வெள்ளி, 30 செப்டம்பர், 2011

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம்

எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்!

விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.

இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.

அமெரிக்கா கதை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!

இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க்.

அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.

எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுத் தான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கல்கி வந்துவிட்டார்


பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி
ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்,
இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல.
இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு,
“பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும்.
இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது.. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.
இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.
1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.
2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.
3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது..
4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.
5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.
7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?
8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும்.
அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.
உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)ஆங்கிலத்தில் படிக்க

ஹஜ் செய்வது எப்படி

ஹஜ் செய்வது எப்படி

அல்லாஹ் சொல்கிறான்
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ;
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;.

அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)

பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)

ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)

இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)

ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்
1-தமத்து
2-கிரான்
3-இஃப்ராத்

1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது

2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது

3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது

தல்பியா (வாசகம்) கூறும் முறை:
அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)
(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)

ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்கை;க உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்

5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.

ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்

ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்
1- மீக்காத்தில் இஹ்ராம அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு
வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்

3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்

4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;

நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்

நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்

3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்

4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.

5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

- (இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக
(பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

-(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்)
முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

-(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா

நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும்

குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.

நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்

3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.

குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)

ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)
1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து

2-அரஃபாவில் தங்குவது

3-தவாஃபுல் இஃபாளா

4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது
மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்
2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்
3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்
4-முpனாவில் இரவு தங்குதல்
5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்
6-தவாஃபுல் விதா செய்தல்
7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்
மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது

ஹஜ்ஜின் சுன்னத்துகள்
1-இஹ்ராமின் போது குளித்தல்

2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்

3-தல்பியாவை உரத்து சொல்லுதல்

4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்

5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)

7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.

8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல்

மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை


இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று
1-முடியை வெட்டுவது

2-நகங்களைக் களைதல்

3-ஆண்கள் தலையை மறைத்தல்

4-ஆண்கள் தையாலடையை அணிதல்

5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்

6-பெண்கள் கையுறைகள் அணிதல்

7-பெண்கள் முகமூடி அணிதல்
- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,

8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்

9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில்
தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு
பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்

10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம்
ஒன்றும் இல்லை

11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது
மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்

இஹ்ராம் கட்டவேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)

எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்.

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ



ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்'
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.
ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்

'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

ஸயி செய்யும் முறைஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர்இ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தாஇ அன்ஜஸ வஃதாஇ வநஸா அப்தாஇ லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள்.
பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.

ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபாஇ மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும்இ நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும்இ நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்றுஎன்பதாகும்.

'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

கேள்வி..ஹஜ், உம்ரா செய்வது குறித்து?

கேள்வி - பிறருக்காக ஹஜ் செய்யலாமா... உஸ்மான் - யாஹூமெயிலில்,
ஹஜ், உம்ரா செய்வது குறித்து பல குர்ஆன் வசனங்களும் ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:146) இதே கருத்தை வலியுறுத்தி பல ஹதீஸ்கள் வந்துள்ளன.

அங்கு செல்வதற்குறிய, அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்கு சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (அல்குர்ஆன் 3:97)

இந்த வசனத்தில் யார் சக்தி பெறுகிறாரோ அவர் மீது கடமை என்கிறான் இறைவன். வெறும் பொருளாதாரம் மட்டுமின்றி வாகன வசதி, உணவு வசதி, உடல் நிலை சீராக இருப்பது போன்ற எல்லா சக்தியையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் அவர்மீது ஹஜ் கடமையாகும்;;;.
இத்தகைய வசதி இருந்தும் ஒருவர் ஹஜ் செய்ய முடியாமல் போய்விட்டால் அவருக்கு அவரது ரத்த பந்தங்கள் ஹஜ் செய்வது கூடும்.

இவ்வாறு பிறருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தம்முடைய ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுதான் பிறருக்கு ஹஜ் செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
ஒரு மனிதர் சுப்ருமாவிற்காக ஹஜ் செய்ய போகிறேன் என்று கூறியதை நபி (ஸல்) செவியுற்றார்கள். உடனே சுப்ருமா என்பவர் யார்? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர் என்றோ உறவினர் என்றோ கூறினார். உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் இன்னும் இல்லை என்றார். முதலில் உனக்காக ஹஜ் செய் பிறகு அவருக்காக செய் என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் , இப்னுமாஜா )

பிறருக்காக அதாவது ரத்தபந்களுக்காக ஹஜ் செய்ய என்னும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். உறவினருக்காக ஹஜ் செய்யலாமா? என்ற இரண்டாவது கேள்விக்குறிய பதிலும் இதில் அடங்கியுள்ளது. சகோதரர் என்றோ, அல்லது உறவினர் என்றோ... என்ற சந்தேக வார்த்தை இங்கு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் நாம் பெறக்கூடிய சட்டம் இறைவன் நமக்களித்த சலுகை என்றே கருத வேண்டும்.

மனைவிக்கா கணவன் ஹஜ் செய்யலாமா என்றால் ஹஜ் யார் மீது கடமை என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய சக்தி பெற்றிருந்தால் அவரை வீட்டில் உட்கார்த்திவைத்துவிட்டு கணவன் ஹஜ் செய்வது சரியில்லை. தேவையான ஆண் துணையுடன் மனைவி ஹஜ் செய்வதே முறையாகும்.

தாய் தந்தைக்கு ஹஜ் கடமையான நிலையில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது மரணித்து விட்டாலோ அவர்களுக்காக பிள்ளைகள் (பெண்பிள்ளைகள் உட்பட) ஹஜ் செய்யலாம். இதற்கு அவர்களின் அனுமதி பெறவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஜுஹைனா என்ற கோத்திரத்திலிருந்து ஒரு பெண் நபி(ஸல்) அவர்களை சந்தித்து என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அவர் மரணிக்கும் வரை ஹஜ் செய்யவே இல்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா? எனக்கேட்டார். அதற்கு நபி(ஸல்) ஆம் உன்தாயாருக்கு கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? அதைபோன்று இதையும் நிறைவேற்று என்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி)புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஸன்அம் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்கு ஹஜ் கடமை இருக்கிறது அவரால் ஒட்டகத்தில் சவாரி செய்ய முடியவில்லை என்று கூறினார். அவருக்காக நீ ஹஜ் செய் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)

ஹஸ்அம் கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதரே! என் தந்தை முதிர்ந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஹஜ் கடமை இருந்தும் அவரால் வாகனத்தில் ஏற முடியவில்லை அவருக்கு நான் ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். அவரது பிள்ளைகளில் வயதில் மூத்தவர் நீர்தானா? என நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். உம் தந்தைக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவாயா? எனக்கேட்டாரர்கள். அவர் ஆம் நிறைவேற்றுவேன் என்றார். அதே போன்று அவரது சார்பாக ஹஜ் செய்வாயாக என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அஹ்மத் - நஸயி)

இந்த ஹதீஸ்கள் முழுவதும் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை செய்யாத நிலையில் இருப்பவர்கள், மரணித்து விட்டவர்கள் இவர்கள் சார்பாக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்பதை விளக்குகிறது.

181 கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் - ஹாட்மெயில் வழியாக.
கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.

182 கேள்வி - பெண்கள் ஹஜ் செய்யும் முறை.... அப்துல் சாபுர் - யாஹூமெயில் வழியாக.
பெண்களின் ஹஜ்

இறைவனின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) போரிட தேவையில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமை என்று கூறி அதுதான் ஹஜ்ஜூம் - உம்ராவும் என்றார்கள். (ஆய்ஷா(ரலி) அஹ்மத் - இப்னுமாஜா)

சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமை என்ற வாக்கியத்தில் சக்திப் பெற்றுள்ள பெண்களும் அடங்கத்தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு பெண் சக்திப் பெற்றவளாக கருதப்பட வேண்டுமானால் அவள் கூடுதலாக ஒரு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அது பயணத்தில் இருக்க வேண்டிய ஆண்துணை.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய பெண் மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயண தொலைவிற்கு தந்தையுடனோ - கணவனுடனோ - சகோதரனுடனோ இல்லாமல் செல்லக் கூடாது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) நஸயி - இப்னுமாஜா)
தக்க ஆண்துணை இருந்தால் தான் பெண்களுக்கு ஹஜ் கடமையாகும்.
மாதவிடாய்
நபி ஸல் அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக அன்னை ஆய்ஷா ரலி அவர்கள் செல்கிறார்கள் வழியில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை அறிந்த நபி ஸல் அவர்கள் ' ஹஜ் உடைய எல்லா காரியங்களையும் செய், தூய்மையாகும் வரை கஃபத்துல்லாஹ்வை நெருங்காதே ' என்று கூறிவிட்டார்கள். இந்த கட்டளைப்படி ஆய்ஷா ரலி அவர்கள் கஃபத்துல்லாஹ்வை வலம் வரவுமில்லை, ஸபா மர்வாவில் ஓடவுமில்லை. மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடன் தன் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்துவந்து கஃபாவை வலம் வந்த செய்தி பிரபல்யமான ஹதீஸ் நூல்கள் எல்லாவற்றிலும் - குறிப்பாக புகாரியில் பல இடங்களில் - எண் 1556, 1650 - வருகின்றது.

182 a பெண்கள் உம்ரா மற்றும் ஹஜ்ஜில் முடியை சிறிது வெட்ட வேண்டுமா? சில பெண்கள் உம்ரா முடித்த உடன் முடி வெட்டுகிறார்கள்;. இவ்வாறு செய்யவேண்டுமா.? இதற்கு அனுமதி அல்லது தடை உள்ளதா.? ஜித்தாவிலிருந்து உம்மு யஹ்யா - யாஹூ மெயில் வழியாக.
தலைமுடி

ஹஜ் உம்ரா செய்பவர்கள் தலையை முழுவதுமாக மழித்து விடுவது அதிக ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். ஆனாலும் இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

பெண்கள் தங்கள் தலைமுடியை மழிப்பதை நபி(ஸல்) தடைசெய்துள்ளார்கள். (அலி(ரலி) திர்மிதி)
ஆண்களை போல் மழிப்பதற்கு தடையுள்ளதால் தங்கள் சடையிலிருந்து சிறிதளவு வெட்டி அந்த மார்க்க அடையாளத்தை பூர்த்தி செய்யலாம்.

தலையை மழிப்பது பெண்களுக்கு கிடையாது. குறைத்துக் கொள்வது அவர்களுக்கு போதும் என்பது நபிமொழி ( இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் - தாரகுத்னி)

உம்ரா மட்டும் செய்பவராக இருந்தால் முடியை குறைத்துக் கொள்வதுடன் உம்ரா நிறைவுக்கு வந்து விடும். ஹஜ்ஜையும் சேர்த்து செய்பவராக இருந்தால் மினாவில் ஜம்ரத்துல் அகபாவில் ஏழுமுறை கல்லெறிந்து பிறகு குர்பானி கொடுத்து விட்டால் அதன் பின் (ஆண்கள்) தலையை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இப்போது உடலுறவைத் தவிர இஹ்ராமின் மற்ற சட்டங்களிலிருந்து விடுபட்டு விடலாம்.

183 கேள்வி - ஹஜ் மற்றும்; உம்றா செய்வதற்கு முன்னால் களையும் அக்குள் முடிகளை இஹ்ராம் கட்டும் இடத்தில் தான் களைய வேண்டுமா அல்லது வீட்டிலிரூந்தே அதை செய்யலாமா? தயவு செய்து விளக்கவும். ஷேக் மீரான் - ஹாட்மெயில் வழியாக.
இஹ்ராம் என்பது அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடத்தை கடந்த பிறகு சில காரியங்களை செய்யக்கூடாது என்று தடுப்பதாகும். அந்தந்த எல்லையில் நின்றுதான் குளிக்கவேண்டும், முடி களைய வேண்டும், இஹ்ராம் துணி அணிய வேண்டும் என்பதல்ல சட்டம். வசதி வாய்ப்புகள் இருந்தால் தங்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே இவை அனைத்தையும் நாம் செய்துக் கொள்ளலாம். அந்த எல்லைகளை கடந்தப் பிறகு இவைகளை செய்யக் கூடாது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த எல்லைகளை அடையுமுன் எந்த இடத்திலும் இவற்றை செய்துக் கொள்ளலாம்.

184 கேள்வி - ஜம்ஜம் நீரை நின்றுகொண்டு, பிஸ்மில்லா சொல்லாமல் தான் குடிக்க வேண்டும் ஹாஜரா(அலை) அப்படித்தான் செய்தார்கள் என்று கூறப்படுவது உண்மையா? ஜம்ஜம் நீரை குடிப்பதற்கென்று விசேஷமான முறை எதுவும் உண்டா? ரிஸ்வான் அஹ்மத் - யாஹூமெயிலில்.
பொதுவாக உண்ணும் போதோ குடிக்கும் போதோ தலையை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை. தலை திறந்த நிலையில் சாப்பிடுவதில் எந்த குற்றமும் இல்லை. இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தலையை திறந்திருக்க வேண்டும் (ஆண்கள் மட்டும் தான்) என்பது சட்டம். எனவே அந்த நேரத்தில் தலை திறந்த நிலையில் தான் ஸம் ஸம் நீரை குடிக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் கைகளையும் தவிர மற்ற பாகங்களை இஹ்ராமில் மூட வேண்டி இருப்பதால் அவர்கள் தலை திறந்து ஸம் ஸம் நீரை குடிக்க முடியாது - குடிக்கக் கூடாது.

நின்று கொண்டு குடிக்க வேண்டும் என்றோ - பிஸ்மில்லா சொல்லாமல் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

185 கேள்வி - ஹஜ்ஜூக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா... போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா...? ஜின்னா - யாஹூமெயில் வழியாக.
நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் - தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதி. இந்த பொதுவான அடிப்படையில் - இந்த நோக்கத்திற்காக - ஹஜ்ஜை அறிவித்து உள்ளங்களை தூய்மைப்படுத்திக் கொண்டால் தவறில்லை. ஏனெனில் ஹஜ் செய்ய போகும் இடத்தில் மரணம் நிகழ்ந்து விடலாம். பிறகு இறைவன் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் மக்களிடம் பிழை பொருக்க சொல்லி விட்டு செல்லலாம். (பொதுவாக இது எல்லா பயணத்திற்கும் பொருந்தும்)

இதை விடுத்து இதர நோக்கங்களுக்காக ஹஜ் அறிவிக்கப்படுமானால் அது இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். இன்று பல ஊர்களில் இந்த நோக்கத்திற்கு மாற்றமாகத்தான் ஹஜ் விளம்பரப் படுத்தப்படுகிறது. போஸ்டர் அடித்து ஒட்டி ஏக - போக பந்தாவாக ஹஜ்ஜூக்கு கிளம்புவதை பார்க்கலாம். மக்கள் தனது ஹஜ்ஜை அறிந்து தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பரவலாக ஹஜ்ஜை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் தான் பூமாலையெல்லாம் போட்டு விழாக்கோலமாக்கப்படும். இந்த பந்தா - விழாக் கோலத்தின் பிரதி பலிப்புதான் ஹஜ் முடித்துவிட்டு வந்த பிறகு தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தவர் அல் ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வதாகும். (தனக்கு வரும் திருமண அழைப்பிதழில் ஹாஜி என்று போடாமல் வந்து விட்டால் அதற்காக சண்டைப் போடும் விளம்பர ஹாஜிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்)

இது முழுக்க - முழுக்க இஸ்லாமிய வணக்கத்திற்கும் அது எதிர்பார்க்கும் உள்ளத்தூய்மைக்கும் மாற்றமான செயலாகும்.

இறைவனுக்காக செய்யப்படும் அமல்கள் எது ஒன்றிர்க்கும் முழு உரிமையாளனும் அதற்கு கூலி கொடுப்பவனும் அவனேயாவான். இந்த அமல்கள் வேறு நோக்கங்களுக்காக செய்யப்பட்டால் அந்த அமல் இறைவனின் பார்வையில் வெறும் குப்பைக் கூளமாக்கப்பட்டு விடும்.
மக்கள் தன்னை பெரும் வணக்கசாலி என்று கூறி புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமல் செய்பவர்கள் நாளை நரகில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த புகழ் உலகிலேயே கிடைத்து விட்டது என்று இறைவன் கூறுவான் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள் (ஹதீஸ் சுருக்கம்) (முஸ்லிம்)

இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு காரியத்திற்கும் புகழுக்கான விளம்பரம் கூடாது என்று இந்த ஒரு நபிமொழியே எச்சரித்து விடுகிறது.

தினமும் தவறாமல் தொழும் ஒருவர் தன் பெயருக்கு முன்னால் 'முஸல்லி' என்று (உதாரணமாக 'முஸல்லி அப்துல் காதர்' அதாவது தொழுகையாளி அப்துல் காதர்) என்று போட்டுக் கொள்வதில்லை.
'நோன்பாளி அப்துல் அளீம்' என்று யாரும் தன் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தர்மம் செய்யும் ஒருவர் - ஜகாத் கொடுக்கும் ஒருவர் தன்னை 'கொடை வள்ளல்' என்று விளம்பரப்படுத்துவதும், ஹஜ் செய்தவர் தன்னை ஹாஜி என்று விளம்பரப்படுத்துவதும் (சில ஆலிம்?கள் உம்ரா செய்து விட்டு வந்து தன்னை உம்ரி என்றும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்) இறைவனுக்கு உகந்த செயல்தானா என்று விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

(நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)

'இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்' என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ - அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.

186 கேள்வி - ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்கிறார்களே இது கூடுமா...? ஜமால் - ஹாட் மெயில் வழியாக.

மீகாத் என்றால் எல்லை என்றுப் பொருள். ஹஜ் உம்ரா செய்யும் நோக்கோடு வெளியிலிருந்து மக்கா வருபவர்களுக்கு குறிப்பிட்ட எல்லைகளை இஸ்லாம் தீர்மானித்துள்ளது. அந்த எல்லைக்குள் நுழையும் போது இஹ்ராத்துடன் நுழைய வேண்டும். இஹ்ராம் இல்லாமல் நுழைந்தால் அவர்களால் ஹஜ்ஜோ - உம்ராவோ செய்ய முடியாது.

இவ்வாறு இஹ்ராம் பூண்டு உம்ராவை நிறைவேற்றினால் அந்த உம்ராவிற்குறிய எல்லை முடிந்துப் போய்விடும். அதாவது உம்ரா செய்வதற்காக ஒரு எல்லை வழியாக நுழையும் ஒருவர் உம்ராவை நிறைவேற்றி விட்டால் அதோடு அந்த எல்லைக்கும் உம்ராவிற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது. அவர் மீண்டும் உம்ரா செய்வதாக இருந்தால் மீண்டும் தனக்குறிய எல்லையிலிருந்து இஹ்ராத்துடன் வர வேண்டும். ஒரே இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்யலாம் என்றால் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது அர்த்தமில்லாமல் போய்விடும்.

சிலர் உம்ரா செய்து விட்டு மீண்டும் இஹ்ராம் கட்டுவதற்கு மக்காவிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஆய்ஷா மஸ்ஜித் என்ற பள்ளிக்கு சென்று இஹ்ராம் கட்டி வந்து அடுத்த உம்ரா செய்வதை பார்க்கிறோம். ஆய்ஷா பள்ளி என்பது இஹ்ராத்திற்குறிய இடம் தான் என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் அது பொதுவான எல்லையல்ல. வெளியிலிருந்து வரும் போது அந்தந்த எல்லையில் இஹ்ராம் கட்டி உள்ளே நுழைபவர்களுக்கு எதிர்பாராத தடங்கள் ஏற்பட்டு உம்ரா செய்ய முடியாமல் போய் இஹ்ராத்திலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவானால் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட இடமாகும் அது.

இஹ்ராத்துடன் உள்ளே நுழையும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. இந்த சந்தர்பத்தில் அவர்களால் கஃபாவை நெருங்க முடியாது. அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இஹ்ராத்திலிருந்து விடு பட வேண்டும். தூய்மை அடைந்ததும் ஆய்ஷா பள்ளி என்ற மீகாத் - எல்லைக்கு சென்று இஹ்ராம் ஆகி கொள்ளலாம். அதே போன்று இஹ்ராத்துடன் உள்ளே வருபரவர்கள் நோய்க்கு ஆட்பட்டு இஹ்ராத்திலிருந்து விடுபட்டால் அவர்களுக்கும் ஆய்ஷா பள்ளி தான் எல்லையாகும். குறிப்பாக சொல்லப் போனால் இஹ்ராத்துடன் உள்ளே நுழைபவர்கள் ஏதோ தடங்களால் உம்ரா செய்ய முடியாமல் இஹ்ராத்திலிருந்து விடுபடுகிறார்கள். இவர்கள் உம்ரா செய்ய இலகுவாக்கப்பட்ட எல்லைதான் ஆய்ஷா பள்ளி என்று அறியப்படும் 'தன்யீம்' என்ற இடமாகும்.
நான் இஹ்ராத்துடன் மக்கா வந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. என்னால் கஃபாவை நெருங்க முடியவில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உன் தலையை அவிழ்த்து சீவி ஹஜ்ஜூக்கு மட்டும் இஹ்ராம் கட்டு. உம்ராவை விட்டு விடு என்றார்கள். நான் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்துர் ரஹ்மானுடன் 'தன்யீம்' என்ற இடத்திற்கு என்னை அனுப்பினார்கள். அங்கு உம்ராவிற்காக இஹ்ராத்துடன் வந்து உம்ராவை முடித்தேன். (ஆய்ஷா(ரலி) புகாரி - திர்மிதி)

நாம் மேலே விளக்கியவற்றிர்க்கெல்லாம் இந்த ஹதீஸில் ஆதாரம் கிடைத்து விடுகிறது. இது தவிர ஒரு இஹ்ராமில் பல உம்ராக்கள் செய்வதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

''எவ்வளவோ தொலைவிலிருந்து வருகிறோம் எங்களால் மீண்டும் அந்தந்த எல்லைக்கு சென்று இஹ்ராம் அணிவது சிரமம் அதனால் ஆய்ஷா பள்ளிக்கு சென்று வருகிறோம்'' என்று சொல்லக் கூடிய மக்களைப் பார்க்கிறோம்.

ஒரு காரியத்தை செய்வதில் சிரமம் இருக்கிறது என்பதற்காக நாமாக ஒரு முடிவு எடுத்து அதன்படி செயல்பட்டு அதற்கு நியாயம் கற்பிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. சிரமத்திற்கேற்ற கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கா என்பது உம்ராவிற்கு மட்டும் கூலி கிடைக்கும் இடமல்ல. தவாபிற்கும் - தொழுகைக்கும் கூட அங்கு ஏராளமான கூலி கிடைத்து விடும். அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் தவாப் செய்யலாம் (தவாப் செய்வதற்கு எந்த தனி சட்டமும் இல்லை) எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம். அவரவர் எல்லைக்கு சென்று மீண்டும் இஹ்ராம் கட்டி வர முடியாதவர்கள் தவாப் - தொழுகை போன்றவற்றின் மூலம் நிறைய நன்மைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதால் இந்த வழியை தேர்ந்தெடுப்பதே அறிவுடமையாகும்.

'இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்' என்பதை ஒரு முஸ்லிம் ஒப்புக் கொண்டால் அவனின் அமல்களை விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டான் என்பதில் இரண்டாவது கருத்து வர வாய்ப்பே இருக்காது.
 

வியாழன், 29 செப்டம்பர், 2011

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு

September 27, 2011

துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
துளசி இலையில் உள்ள ‘ஆசிமம் சாங்டம்’ (ஞஸ்ரீண்ம்ன்ம் ள்ஹய்ஸ்ரீற்ன்ம்) என்ற சத்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
சர்க்கரை நோயால் இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சர்க்கரை நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்பத்தக்கூடியது.
விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்ர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையின் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறக்கப்பட்டதிருந்ததோடு, முக்கிய உடலுறுப்புகளான கிட்னிக்கள், மற்றும் லிவர் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி நிறைய பேசியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.
அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி

March 31, 2011

இந்திய நாட்டின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை – 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.
சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது. உலக மொத்த மக்கள் த‌ொகையில் இந்தியா 17. 5 சதவீதம் இந்தியாவில் வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் சீனா மக்கள் தொகை 19.4 சதம் ஆகும்.
5 நாட்டு மக்கள் தொகையை விட இந்தியா டாப்: மொத்தம் 74. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் பெண்களைவிட ஆண்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம். டில்லியின் வடகிழக்கு பகுதி மக்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். அருணாசல பிரதேசத்தில் டிபங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மிக குறைவாக வாழும் பகுதி ஆகும் என்றும் இன்றைய சென்சஸ் விவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

விஜயகாந்த் வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும் – நெப்போலியன்.

March 31, 2011

விஜயகாந்த் குறித்த அத்தனை விஷயமும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்லத் தொடங்கினால் நாறிப் போயிடும் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நடிகர் நெப்போலியன்.
திருக்கோவிலூரில் நடந்த திமுக தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
சினிமாவில் மார்க்கெட் போனதால், வேறு வழியில்லாமல் கட்சி துவங்கிய விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஜெயலலிதா. கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி அவர் மனைவி, மைத்துனரை வைத்து கட்சி துவங்கி விட்டார். குடும்ப அரசியலைப் பற்றி பேசும் விஜயகாந்த், குடும்பத்துடனே அரசியலை ஆரம்பித்து இருக்கிறார்.
இவரால் கல்லூரிக்கு கூட முதல்வராக முடியாது. அதற்கும் படிப்பு தகுதி வேண்டும். அப்படிப்பட்ட விஜயகாந்த் எல்லோரையும் கிண்டல் செய்கிறார்.
விஜயகாந்த் எங்காவது ஜெயலலிதாவை முதல்வராக்குவேன் என்று சொன்னாரா… இல்லை. ஏன் என்றால் அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இந்த அம்மாவோ அவரை எப்ப எட்டி உதைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பிக்கும் வரை மக்களை பற்றி சிந்திக்கவில்லை. படத்துல நடிச்சு முகம் வீங்கி போனதால படவாய்ப்பு குறைஞ்சது. அதுக்கு அப்புறம் கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி புதுசா கட்சி ஆரம்பிச்சார்.
இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் துணைத்தலைவராக இருந்தேன். இவரது வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும். அதை வெளியில் சொன்னால் நாறிவிடும்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாணவனை அடிப்பதுபோல் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிக்கிறார் என்றார் நெப்போலியன்.

தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த நாள் நினைவு நிகழ்வு

March 31, 2011
தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த நாள் நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி பேராயர் ஜெபநேசன் அடிகளாட்ர் மற்றும் தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினாகள், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாகிஸ்தானின் தோல்வியால் இருவர் மரணம்

March 31, 2011

இந்தியாவின் மொஹாலியில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அங்கு இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பெஸாவாரைச் சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரும், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருமே அவ்வணியின் தோல்வியினால் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பாகிஸ்தான் அடைந்த தோல்வியினால் அந்நாட்டு இரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3 சிப்பாய்களுக்கு மரண தண்டனை !

March 31, 2011
1996ஆம் ஆண்டு உரும்பிராயில் தமிழ் இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திக் கொலை செய்த இராணுவத்தினர் மூவ ருக்கு உயர் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யும் உரிமை குற்றவாளிகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
உரும்பிராயைச் சேர்ந்தவரான வெற்றி வேலாயுதம் ரஜனி அல்லது ரஞ்சனி என்ற 24 வயதான இளம் பெண்ணை கோண்டாவிலில் வைத்துக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தார்கள் என்று, இராணுவச் சிப்பாய்கள் மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்தமைக்காக மூவருக்கும் மரண தண்டனை விதித்த நீதியரசர்கள் கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்களுக்காக மேலதிகமாகச் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தனர்.
உரும்பிராயில் தமது மாமன், சகோதரனுடன் வசித்து வந்த ரஜனி, 1996 செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி காணாமற்போனார்.
கொழும்பு செல்வதற்கு ஆயத்தமான அவர், அது குறித்து உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்காக மானிப்பாய்க்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அவரைக் காணவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் தேடினர். பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. எனினும் இரு வாரங்களாக அவர் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அதன் பின்னர், சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த விவகாரத்தை குடாநாட்டு இராணுவத் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அப்போது தான் இராணுவத் தளபதியாகப் பொறுப் பேற்றுக் கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உடனடியாக விசாரணை நடத்தியதன் விளைவாக 13 நாள்கள் கழிந்து கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மலசலகூடக் குழிக்குள் இருந்து ரஜனியின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவச் சிப்பாய்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ். நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கு அப்போதைய காலச்சூழல் காரணமாகப் பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டது. அவர்களில் மூவருக்கே தற்போது மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது. இதனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பலர் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறைகளில் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலைச் சிறுமியான கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயும் அவர்களில் அடங்குவார்.

இராணுவத் தலையீடு அதிகம் அதனால் மக்கள் பயப்பீதியில்

March 31, 2011
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளதால் மக்கள் மத்தியில் பய உணர்வு இன்னும் அகலவில்லை என்று, நேற்று யாழ்.வந்த சர்வ மதக்குழுவினரிடம் தெரிவித்தார் அருட் திருபோல் நட்சத்திரம்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட சர்வமதக் குழுவினர் வடக்கு நிலைமைகளை நேரில் கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் வன்னிக்குச் சென்ற அவர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
அவர்களுக்கும் யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வமதக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நகரின் மத்தியில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் காணப்படும் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கு விளக்கப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த அமலமரித் தியாகிகள் சபையின் பகுதி முதல்வர்
போல் நட்சத்திரம் கருத்துத் தெரிவித்தார். “அமைதி என்பது வெளிப்படையாகக் காணப்படும் மௌனம் அல்ல. மனித உள்ளங்களில் அது அனுபவிக்கப்பட வேண்டும். சமாதானம் இருக்கும் இடத்தில் ஒற்றுமையும் ஒன்றித்த நிலையும் இருக் கும்; பயம் இருக்காது. ஆனால், போர் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த போதும் வடபகுதி மக்கள் பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது” என்றார் அவர்.
குடாநாட்டு மக்களின் குடும்ப, சமூக விவகாரங்களில்கூட இராணுவத்தினர் மூக்கை நுழைத்துத் தலையிடுவதே பயத்துக்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குடும்பச் சண்டைகளில் கூட இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்பதை அவர் அங்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
பயம் இருக்கும் இடத்தில் உண்மை, நேர்மை, புரிந்துணர்வு என்பன இருக்காது என்பதையும் அவர் ஆணித்தரமாக அங்கு எடுத்துரைத்தார்.
“நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்ற போதும் வடக்கில் மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் அமைதியினைச் சுவைக்கவில்லை” என்று அங்கு கருத்துத் தெரிவித்தார் ஊர்காவற்றுறை சென் மேரிஸ் பங்குத் தந்தை அருட்திரு சி.ஜி. ஜெயக்குமார்.
அமைதி ஏற்பட்டுவிட்டபோதும் மண்டைதீவில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் உள் ளனர் என்பதை அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
“அண்மையில் இளம் ஆசிரியர் ஒருவரின் மரணத்தில் சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆனால், அது தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்பு முகாம்களில் விசாரணை இன்றிப் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் திடீரென இறந்துள்ளனர். காரணம் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது தமிழ் மக்கள் எப்படி அமைதியை உணர, சுவைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அருட்தந்தை.
சிங்கள தமிழ் மக்கள் இடையே புரிந்துணர்வைக் கட்டி எழுப்ப பௌத்த மதம் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய பௌத்த பிக்கு ஒருவர், “30 வருடங்களாகப் போர் இடம்பெற்றுள்ளது. இப் போது அனைத்தும் 24 மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.

கடாபியின் சொத்துக்கள் ரூனிசியாவிலும் முடக்கம் !

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
கடாபி தனது சொத்துக்களை உலகத்தின் பல நாடுகளின் வங்கிகளில் போட்டு வைத்துள்ளார். என்றாவது ஒரு நாள் தனக்கு இந்த நிலை வரும் என்று கருதி அவர் செய்த முன்னேற்பாடுகளே இன்று அவருக்கு மிகப்பெரிய சவாலாக வந்துள்ளன. கடாபியின் சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ள நாடுகளில் முக்கியமானது லிபியாவின் அயல் நாடான ரூனிசியாவாகும். நேற்று அந்த நாட்டின் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பெய்சி கெய்ட் சப்ஜி தமது நாடும் கடாபியின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவித்தார். இதுபோல நாட்டில் உள்ள சொத்துக்களை எல்லாம் சுரண்டி ரூனீசியாவில் முதலிட்ட பல நூற்றுக்கணக்கான கடாபி குடும்பத்தினரின் சொத்துக்களும் உறைய வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். லிபியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தம்மால் செய்யக்கூடிய சிறிய சேவை இதுவென்றும் அவர் கூறினார்.
உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட பிரதான காரணம் உலகத்தின் முக்கால் பங்கு சொத்து சுமார் நூறுபேரிடம் போய்ச் சிக்குப்பட்டுவிட்டது. இது பொருளாதார கொள்கைகளை வகுத்தோர் விட்ட அடிப்படைத் தவறாகும். இன்று நடைபெறும் ஆர்பாட்டங்கள் இந்தச் சொத்துக்களை வேட்டையாடி வருகின்றன. உலகத்தின் இரண்டாவது பணக்காரரான பில் கேய்ட்ஸ் மூன்றாவது பணக்காரரான வாரன்பஃபேயை சந்தித்து உங்கள் சொத்துக்களை பொதுநல வாழ்வுக்கு செலவிடுங்கள் என்று சென்ற வாரம் கேட்டுக் கொண்டது இந்த அசைவின் ஓரங்கமாகவே இருக்கிறது. உலகின் முதலாவது பணக்காரர் கார்லோஸ் மெக்சிக்கோவில் இருக்கிறார். சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற அரசியல் பண முதலைகள் நிறைய உள்ளன. பொருளாதார மந்தம் என்ற பள்ளத்தில் இருந்து ஏறி வரும் அசுர தாகம் கொண்ட முதலைகளாக இந்த ஆர்பாட்டங்களும் போர்களும் உள்ளன.
வன்னிப்போரில் புலிகள் சேகரித்து வைத்த எண்ணற்ற கிலோ தங்கம், கோடான கோடி பணம், ஆயுதங்கள் யாவுமே அவர்களுக்கு எதிரிகளாக மாறின. கடைசியில் அவர்களுக்கு பயங்கரவாதி பட்டத்தைக் கட்டி அனைத்தையும் கொள்ளையிடவும் அதுவே காரணமாக அமைந்தன. வன்னியில் இருந்த சொத்துக்கள் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதும் இதுபோன்ற ஓர் அவலத்தின் விளைவே. அதேவேளை புலிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட இடங்களை நோக்கியும் இந்தத் தாகம் கொண்ட முதலை வரும். இன்றய உலகில் அளவுக்கு அதிகமான பொருளாதார பலமே அனைத்து அழிவுகளுக்கும் காரணமாக அமைகிறது.

ஆஸாட்டின் ஆசாடபூதித்தனம் மக்கள் கொதிப்பு !

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
சிரிய அதிபர் அஸாட் மக்கள் முன்னிலையில் உரையாற்றப்போகிறார், அவசரகால சட்டத்தை விலக்கப்போகிறார் என்று எதிர் பார்த்தவர்கள் வாயில் மண் விழுந்திருக்கிறது. சிரிய அதிபரின் வேடம் ஓர் உருத்திராட்சப் பூனை வேடம் என்று நேற்று முன்தினமே அலைகளில் எழுதியிருந்தோம். அதுபோலவே அவருடைய செயற்பாடும் இருந்தது.
மக்களுக்காக உரையாற்றிய அவர் 50 வருடங்களாக அமலில் இருக்கும் கிழடுதட்டிப்போன அவசரகால சட்டத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்தார். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி படுகொலைகள், ஆள்கடத்தல், உரிமைகளை கேட்போரை சிறையில் அடைத்தல் போன்ற கொடுஞ்செயல்களை சிரிய இராணுவம் செய்து வருகிறது. சிரிய அதிபர் ஆஸாட்டின் ஆசாடபூதித் தனமான ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பது அவசரகாலச் சட்டமே. அதை எடுத்தால் மக்கள் போராட்டம் வீதியில் பெருமெடுப்பில் இறங்கும் என்பது அவருக்கு தெரியும்.
அவருடைய பித்தலாட்டத்தனமான உரையைக் கேட்டு வேதனையடைந்த மக்கள் தமக்கு உரிமை வேண்டும் என்று வீதிகளில் கோஷமிட்டு சென்றனர். அவர்களை நோக்கி சிரிய இராணுவம் சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.
அண்ணன் அதிபர், தம்பி அடுத்த பெரியவர், இன்னொருவர் இராணுவத்திற்கு பொறுப்பு, பொருளாதாரத்திற்கு அடுத்த குடும்பத்தவர் என்று லிபியாவில் கடாபி தனது குடும்பத்தால் ஒரு நாட்டையே ஆட்சி செய்த அதே அவலமே சிரியாவிலும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லெபனான் பிரதமர் படுகொலை உட்பட பல குற்றச் செயல்களில் சிரியத் தலைமைக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆஸாட்டின் உரை ஜனநாயக ஆர்வலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெள்ளி தொழுகை முடிந்ததும் சிரியாவில் அடுத்த கட்ட ஆர்பாட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை தானும் மக்களை திரட்டி, ஆஸாட் பதவி விலகக்கூடாது என்ற போலி ஆர்பாட்டம் ஒன்றையும் இவர் ஒழுங்கு படுத்தியுள்ளார். மக்களுக்கு எதிராக மக்களையே கொம்பு சீவிவிட வசதியாக இவருக்கு முஸ்லீம்களிடையே உள்ள சியா – சன்னி பிரிவுகள் உதவியாக உள்ளன.

லிபிய போராளிகளும் மக்களும் நல்லுறவு – சற்லைற்

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
லிபிய போராளிகளும், அங்குள்ள பொது மக்களும் எவ்வாறு உறவாடுகிறார்கள் என்பதை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ கடந்த மூன்று வாரங்களாக அவதானித்து அதிபர் ஒபாமாவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன. லிபியத் தரையில் போராளிகள் பொதுமக்கள் உறவை பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப்போல சற்லைற்றுக்கள் அவதானித்துள்ளன. அதுபோல உளவாளிகளும் மக்களோடு மக்களாக நடமாடி உண்மை நிலவரத்தை சேகரித்துள்ளார்கள். 40 வருடங்களாக சர்வாதிகார ஆட்சியால் நொந்து நூலாகிப் போன மக்கள் அச்சம் காரணமாக தமது உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் போராளிகளுடைய வெற்றியை இதயத்தால் விரும்புகிறார்கள் என்பதையும் தமது குறிப்புரையில் வழங்கியுள்ளார்கள்.
இவற்றை எல்லாம் நன்கு பகுப்பாய்வு செய்த பின்னரே போராளிகள் கைகளில் ஆயுதம் இருக்கலாம் என்ற கொள்கைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.
இதுபோல..
வன்னியில் கடைசிப் போரின்போது நடைபெற்ற ஒவ்வொரு அசைவையும் அங்குல நிலப்பரப்பு மீதமில்லாமல் சற்லைற்றுக்கள் படம் பிடித்திருக்கும் என்பது தெரிந்த விடயமே. 2009 மே 17, 18ம் திகதிகளில் நடைபெற்ற கிளைமாக்ஸ் காட்சிகள் அமெரிக்க சற்லைற்றுக்களின் கைகளில் இருக்கும். ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வை, அது ஓர் அறைக்குள் நடந்தாலும் ஒட்டுக் கேட்கும் ஆற்றல் படைத்த செவ்வியல் சற்லைற்றுக்கள், உலக வல்லரசுகளையே வேவு பார்க்கும் எக்கோலக் சற்லைற்றுக்கள் யாவும் வானில் உலாவருகின்றன. எச்.டி. பிலிம் தரத்தில் வன்னிப்போரை சற்லைற்றுக்கள் பதிவு செய்திருக்கும். போரின் பின் புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தது, லாரிகளில் ஏற்றிச் சென்றது, பிணங்களை எரியூட்டியது, இந்திய இராணுவத்தின் பங்களிப்பு, சொத்துக்காக நடந்த சண்டைகள் என யாவும் உலகின் நீண்ட திரைப்படமாக இருக்கும். பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கும் பதில் அங்குதான் இருக்கும். லிபியா போராளிகள் மக்கள் உறவையே அவதானித்த சற்லைற்றுக்கள் வன்னியை மட்டும் சும்மாவா விட்டிருக்கப்போகின்றன.

செலக்டிவ் அம்னீசியாவில் சோனியாவும் சில ஈழத்தமிழர்களும் ச.ச.முத்து

March 31, 2011

பாவம் சோனியாகாந்தி!, போனவாரம் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னர் அவருக்கு சிறீலங்காவில் ஈழத்தமிழினம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது!
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் உரையாற்ற இங்கிலாந்து வருவதற்கு
முதல் அவருக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு நடைபெறும் எந்தவொரு
அநீதியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.பாவம் அவர்.1987முதல் 1989வரை
தமிழீழமண்ணில் கொடும் கற்பழிப்புகளும்,கொலைகளும் நடாத்தி காட்டாட்சி
செய்த இந்தியஅமைதிப்படையைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை
சரி அதைவிடுவோம்.அதற்குபிறகுதன்னும் இந்தியாவில் இருந்து கொண்டு
தமிழீழவிடுதலைப்போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்காக தமிழ்நாட்டிலும்
தமிழ்ஈழத்திலும் அரங்கேற்றப்பட்ட எந்தஒரு சதியும் இவருக்கு தெரியாமல்தான் – ரோ செய்திருக்கும்.
எல்லாவற்றையும்விட,2006 நடுப்பகுதிக்கு பின்னர் மாவிலாற்றிலிருந்து தமிழர்நிலங்
களை அபகரித்தபடி தமிழ்மக்களை கொன்றொழித்து முன்னேறிவந்த சிங்களப்
படைகளுக்கு ஆயுதஉதவிகளும்,ஆளணி,நிபுணத்துவ உதவிகள் எதுவும் பாரதம்
செய்ததும் இவருக்கு தெரியாமல்தான் நடந்திருக்கும்.கிளிநொச்சியை வீழ்த்தும்
போரின்போது இந்தியஜவான்கள் சிங்களப்படைகளுடன் கூட்டாக செயற்பட்டதும்
அதிலிருந்து முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைவரை அவர்களே நின்று செயற்படுத்தியதும் பாரதஅன்னை சோனியாவுக்கு தெரியாமல்தான் நடந்தி
ருக்கும்.
அதற்கு பின்னர்கூட புதியபுதிய அணிகள்மூலம் தமிழீழதேசியத்தை
சிதைக்க இந்தியா எடுத்துவரும் எத்தனங்கள் எதுவும் அவருக்கு தெரியாததுதான்.சிங்களபடைகளின் தற்போதைய கெடுபிடிகளுக்கும்,ராணுவஅடக்
குமுறைக்கும் எதிராக மக்கள் திரண்டெழுந்துவிடாமல் பெட்டிக்குள் வைத்திருப்ப
தற்காக அடிக்கடி இந்தியவெளியுறவு செயலர் நிருபமாராவ் சென்றுவருவதும்
சோனியாவுக்கு தெரியாமல் வெளியுறவுஅமைச்சர் கிருஸ்ணா தனது எண்ணத்தின்
படியே செயற்படுத்தும் திட்டங்கள்தான்.பாவம் சோனியா,அவருக்கு ஏதேனும் ‘செலக்டிவ் அம்னீசியா’இதுநாள்வரைக்கும் இருந்திருக்கலாம்.அதாவது ஒரு குறிப்பிட்டவிடயங்கள்மட்டுமே மறந்துவிடுகின்ற வியாதிமாதிரி ஏதேனும் இருந்திரு
க்கலாம். இப்போது அவருக்கு சிவசங்கர் மேனனையும்,நாராயணணையும்கூட
மறந்திருக்கும்.
பாவம் சோனியா. பேரப்பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுக்கும் மந்திரி
பதவி யாசிப்பதற்காக டெல்லிக்கு ஓடியோடி வந்த கலைஞர் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் விடுதலைப்போராட்டமும் சிதைக்கப்பட்ட
பொழுதும், தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோதும் இருந்த இடத்தில் இருந்தபடியே
ஏழுதி அனுப்பிய கடிதங்களைக்கூட சோனியா அம்மா மறந்திருப்பார்.
இப்படியாக எதுவுமே தெரியாத சோனியா அண்மையில் இங்கிலாந்து வந்தபோது
தான் அவருக்கு ஈழத்தமிழர்கள் என்றொரு இனம்இருப்பதும், அவர்களை மகிந்த என்றொரு கொடுங்கோலன் அழித்துவருவதும் தெரிந்திருக்கின்றது என்பதுபோல
அறிக்கைகளும்,பேட்டிகளும் அண்மைக்காலத்தில் முளைத்துள்ளன.
பலம் எதுவுமே இல்லாமல் வெற்று இராசதந்திரம் மட்டுமே செய்ய வெளிக்கிட்ட
ராசதந்திரப் பெருமான்கள் இதற்கும் ஏதேனும் இராசதந்திர நொக்கத்தையும்,
இதற்கு பின்னுக்கு யாருக்கும் தெரியாத (குறிப்பாக சாதரணமக்களுக்கு புரியாத
ஏதேனும் ஈழத்துவிடுதலை ரகசியம்)ஏதோ ஒரு பகடையாட்டம் இருப்பதுபோன்ற
வெற்று மௌனத்தையும், காரணங்களையும் கற்பிக்கலாம்.
இதற்குபின்னுக்கு இருக்கும் ஏதோ பெரிய நோக்கங்கள் எதுவுமே இருக்கமுடியாது.
எமது மக்கள்மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய
பங்குதாரர்கள் இந்தியஆளும் வர்க்கம்தான். பெயருக்கு இந்த இறுதிப்போரை
சிங்களம் நடாத்தினாலும் இதற்கு சகல திட்டமிடல்களையும், ஒத்துழைப்பையும்
வழங்கி நேரடியாக நின்றது பாரதம்தான். இதன் பாதிப்பு இன்று இல்லாவிட்டாலும்
என்றாவது ஒருநாள் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தோன்றக்கூடும் என்று இந்தியமத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
அதனை தடுத்துநிறுத்துவதற்காகவும்,ஈழத்துமக்களே எங்களை புரிந்துகொண்டு
இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டுதமிழர்களுக்கு காட்டவேண்டிய தேவையும்
காங்கிரஸ்ஆட்சிக்கு தேவையாக இருக்கிறது.யுத்தம் மிகமோசமாக முள்ளிவாய்க்காலின் கரையெங்கும் நடந்து கொண்டிருந்த போதே இதற்கான வேலைகளை இந்திய வெளியுறவு அமைச்சும், இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான ரோவும் செயற்படுத்த தொடங்கிவிட்டிருந்தார்கள்.
தேசியத்தலைவர் ஆழமாக ராசதந்திரம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்
டு 2009 மே 18க்கு பின்னர் புறப்பட்டிருக்கும் கனவான்வான்களில் சிலர் முள்ளிவாய்க்கால்ப் பொழுதுகளில் சிவசங்கர் மேனனுடனும், விஐய்நம்பியாருடனும்
கூட்டாக நின்று புகைப்படங்களுக்கு முகம்காட்டியதும் இதன் ஆரம்பம்தான்.
2009 மே யில் ஈழத்தமிழினம் பிய்த்து எறியப்பட்டு ஆறுமாதங்கள் முடிய முன்னரே
2009 இறுதியில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி சென்ற இன்னுமொரு இராசதந்திர
தமிழர் அங்கு இந்தியாவின் இளவரசர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்து
வந்திருந்தார்.
இராகுல்காந்தியின் உடம்பில்ஓடும் ரத்தத்துக்குகூட அந்த இங்கிலாந்துதமிழ் பிரமுகர் ‘அது உண்மையிலேயே ஐரோப்பியரத்தம்தான் என்றும் சான்றிதழ்கூட கொடுத்தும் இருந்தார். ஏனென்றால் இவர் சொன்ன ஈழத்தமிழம்மக்களின் அவலங்களை எல்லாம் ராகுல்காந்தி மிகவும் கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். இன்று சோனியாவுக்கு இங்குசில தமிழர்கள் கொடுக்கும் அதே சான்றிதழான ‘எங்கடை பிரச்சனைகளை அவர் மிக அனுதாபத்துடனும்,மிக அவதானத்துடனும் கேட்டுத்தெரிந்து கொண்டிருந்தார் என்பதன் ஆரம்பம் அடிபணிவுஅரசியல்தான் இனிமேல் என்று ஒருசிலர் முடிவு எடுத்தபோதே முளைவிட்டுவிட்டது.
சோனியாகாந்தியும் கொஞ்சமும் குறைந்தவர் இல்லைதான்.அவரை ஒரு ஏதும் தெரியாத,எல்லாம் மறந்துபோன கஜனிபட சு10ர்யாபோல புலம்பெயர்தமிழ் மேத்தி
ரிகள் வர்ணிக்கிறார்கள்.அவரும் அதற்கு ஏற்றாற்போல,தனக்கு ஏதோ இவர்கள்
விளங்கப்படுத்துவதற்கு முன்னர் ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்கள் ஏதும்
புரிபட்டு இருக்கவில்லை என்பதபோல,இப்போதுதான் சிதம்பரசக்கரத்தின் முடிச்சுகள் அவிழ்ந்தது போலவும் தான் ஈழத்தமிழர்களின் பக்கத்திலேயே நிற்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.
இதில் மிகவேடிக்கையான விடயம் என்ன வென்றால் சந்திப்பு நடந்ததாக இருதரப்பும் சொல்லும் 11நிமிடங்களுக்குள் நமது புலம்பெயர் ராசதந்திரிகள் தமது விளக்கங்களை சொன்னதும்,அந்த 11 நிமிடங்களுக்குள் சோனியா மிக இலகுவாக அவற்றை கிரகித்துக்கொண்டதும் ஆகும். தமிழர்களின் 60வருட விடுதலைப்போராட்டத்தை 11 நிமிடங்களுக்குள் சொல்லிப்புரியவைக்க இவர்கள் மிகவும் கஸ்டப்பட்டிருப்பார்கள்.
இந்த சந்திப்பு இரகசியமானது என்று நம்ம புத்திமான்களும், இந்த சந்திப்பின்
வுpடயங்கள் வெளியே தெரியப்படுத்த முடியாதது என்று நமது புலம்பெயர் டிப்லோமற்றிகுகளும் சொல்லிக்கொண்டும், பேட்டிகளில் முழங்கிக்கொண்டு இருக்கும்போதே இந்தியாவின் ஊடகங்களில் ஈழத்தமிழர்கள் சோனியாவை
ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் ஈழத்தமிழர்களின் மனங்களை சோனியா
வென்றுவிட்டார் என்றும் செய்திகள் முன்பக்கத்தில் வெளியிட்டபிறகும்கூட
இந்த சந்திப்பு சோனியாவுக்கு எந்தவித்தில் உதவுவதற்காக அமைக்கப்பட்டு
விட்டதை இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.
அண்மையில்கூட விக்கிலீக்ஸ் இன்னுமொரு உண்மையை வெளியிட்டு இருந்தது.சிங்களம் நடாத்திய கொடும்தாக்குதல்களை நிறுத்தும்படி இறுதிநேர
த்தில் மேற்குநாடுகளும், லத்தீன்நாடுகளும் கொடுத்த ராசதந்திர நெருக்கடிகளை
சாந்தப்படுத்தி, இறுதிவரை தாக்குதலை நடாத்த இந்தியவே உதவியது என்று
சுட்டிக்காட்டியுள்ளது. ஓன்றை இவர்கள் தெளிவாக புரிpந்துகொள்ளவேண்டும். தமிழீழவிடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு 80களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன் என்ன செய்தாரோ, இப்போது லோக்கல் அதிகாரி ஜாபர்சேட் என்ன செய்துகொண்டு இருக்கிறாரோ அதனை எல்லாம் தீர்மானிக்கும் சக்திதான் சோனியாவும் அவரின் ஆளும்கட்சியும்.
இந்தியாவின் கைப்பொம்மை முதல்வர் வரதராசப்பெருமாளை ஒரிசாவில் தங்க
வைத்து இருந்ததும்,இப்போது பரந்தன்ராஜனை சாணைதீட்டுவதும் இதே சோனியாவின் அதிகாரவர்க்கம்தான். யுத்தத்தை நிறுத்தும் இறுதி ஆயுதமான ஐநா சபையின் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் சிங்களத்துக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தை இல்லாமல் செய்ததும் இதே சோனியாதான்.
அண்மையில் தென்சு10டான் சர்வசனவாக்கெடுப்பில் விடுதலைபெறுவத உறுதியான
போது தமிழீழத்தின் அச்சுவேலிப்பகுதியை சேர்ந்த ஒரு கவிஞர் உதயன் பத்திரி
கையில் எழுதியிருந்த கவிதையின் ஒரு வாசகத்தை இப்போது சோனியாவுக்கு
ஒன்றும்தெரியாத உத்தமர் என்று சான்றிதழ்கொடுக்கும் பெருமான்கள் திரும்பதிரும்ப வாசித்துபார்க்கட்டும்.
ஒற்றைத் தாலிக்காய்
ஒருலட்சம் தாலிகேட்ட
இத்தாலிக்காரி எவளும்
இருக்கவில்லையா
உனக்கிடைஞ்சலாய்..?

குர்ஆனில் சிலந்தியின் வீடு

குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இ;தன் மூலம் நிரூபணமாகிறது.

புதன், 28 செப்டம்பர், 2011

சிறுநீரகம்உலகத்திலேயே மிகச் சிறந்த "ஃபில்டர்'

சிறுநீரகம்

இறைவனின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமாவை. மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் விஷயங்கள் எத்தனை எத்தனை! மனித உடலின் இயக்கமும் அப்படித்தான் நம்மை வியக்க வைக்கிறது. அவரை விதை வடிவத்தில், சிறிதாக இருக்கும் சிறுநீரகம் (Kidney) தான் என்னவெல்லாம் செய்யுது.
உலகத்திலேயே மிகச் சிறந்த "ஃபில்டர்' சிறுநீரகம்தாங்க. ஒரு நிமிஷத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது. உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து சம அளவில் இருக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. அமில - காரத் தன்மையின் சமநிலையைக் காக்கிறது. இவ்வளவுக்கும் மேல ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குப் பயன்படுதுங்க. சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாய்ட்டின் (Erythopoietin) என்ற ஹார்மோனை சிறுநீரகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் குறை வரும்போது ரத்தசோகை ஏற்படுது.
இந்த நன்மை எல்லாம் கிட்னி செய்யுது, சரி, இதெல்லாம் செய்யாமப் போனால் என்ன நடக்கும்? அங்கதாங்க பிரச்சினையே ஆரம்பிக்குது! ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் ரத்தம் அசுத்தமாக இருக்கும். தேவையற்ற உப்பு, தாதுப்பொருள்கள் உடலில் பெருகும். இதனால் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்படும். இறுதியில் உடல் சமச்சீர் நிலையை இழந்து மரணம் ஏற்படும்.
இதுல வேடிக்கை பாருங்க, நம்மில் பலருக்கு சிறுநீரகம் எங்க இருக்குதுனே தெயாதுங்க. இனப்பெருக்க உறுப்புதான் சிறுநீரகம் எனத் தவறாக எண்ணுபவர்கள் பலர். இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். அதன் எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம். சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு ரொம்ப முக்கியமுங்க. அளவு குறைந்தோ அல்லது கூடியோ இருந்தால் சனி பிடித்துவிட்டான் என்று எண்ணிக் கொள்ளவேண்டியதுதான். ஏதோ ஒரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
புதிதாகப் பொருத்தப்பட்ட மாற்றுச் சிறுநீரகம் :

இதயம் எப்படி உடலின் ஆதார சுருதியாக உள்ளதோ அதுபோல் சிறுநீரகத்தின் ஆதார சுருதியாக இருப்பது ரத்த வடிகட்டிகள்(Nephrons)தான். இந்த வடிகட்டிகள் செயல்படவில்லையெனில் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என, இரண்டிலும் சேர்த்து மொத்தம் 20 லட்சம் வடிகட்டிகள் உள்ளன. இந்த வடிகட்டிகள் சல்லடை போன்றது. இதற்குள் பாய்ந்து வரும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி, சுத்தமான ரத்தத்தை மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது. எஞ்சிய கழிவுகள் சிறுநீர்ப் பையில் சேர்ந்து பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த வடிகட்டிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
சிறுநீரகப் பாதிப்புன்னா என்னங்க? நம் நாட்டைப் பொருத்தவரை உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்குத்தாங்க சிறுநீரகம் ரொம்ப பாதிக்குது. இந் நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிறுநீரகப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் இருந்தா என்னவாகும்? ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தா அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ரத்தக் குழாய்கள் சேதமடையும். ரத்தக் குழாய் சேதமடையும் போது சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகள் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு ஓரு நாள்களில் நடந்துவிடாது. பலர் தங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பதே தெயாமல் விட்டுவிடுவார்கள். நாளடைவில் சிறுநீர் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு, வடிகட்டிகளும் சேதமடையும்.
சர்க்கரை நோய் :  
சர்க்கரை நோயாளிகளுக்கும் இதே போலத்தான். ரத்தத்தில் சர்க்கரை அதிகக்கும்போது ஒருவித நச்சுப் பொருள் உருவாகிறது. இந்த நச்சுப் பொருள் ரத்தக்குழாய்களைச் சேதப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக ரத்தத்தை வடிகட்டும் சிறுநீரக வடிகட்டிகளும் சேதமடைகின்றன.
கிருமித் தொற்று :  
சிறுநீர்ப் பாதையில் தொற்றுக் கிருமிகள் தாக்கும்போது உடனே உய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் இதை அசட்டை செய்து விடுவார்கள். நாளடைவில் கிருமிகள் சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகளைப் பதம் பார்த்துவிடுகின்றன.
சிறுநீரகக் கற்கள் :

சிறுநீரகப் பாதிப்புக்கு மற்றொரு முக்கியக் காரணம் சிறுநீரகக் கற்கள். கற்கள்ன்னு சொன்னா ஏதோ அசி, பருப்புலே கிடக்கும் கல்லுனு நினைச்சுராதீங்க. உடலில் இயற்கையாக உருவாகும் ரசாயனப் பொருள்கள், சிறுநீரகம் அல்லது சீறுநீரகக் குழாயில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து கல்லா மாறிடுது. கல் உருவானால் சிறுநீர் வெளியேறுவது தடைபட்டு நாளடைவில் சிறுநீரக வடிகட்டிகள் பாதிக்கப்படும். இது தவிர வலி மாத்திரைகளைச் சாப்பிடுவது, சிலருக்கு மரபு ரீதியான பிரச்சினைகளாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு.
அறிகுறிகள் தெயாது :  
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடனடியாக எந்த அறிகுறியும் தெயாது. இதனால்தான் பலர் ஏமாந்து போறாங்க. ஆரம்பத்திலேயே தெயாம போறதுனால சிறுநீரகங்கள் செயல்திறனை இழந்து டயாலிசிஸ் (செயற்கை முறையில் கழிவுகளை அகற்றுவது) செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறுதியில் வேறு வழியில்லை என்ற நிலையில் மாற்று சிறுநீரகத்தைத் தேட வேண்டியதாகிறது.
அறிகுறிகளை எப்படித் தெரிந்துகொள்வது ?  
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். பசி இருக்காது. உடல் சோர்ந்து போவதுடன் எரிச்சல் ஏற்படும். கை, கால் மூட்டு அல்லது கணுக்காலில் வீக்கம் தோன்றும். ரத்த அழுத்தம் அதிகக்கும். ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி குறைவதால் ரத்தசோகை வரும். வாந்தி, பசியின்மை போன்றவை வேறு காரணங்களாலும் வரலாம். என்னமோ ஏதோ என அலறவேண்டாம். சிறுநீரகத்தில்தான் பாதிப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய சிறுநீர்ப் பசோதனை செய்வது அவசியம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட 6 மாதத்துக்கு ஒரு முறை சிறுநீர்ப் பசோதனை செய்து கொள்வது நல்லது.
மைக்ராஸ்கோப் மூலம் :  
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எளிய பசோதனை மூலம் முன்கூட்டியே கண்டுபிடித்துவிட முடியும். அதாவது சிறுநீல் புரதம் (ஆல்புமின்), சர்க்கரை, அதிகமாக இருந்தால் உஷாராகிவிடுங்கள். உடனடியாக சிறுநீரக சிறப்பு மருத்துவடம் சென்றுவிடுங்கள். "ஆல்புமின் ட்ரேஸ்' என்று இருந்தால்கூட அலட்சியப்படுத்தி விடக் கூடாது. மருத்துவன் ஆலோசனைப்படி சிகிச்சை தேவையா - இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்.

சிறுநீரை மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால் Cast என்ற பொருள் தெரியும். அதாவது சிறுநீரக வடிகட்டிகளின் செதில்கள் (இச் செதில்கள் பாம்பு தோல் உரித்ததுபோல் இருக்கும்.) சிறுநீல் இருந்தால், பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்ற முடிவுக்குவந்துவிடலாம்.
அதற்கு மேல் தேவைப்பட்டால் ரத்தப் பசோதனை மூலம் சிறுநீர்ப் பாதிப்பை உறுதி செய்துவிடலாம். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் ரத்தத்தில் பொட்டாஷியம் அதிகமாகவும் கால்ஷியம் குறைவாகவும் இருக்கும். சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கழிவுப் பொருள்கள் உடலில் வெளியேறாமல் இருந்தால் என்னவாகும். உடல் நிலை சீர்குலைந்து விரைவில் மரணம் ஏற்படும்.
டயாலிசிஸ் :
இந் நிலையில் சிறுநீரக வடிகட்டிகள் செய்த வேலையைச் செயற்கையான கருவி மூலம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவி மூலம் செயற்கை முறையில் கழிவுகளை வெளியேற்றுவதுதான் டயாலிசிஸ் ஆகும். டயாலிசிஸ் இரு வகைப்படும்.

ஹீமோடயாலிசிஸ், பெடோனியல் டயாலிசிஸ் என இரு வகை டயாலிசிஸ் உள்ளன. இரு வகை டயாலிசிஸ்களிலும் நிறை, குறைகள் உள்ளன.
ஹீமோடயாலிசிஸ் :  
ஹீமோடயாலிசிஸ் முறையில் சிறுநீரகம் செய்ய வேண்டிய பணியை டயாலிசிஸ் இயந்திரம் செய்யும். நோயாளியின் ரத்தம் இந்த இயந்திரம் வழியாகச் செலுத்தப்படும். அங்கு ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமான ரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படும். இந்த டயாலிசிஸ் முறையில் உடல் முழுவதும் உள்ள ரத்தத்தைச் சுத்திகக்க 4 மணி நேரம் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டியதிருக்கும்.

ஹீமோடயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர்க் கட்டுப்பாடு உண்டு. டாக்டன் ஆலோசனைப்படி என்ன சாப்பிடலாம் எவ்வளவு சாப்பிடலாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். தொடர்ந்து ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிக்கு "ஃபிஸ்டுலா' என்ற சிறு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். இந்த அறுவைச் சிகிச்சையில் நோயாளியின் கையில் உள்ள சிரையும் தமணியும் இணைக்கப்படும்.
பெடோனியல் டயாலிசிஸ் :  
ஹீமோடயாலிசிஸில் முறையில் இயந்திரம் வழியாக ரத்தம் செலுத்தப்பட்டு சுத்திகக்கப்படுகிறது. ஆனால் பெடோனியல் டயாலிசிஸில், சுத்திகப்பு உடலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.

ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் டயாலிசிஸ் செய்து நீண்டநாள்கள் உயிர் வாழ வைக்க முடியும். ஆனால் அடிக்கடி டயாலிசிஸ் செய்வது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும். நீண்ட நாள்கள் டயாலிசிஸ் செய்வது நடைமுறைக்கு ஒத்துவராது.
எனவே சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு நிரந்தரத் தீர்வு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதுதான்.
மாற்று சிறுநீரகம் :

யங் எய்ட் கருவி போல கடையில் வாங்கிப் பொருத்தக்கூடியது அல்ல சிறுநீரகம். விபத்து உள்பட வேறு சில காரணங்களால் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவன் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்துவதே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. ஆனால் நம் நாட்டைப் பொருத்தவரை மூளை இறப்பு மூலம் சிறுநீரகம் தானம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
நெருங்கிய உறவினடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்துவதுதான் தற்போது அதிகமாக நடைமுறையில் உள்ளது.
ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு மட்டும் உயிர் வாழ முடியும். எனவே நெருங்கிய உறவினர் ஒருவன் ஒரு சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து நோயாளிக்குப் பொருத்தலாம்.
சிறுநீரமகத்தைத் தானம் கொடுப்பவர் முதலில் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாதவராக இருக்கவேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் இருக்கக்கூடாது. சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகத்தில் கிருமித்தொற்று இருக்கக்கூடாது.
எனவே தானம் கொடுப்பவன் சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை ரத்தப் பசோதனை உள்படபல்வேறு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தானம் கொடுப்பவன் சிறுநீரகம் நல்லா இருக்கு. உடனே ஆபரேஷன் செய்து எடுத்து நோயாளிக்குப் பொருத்திவிட முடியுமா?
நிச்சயமாக முடியாது. தானமாகக் கிடைக்கும் சிறுநீரகத்தை நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளவேண்டும். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மிக முக்கியமான விஷயம் இதுதான். இல்லையெனில் எல்லாம் வீணாகிவிடும்.
தானம் கொடுக்கப்படும் சிறுநீரகம் நோயாளியின் உடலுக்குப் பொருந்துமா எனக் கண்டறிய பல்வேறு சோதனைகள் உள்ளன.
ரத்தப் பிவு சோதனை: சிறுநீரகம் கொடுப்பவன் ரத்தப் பிவும் பெற்றுக்கொள்பவன் ரத்தப் பிவும் ஒரே வகையைச் சார்ந்ததா அல்லது பொருந்தும் வகையைச் சார்ந்ததா எனத் தெந்து கொள்ளவேண்டும்.
பொருத்தும் ரத்தப் பிவுகள் :
ஓ - ஓ ஏ - ஏ அல்லது ஓ பி - பி அல்லது ஓ ஏபி - ஏபி, ஓ, ஏ, அல்லது பி.

ரத்தப் பிரிவு பொருந்திவிட்டால் அடுத்து திசுப் பசோதனை. தானம் கொடுப்பவன் திசு வகைகளும் நோயாளியின் திசு வகைகளும் ஒத்த தன்மை உடையனவா எனப் பசோதிக்கவேண்டும். பொதுவாக மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் சிறுநீரகத்தைவிட நெருங்கிய உறவினர்களிடம் (பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தோர்) இருந்து பெறப்படும் சிறுநீரகம் அதிகப் பொருத்தம் உள்ளதாக இருக்கும். இருப்பினும் 100 சதவீதம் மிகச் சயாகப் பொருந்தும் சிறுநீரகம் கிடைப்பது மிக அது. எனவே தான் சிறுநீரகம் நிராகக்கப்படாமல் இருக்க உய மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டியுள்ளது.
எதிர் ஒப்பீட்டு முறை பசோதனை (Cross Match Test) :

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன் இறுதியாகச் செய்யப்படும் பசோதனை இதுதான்.
ரத்தப் பிவும் திசுக்களின் வகையும் ஒத்திருந்தாலும் வேறு சில காரணங்களால் சிறுநீரகம் நிராகக்கப்படலாம். இவ்வாறு நிராகக்கப்படுவதைத் தவிர்க்க எதிர் ஒப்பீட்டு முறை (Cross Match Test)என்ற பசோதனை செய்யப்படுகிறது. இதில் தானம் கொடுப்பவன் ரத்த அணுக்களும் நோயாளியின் ரத்த அணுக்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து பசோதிக்கப்படுகிறது.
இப் பரிசோதனையில் ரத்த அணுக்கள் ஒன்றை ஒன்று தாக்கி எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவரது சிறுநீரகத்தைப் பொருத்தக்கூடாது. ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் போர்க்குணமே இதற்குக் காரணம். அன்னியப் பொருள்களை எதிர்த்துப் போடும் நோய் எதிர்ப்பு அணுக்கள் மாற்று சிறுநீரகத்தையும் எதிர்க்கும். ரத்த அணுக்கள் ஒத்துப் போய்விட்டால் எதிர்ப்பு பெரிதாக இருக்காது.
4 மணி நேரம் சிகிச்சை :  
எல்லாச் சோதனைகளிலும் பொருத்தம் சரியாக இருந்தால், இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதுதான். சாதாரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 3 முதல் 4 மணி நேரம்பிடிக்கும். உறவினடம் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை முடிந்த உடனே சிறுநீரகம் வேலை செய்யத் தொடங்கிவிடும். உறவினர் அல்லாதவர்களிடம் பெறப்படும் சிறுநீரகம் முதலில் மிக மெதுவாகவே வேலை செய்யும். சில சமயங்களில் வேலை செய்ய 5 நாள்கள் முதல் 5 அல்லது 6 வாரங்கள் கூட ஆகலாம்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டும். சைக்ளோஸ்ப்ன் ஏ, பிரட்னிஸôல், அஸதியோபன் போன்ற மருந்துகளைச் சாப்பிடவேண்டியதிருக்கும். இந்த மருந்துகளினால் பக்க விளைவுகள் உண்டு. இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. உணவுக்குப் பின்னரே இந்த மருந்துகளைச் சாப்பிடவேண்டும். இத்தகைய மருந்துகள் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதால் பசி அதிகக்கும். அதன் காரணமாக அதிக உணவு உட்கொள்வதால் உடல் எடை அதிகக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாட்டினால் உடல் எடை அதிகத்தலைக் கட்டுப்படுத்தலாம்.