

நோன்பு திறத்தல் முன்னுரை நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். . . . → மேலும்…
அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

ஸஹர் செய்தல்

ஸஹர் செய்தல், முன்னுரை, நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும். 1. ஸஹர் செய்வதன் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642) நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர் ஒருவர் வந்தார், ‘ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164) ‘நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643) ‘ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது) ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது 3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ. . . . → மேலும்…

கருத்துகள் இல்லை: