வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு


 தொகுப்பாளரின் முன்னுரை

மனிதனின் சிறப்பு

மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கின்றோம், நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளிக்கின்றோம். நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட(தகுதியில்) நாம் அவர்களை மகிமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம் (17:70)

நிச்சியமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம் (95:4)

அவன் எத்தகையவன்னென்றால் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான் (2:29)

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.(6:165)

ஆறு அறிவு

பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்ந்தறிதல், ருசித்தறிதல், பகுத்தறில் (கேட்டல், கேட்டதை எடுத்துச் சொல்லும் அறிவு ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளுதல்)

அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தை கற்றுக் கொடுத்தான் (55:4)

இத்தனைச் சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மனிதன் நேர்வழியில் நடக்கிறானா? இல்லையா?

இல்லை! இந்த அறிவை தவறாகப் பயன்படுத்துகிறான். உதாரணமாக மது அருந்துதல் லாபமா? அல்லது நஷ்டமா?. நஷ்டம்தான் என்று தெரிந்துக் கொண்டே குடிக்கின்றான் பகுத்தறிவு சொல்கிறது கெடுதி என்று, ஆசை (மனோ இச்சை) சொல்கிறது குடி என்று.

சிறந்த மனிதனாக வாழ அறிவு மட்டும் போதுமா?

போதாது, திருடுகின்றான் அது தவறு என்று அறிந்திருந்தும் அறிவைப் பயன்படுத்தி அதை நியாப்படுத்துகின்றான். அறிவைப் பயன் படுத்தி மோசடி (கலப்படம்) செய்கின்றான்.

உதாரணமாக ஹர்ஷத் மேத்தா என்பவன் 3000 கொடி ரூபாய் மோசடி செய்தான் எவ்வாறு செய்தான் தன் அறிவைப் பயன்படுத்திச் செய்தான். இந்த அறிவை நல்வழியில் பயன்படுத்திய நல்லோர்களும் இருக்கின்றார்கள். மனிதன் அறிவைப் பயன்படுத்தி தவறான வழியில் செல்லாமல் இருக்க ஒரு கடிவாளம் தேவை.

தூதர்கள் வருகையின் அவசியம்

கையில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு என்ன? என்று கேட்டால் தெரியாது. ஒருமனிதன் மற்ற மனிதனின் மனதில் உள்ளது என்ன என்பதை அறியமுடியாது ஒரு கணவன் தன் மனைவியின் மனதில், தாய் மகன் மனதில், தந்தை மகன் மனதில் என்ன உள்ளது என்பதை அறியமுடியாது. இப்படி இருக்க படைத்த ரப்புல் ஆலமீன் என்ன நாடுகின்றான் என்பதை எவ்வாறு அறியமுடியும்? அதற்குத்தான் தூதர்கள் தேவை.

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)

தூதர்களின் நோக்கம்

மனிதர்களை நேர்வழிப்படுத்த, அல்லாஹ் நாடியதை அறிந்து கொள்ள, மக்கள்(மறுமையில்) காரணம் சொல்லாமல் இருக்க தூதர்களை அல்லாஹ் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கின்றான். அவர்களும் மனிதர்களே, அத்தூதர்களும் கஷ்டங்களை அனுபவித்தனர், ஆட்சி அதிகாரம் பெற்றனர், சமூகத்தினரால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டனர், ஏன்! கொலையும் கூட செய்யப்பட்டார்கள்.

(நபியே!) நீர் சொல்வீராக ''நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.'' (18:110)

தூதர்களை ஏற்கமறுத்தது

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, ''ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. (17:94)

மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவத்தில் தான் (வருகிறார்கள்)

நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணும் சக்தியில்லாதவர்கள் ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.(6:9)

இமாம் முஸ்லிம் அவர்களின் தொகுப்பில் வந்த உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸின் சுருக்கத்தை பாருங்கள்:

ஒரு நாள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்து இருந்தோம் அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார்(தோன்றினார்). அவர் வெண்ணிற ஆடையை அணிந்து இருந்தார். மிகவும் கருமையான முடிகளை உடையவராகவும், எந்த பிரயாண களைப்பும் (அடையாளமும்) அற்றவராகவும் இருந்தார். நாங்கள் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி(ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து தனது முழங்கால்கள் நபி(ஸல்) அவர்களுடைய முழங்கால்களோடு படுமாறு அமர்ந்து. தனது கைகளை அவரது தொடைகளின் மீது வைத்தவாறு யாமுஹம்மத் ''இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு அறிவிப்பீராக'', என்று கேட்டார்?.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் என்பது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர (வேறு) யாரும் இல்லை என்றும், முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதும். தொழுகையை நிறை வேற்றுவதும், ஜகாத் கொடுப்பதும் ரமலானில் நோன்பு நோற்பதும், பிரயாணத்திற்கான சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதர் நீர் உண்மையே கூறினீர். என்று சொன்னார்.

நாங்கள்லெல்லாம் அவர் கேள்வி கேட்பதையும் பின்பு அதை உறுதிப்படுத்துவதையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பிறகு அவர் ''ஈமான் என்றால் என்னவென்று கூறுவீராக?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும் (வானவர்களையும்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களளையும், இறுதி நாளையும், நன்மை தீமையாவும் விதிப்படி நடக்கிறது என்று நம்புவதும் ஆகும் என்க் கூறினார். அதற்கு அவர் நீர் உண்மையை கூறினீர் என பதில் அளித்துவிட்டு. ''இஹ்ஸான் என்றால் என்ன? என அறிவீப்பீராக'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இஹ்ஸான் என்றால் நீர் அல்லாஹ்வை காண்பது போன்று வணங்குவதாகும். நீர் பார்க்கவில்லை என்றாலும் அவன் உம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். என பதில் கூறினார். பின்னர் அவர் 'அஸ்'ஸா என்பது (மறுமை நாள் அந்த நேரத்தைப்) பற்றி அறிவீப்பீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது விசயம் குறித்து கேள்வி கேட்கப்படுபவரைவிட, கேட்பவர் அதிகமாக அறிந்தவர் என்று கூறினார். பின்னர் அவர் அதற்கான அடையாளங்களை கூறுவீராக? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடிமை பெண் தனது எஜமானியை பெற்றெடுப்பாள், காலணி இல்லாமல் வறுமையான (ஏழ்மையான) ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவார்கள் என்றும் கூறினார்கள். மேலும் வந்தவர் போனபின் நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள், அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள் எனக் கூறினேன். பின்பு நபி(ஸல்) அவர்கள், அவர்தான் ஜீப்ரயீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் எனக் கூறினார்கள்.

அல்லாஹ் எதை விரும்புகிறான்?

தன்னுடைய தூதுச் செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்க மனிதர்களையே தேர்ந்தெடுக்கிறான். மலக்குகளை அனுப்பிவைத்தாலும் மனித உருவிலேயே அனுப்பிவைக்கிறான். மேலும் மனிதர்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதைத் தன் அருள் மறையில் குறிப்பிடுகிறான்.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை) களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு, போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (2:177)

நபிமார்களின் பணி

1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக:

அல்லாஹ்வின் செய்தியை பெற்றுக் கொண்டு கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது.

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)

2. வஹீ பெற்று அறிவிப்பது:

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (21:25)

3. நல்வழிபடுத்துவது:

''நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்'' (என்று கூறினார்). (11:26)

4. நன்மாராயம் கூறுபவர், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (34:28)

பணியின் விளைவு

செய்தியை சொன்னவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை பரிகாசம் செய்தார்கள், பொய் என்று கூறினார்கள், சூனியம் என்று கூறினார்கள், கவிஞன் என்று கூறினார்கள், துன்புறுத்தினார்கள், கொலையும் செய்தார்கள்.

இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்துக் கொண்டது. (21:41)

நபிமார்கள் பணி எத்திவைப்பது மட்டுமல்ல (பரிகாசம், பொய்பித்தல், விரட்டி அடித்தல், கொலை செய்தல் போன்ற) இன்னல்களை சகித்து பொருத்துக் கொள்ளுதலும் ஆகும்.

நபிமார்களை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களின் நிலை:

ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம். (7:72)

அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர். (7:64)

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து 10 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஷவ்வால் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் மக்காவை அடுத்துள்ள தாயிஃப்புக்கு ஏகத்துவத்தை எடுத்துக் கூறப் புறப்பட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப் போயிருந்த தகீக் (அப்துயலீல்), மஸுத், ஹபீப் தோத்திரத்தாருக்கு நபிகளாரின் அழைப்புப்பணி செவிடன் காதில் ஊதிய சங்கானது. நபிகளாரை அவர்கள் சொல்லாலும் செயலாலும் தாக்கினர். ஹதீஸ்களில் இதனைக் காணும் போது உஹதுப் போரில் நபி(ஸல்) தாக்கப்பட்டு நிராகரிப்போரால் நிகழ்ந்த வேதனையைக் காட்டிலும் தாயிஃப் நகர மாந்தர்கள் இழைத்த கொடுமைகளின் வேதனை அதிகமாய் இருந்தது. பத்து நாட்கள் அழைப்புப் பணி அந்நேரத்தில் பயனற்றதாய் இருந்தது.

நபிகளாரை ஆதரிக்கும் கோத்திரத்தார்களுடன் எந்தவித வியாபார, கொடுக்கல் வாங்கல் திருமணம், பேச்சுவார்த்தைகள் எதுவும் முஹம்மது(ஸல்) தம் கொள்கையை விட்டு விடும் வரை அல்லது அவர் கொல்லப்படும் வரை வைத்துக் கொள்ளக் கூடாது என இணைவைப்பாளர்கள் தீர்;மானித்து பகீத் பின் அமீர் பின் ஹாஷிம் என்பவன் கைப்பட எழுதிய தீர்மானம் கஃபாவில் கட்டி தொங்க விடப்பட்டது விளைவு நபிகளாரை(ஸல்) அரவணைத்த அனைவரும் சமூகப் பகிஷ்காரம் செய்யப்பட்டனர். அபூதாலிபின் ஹாஷிஃப் கணவாய் என்ற இடத்தில் நபிகளின் அரவணைப்பாளர்கள் குடியேறினர். நபிகளுக்கு நபித்துவம் கிடைத்த ஏழாம் ஆண்டில் முஹர்ரமில் துவங்கிய இச்சமூகபகிஷ்காரம் மூன்றாண்டுகள் தொடர்ந்து நீடித்தது. பசிக்கொடுமையால் இலைதழைகளையும் மிருகங்களின் தோலையும் உண்டனர். குழந்தைகளின் அழுகுரல் வெகு தூரம் வரை எட்டியது. பசியின் பரிதாபத்தை கேள்வியுற்ற இளகிய மனங்கொண்டோர் உதவிய சில சந்தர்ப்பங்களைத் தவிர பயங்கரப் பஞ்சமே மூன்றாண்டுகால பகிஷ்கார வாழ்வில் தாண்டவமாடியது. இந்நிலையிலும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரம் ஓயவில்லை. தம்மைச்சார்ந்திருந்த மக்களிடம் ஓரிறைக் கொள்கை எடுத்துரைக்கப்பட்டது.

யாரை தூதர்களாக அனுப்பி இருக்கிறான்

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே ''(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்'' (என்று நபியே! அவர்களிடம் கூறும்) - (21:7)

சில ஆதாரங்களை கொடுத்து அனுப்பினான்

இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்;. (6:89)

எல்லா நபிமார்களின் பெயர்களையும் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (40:78)

அல்லாஹ் நபிமார்களின் வரலாற்றைக் கூறுவதன் நோக்கம்

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. (11:120)

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.(12:111)

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.(7:176)

நபி மார்களை அனுப்பும் முன் அவர்களுடன் அல்லாஹ் உடன்படிக்கை செய்கின்றான்.

(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.(33:7)

எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.(33:8)

மறுமையில் நபி நூஹ்(அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள்.  அவர்கள், இதோ வந்துவிட்டேன் என் இறைவா! கட்டளையிடு காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள்.  அப்போது அவர்களிடம் (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்துவிட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம் உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல்கின்றவர் யார்? என்று (நூஹ் நபியிடம்) கேட்க, அவர்கள் முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும் நூஹ்(அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும் இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாகவும் இதை;தூதர் உங்களுக்கு சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2-143) இறைவசனம் குறிக்கின்றது. நடுநிலையான (வசத்) என்பதற்கு நீதியான என்று பொருள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

அல்லாஹ் தூதர்களுடன் பேசும் முறை

1. வஹீ மூலம் 2. திரைக்கு அப்பால் 3. தூதர் அனுப்பி அவர் மூலம் அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

நபிமார்களின் (முஃஜிஸாத்) அற்புதங்கள்

நபி மார்களின் பெயர்கள்
  

அற்புதங்கள் (முஃஜிஸாத்)

சுலைமான் (அலை)
  

காற்று, ஜின்களை கட்டுப்படுத்திக் கொடுத்திருந்தான்;, எறும்பு மற்றும் பறவைகளுடன் பேசும் பாஷையை கற்றுக் கொடுத்திருந்தான்.

ஸாலிஹ்(அலை)
  

சூல் கொண்ட சாம்பல் நிற ஒட்டகம்

மூஸா(அலை)
  

அக்குளில் கைவைத்து எடுத்தால் கை பிரகாசம் அடைவது, கைத்தடி பாம்பாக மாறுவது, கடல் பிளந்தது, பாறைகளிலிருந்து 12 நீர் ஊற்றுக்கள் மற்றும் 'மன்னு ஸல்வா' (என்னும் மேன்மையான உணவுப் பொருள்கள்)

ஈஸா(அலை)
  

பிறவிக் குருடு, வெண்குஷ்டம் போன்றவற்றை குணப்படுத்துதல், களிமண் பறவைக்கு உயிர் கொடுத்தது, உணவு மறவை

நபி(ஸல்)
  

குர்ஆன்

நபிமார்களின் உடலை மண்தீண்டாது (சுருக்கம்)

வெள்ளிக்கிழமை எனக்கு அதிகமாக ஸலவாத்து சொல்லுங்கள் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று சொன்னவுடன், மண்ணோடு மண்ணாக நீங்கள் ஆனபிறகுமா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நபிமார்களின் உடலை மண் தீண்டாது.

குர்ஆனில் குறிப்பிட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்

1. ஆதம்(அலை)

2. நூஹ்(அலை)

3. இத்ரீஸ்(அலை)

4. ஹுத்(அலை)

5. ஸாலிஹ்(அலை)

6. இப்ராஹீம்(அலை)

7. இஸ்மாயில்(அலை)

8. இஸ்ஹாக்(அலை)

9. லூத்(அலை)

10. ஷுஐப்(அலை)

11. யாகூப்(அலை)

12. யூசுஃப்(அலை)

13. அய்யூப்(அலை)

14. யூனூஸ்(அலை)

15. மூஸா(அலை)

16. இல்யாஸ்(அலை)

17. தாவூத்(அலை)

18. சுலைமான்(அலை)

19. ஈஸா(அலை)

20. ஜக்கரியா(அலை)

21. யஹ்யா(அலை)

22. ஹாரூன்(அலை)

23. அல்-எஸாவு(அலை)

24. துல்கிப்லு(அலை)

25. நபி முகம்மது (ஸல்)

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்...

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் “கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் – கொன்ஸ்தாந்து நோபிள் – தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.- முஸ்னத் அஹ்மத் : 6645
கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை  அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில்  பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த  இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது  . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான்  சிறந்த படை  என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்

மெக்கா...

கோத்ரா...

Tuesday, February 22, 2011

கோத்ரா சம்பவ தீர்ப்பு




பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அக்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு தொடந்து நடந்த கலவரங்களில் 1200 பேர் உயிரிழந்தனர்,இலட்சக் கணக்கானோர் வீடு சொத்துகளை இழந்தனர். 

தீர்ப்பின்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று சில தரப்பினரும். திட்டமிட்ட சதி என்று மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காட்ட்ப் பட்ட மெளல்வி உமரை போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. சபர்மதி எக்ஸ்பிரஸில் கரசேவகர்கள் இருந்த எஸ்-6 பெட்டியை எரிக்குமாறு ஒரு கும்பலுக்கு உமர் உத்தரவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2/3 பேரை நிதிமன்றம் விடுதலை செய்தது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நெருக்கடியை உருவாகியுள்ளது.இதில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 63 பேர் சுமார் 9 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டாடர்கள்.

தீர்ப்பின் முழு விவரமும் வந்த பின் மேல் முறையீடு செய்யப் படும் என தெரிகிறது..

2 comments:


கே. ஆர்.விஜயன் said...
கோத்ரா சம்பவமும் அதைத்தொடர்ந்து நடந்தவையும் மிகவும் வருந்தத்தக்கவை.இனியும் இது மாதிரி நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வானம் said...
கோத்ரா சம்பவத்துக்குப்பின் உடனடியாக நடத்தப்பட்ட கலவரம் மிகக்கவனமாக திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அதனால் இது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது. மேலும் குஜராத்தில் காவல்துறையும் நீதித்துறையும் இந்துத்துவமயமாகிவிட்டது என்றுதான் கருதுகிறேன். இந்தத்தீர்ப்பு அக்கருத்தை உறுதிப்படுத்துவதாகக்கூட இருக்கலாம்.

கேள்வி...?

43 கேள்வி : ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு ஒரு வருடம் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று ஒருவர் கூறினார். உங்களது கேள்வி எண் 25 இல் ‘ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுப்பவர்’ என்ற வாசகத்திற்கு விளக்கம் தாருங்கள். அதே சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு சொத்திற்கா? (ஹாஜா மொய்னுத்தீன் யாகூ டாட் காம் மெயில் மூலமாக)
ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? அதாவது எனது சேமிப்பிற்காக ஒரு கிலோ தங்கம் வாங்கினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முதல் வருடம் மட்டும் கொடுத்து விட்டால் போதுமா? அல்லது அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தாருங்கள். (பீர் முஹம்மது, ஜித்தா சவூதி அரேபியா, சவூதி ஆன் லைன் மெயில் மூலமாக)
‘நிஸாப்’ என்ற குறிப்பிட்ட அளவை நம்மிடமுள்ள நகையோ அல்லது பணமோ அடைந்து விட்டால் அதற்காக ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமென்பதே எல்லா இஸ்லாமிய அறிஞர்களதும் முடிவாகும்.
அதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் காணப்பட்ட போதிலும் பின்வரும் ஹதீஸை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
‘மூன்று விஷயங்களைச் செய்யும் ஒருவர் ஈமானின் சுவையை அனுபவித்தவராவார். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை என்று நம்பிக்கை கொண்டு, தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்…’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரி (ரழி), நூல்: அபூதாவூது)
இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஸஹீஹ் சுனன் அபூதாவூது, ஹதீஸ் எண் 1580)
இதுதான் முன்பு கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான நமது பதிலும் ஆகும்.
1. வார்த்தைப் பிரயோகம்:
ஸகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு திரும்பவும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்றிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தெளிவான வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்.
‘ஸகாத் கொடுக்கப்படாத தனது செல்வங்களுக்கு தவறாமல் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.
‘தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் ஒரே செல்வத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவரைக் குறிக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தனது செல்வம் என்றால் தனது செல்வம் முழுமைக்கும் என்பது பொருள். அவ்வாறு இல்லை என்றால் அது எந்த செல்வம் என்பது குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
2. ஸஹீஹான ஹதீஸ்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் நம்பகத்தன்மை அற்றது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதற்குரிய விளக்கத்தை தந்தால் தான் இந்த ஹதீஸை முழுமையாக விளக்கியதாக ஆகும்.
விமர்சனம்: 1
இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அபூதாவூது அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பவரின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாகவும், அந்த ஏட்டை அம்ரு பின் ஹாரிஸ் என்பவரது குடும்பத்தினரிடமிருந்து பெற்றதாகவும் கூறுகிறார்கள். அம்ரு பின் ஹாரிஸ் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.
பதில்: அம்ரு பின் ஹாரிஸ் அவர்களின் ‘நேர்மை நிரூபணமாகவில்லை’ என்ற வாசகத்திற்கு பதிலாக ‘நேர்மை அறியப்படவில்லை’ என்ற வாசகத்தையே தஹபி அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி மீஸானுல் இஃதிலால் என்ற நூலில் காணப்படுகிறது.
தஹபி அவர்கள் எழுதிய அல்காஷிப் என்ற நூலில் அம்ரு பின் ஹாரிஸ் அவர்கள் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் என்று எழுதி, முந்தைய தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதனால் அவர் நம்பகமானவரே.
விமர்சனம்: 2
அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.
ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாக வில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
பதில்: இமாம் அபூதாவூது அவர்கள் இது அப்துல்லாஹ் பின் ஸாலிமின் ஏடுதான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு தான் அதை தனது நூலில் பதிவு செய்கிறார்கள். இந்த விமர்சனம் இமாம் அபூதாவூது அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துவதாகும்.
இங்கே ஏடு ஒன்று கைமாறி இருக்கிறது அவ்வளவு தான். அம்ரு பின் ஹாரிஸ் அவர்களோ அவர்களின் குடும்பத்தினரோ இந்த ஹதீஸை அறிவிப்பதில் ஈடுபட வில்லை. அதனால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. அறிவிப்பாளராக இல்லாதவர்கள் பற்றிய விமர்சனம் தேவையில்லை என்பதால் அது பதிவு செய்யப்பட்டிருக்காது. இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இங்கே தெளிவாகத் தெரிகிறது.
மேலும் இந்த விமர்சனம் ஹதீஸ் துறையில் புதுமையான விமர்சனமாகும்.
விமர்சனம்: 3
அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காளிரி (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் என்று சில நூல்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்த வில்லை.
நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.
‘நான் நபியிடம் கேட்டேன்’ என்றிருப்பதற்கு பதிலாக ‘நபி சொன்னார்கள்’ என்றுதான் இருக்கிறது. இதுவும் இவர் ஸஹாபி என்பதை நிரூபிக்க வில்லை.
நபித்தோழரோ அல்லது தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்க வில்லை.
நபித்தோழரைத் தீர்மானிப்பதற்குரிய தத்ரீப் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாக வில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.
பதில்: இவர் நபித்தோழர் தான் என்று பலர் கூறியிருப்பதும் அவை பல நூல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இவர் நபித்தோழர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்யுமே தவிர சந்தேகத்தை ஏற்படுத்தாது.
இவர் நபித்தோழர் தான் என்பதை கீழ்காணும் நூல்களில் பார்க்கலாம்.
1.தக்ரீப் அத்தஹ்ரீப் 3631, 2.அல்காசுஃப் 2995, 3.தஹ்தீப் அல்கமால் 3583, 4.அல்இஸாபா 4968, 5.தஹ்தீபுத் தஹ்தீப், 6.மீஸானுல் இஃதிலால் 7.தஹ்தீபுல் கமால் இவைபோன்ற இன்னும் ஏராளமான கிதாபுகளில் நபித்தோழர் என்பது கூறப்பட்டுள்ளது.
இதுவே இவர் நபித்தோழர் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது. மற்ற துணை விமர்சனங்கள் அவ்வளவு வலுவானவை அல்ல.
விமர்சனம்: 4
இந்த ஹதீஸில் வரக்கூடிய யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அதனால் இது அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்பது அவர்களின் விமர்சனம்.
பதில்: ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் சொல்கிறார்கள்: அபூதாவூதில் வரக்கூடிய ஹதீஸில் தான் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் அவர்கள் அதே அறிவிப்பாளர் வரிசையை பதிவு செய்யும் போது யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே விடுபட்டுள்ள அப்துல்லாஹ் என்பவரை பதிவு செய்து, இது தொடர்பு அறுந்த ஹதீஸ் இல்லை என்கிறார்கள். இமாம் அபூதாவூது அவர்களின் மூலப் பிரதியில் அப்துல்லாஹ் என்பவர் விடுபடாமல் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அதனால் இதில் அறிவிப்பாளர் விடுபட வில்லை.

கருத்துத்

உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா?

   ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடை கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுக்கலாமா? இதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம்.
    மனிதனின் உடற்கூறுகளை ஆராயும் மருத்துவத்துறையின் வளர்ச்சி சென்ற ஒரு நூற்றாண்டில் பல நூறு ஆண்டுகள் காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித இனம் பற்பல நன்மைகளை அடைந்துள்ளது. அதில் ஒன்று உடல் உறுப்புகளை மாற்றும் Transplantation முறையாகும்.
    முழுமை பெற்ற இஸ்லாம் இவ்விதம் உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா? போன்ற நியாயமான கேள்விகள் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது. இதற்கு ஒரிரு வார்த்தைகளில் பதிலலிப்பது விவேகமாகாது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்தால் எக்காலத்திற்கும் உகந்தது இஸ்லாம் என்ற கருத்து அனைவரிடமும் நிலவும். எனவே நாம் இதனை சிறிது விளக்கமாகவே பார்ப்போம்.
   
வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்். அவன் நாடியதைப் படைக்கிறான்். இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (
அல்குா்ஆன5:17)
    வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அல்குா்ஆன24:64)
    அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (
அல்குா்ஆன2:29)
    போன்ற திருக்குர்ஆன் வசனங்களின்படி அல்லாஹ் அனைத்திற்கும் அதிபதி என்பதை அறிகிறோம். இப்படிப் படைக்கப்பட்ட அனைத்தும் எதற்கு? ஏன் அல்லாஹ் படைத்தான்? என்ற வினாவுக்கு அல்லாஹ் பதிலலிக்கிறான்.
     அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் (அல்குா்ஆன 2:29)
    நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்் அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்் நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (
அல்குா்ஆன31:20)
    இவ்விதமாக அகத்திலும் புறத்திலும் அருட்கொடைகளாக அளித்திருப்பவை தனது உடலிலும் உண்டு. வானங்களிலும் பூமிகளிலும் உள்ள அனைத்திலும் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். அவற்றை செம்மையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
    அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்் அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (
அல்குா்ஆன45:13)
    அல்லாஹ் படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பான மனித இனத்திற்கு மற்ற படைப்பினங்களை கட்டுப்படுத்தி தந்திருக்கிறான். அதே நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உபயோகமாக இருக்க வேண்டுமென்பதையும் இஸ்லாம் கூறாமலில்லை. அதன் அடிப்படையில்தான் தர்மங்கள் நல்லெண்ண உறவுகள் பந்தப்பினைப்புகளை அல்லாஹ் அவசியமாக நற்செயலாக நமக்கு காட்டுகிறான்.
   
நன்மையிலும்் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்். (அல்குா்ஆன5:2)
   
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குா்ஆன3:92)
    அவனது படைப்பில் எப்பொருளும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கப்படவில்லை என்பதை அலுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான்.
    வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை.(38:27) இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்் காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. (38:27)
    என எச்சரிக்கையும் செய்கிறான். எனவே எதனையும் வீணாக்கவோ, உதாசீனப்படுத்தவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஒரு சிட்டு குருவியைக்கூட முறை தவறி கொள்வதை அல்லாஹ் விசாரிப்பான் என நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
    ஒருவர் ஒரு சிட்டுக்குருவியை அல்லது அதைவிடப் பெரிய பிராணியை அதற்குரிய முறையின்றி கொன்று விடுவாராயின் அதைக் கொன்றது குறித்து அல்லாஹ் அவரிடம் (கேள்வி) கேட்கவே செய்வான் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய முறை என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அதை அவர் அறுத்து புசித்திட வேண்டும். அதன் தலையைத் துண்டித்து அதை(க்கொன்று வீணாக) வீசிவிடக் கூடாது என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்: அஹ்மது, நஸயீ, தாரமி.
    எனவே அல்லாஹ்வின் படைப்புகளில் எதனையும் உரிய முறையில் உபயோகப்படுத்துவதையே அல்லாஹ் விரும்புகிறான். உபயோகிக்க தகுதியுள்ள நிலையில் அதனை வீணாக்குவதை வெறுக்கிறான். அதனைப்பற்றி கேள்வியும் கேட்பான் என்பது தெளிவாகிறது.
    இதன் அடிப்படையில் இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் உயிருடன் உடல் உறுப்புகளை மாற்றுவது விஷயத்திலும், இறந்தவர்களின் உறுப்புகளை உயிருடனிருப்பவருக்கு தர்மம் செய்வது விஷயத்திலும் இஸ்லாம் காட்டும் வழியை நோக்கவேண்டும்.
     நாம் வானங்களையும், பூமியையும், இவை இரணிடிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (அல்குா்ஆன15:85)
    அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை. (அல்குா்ஆன30:8)
    ஒரு மனிதன் இறக்கிறான் அவனைப் பொருத்த வரையில் அவனது தவணை முடிவடைகிறது. அவன் உடல் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். எனவேதான் ஒருவன் இறந்த பின்பும் அவனது உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை மீண்டும் உபயோகிக்கும்படியான உயிர் தன்மையுடன் இருக்கின்றன.
    எனவே, இறந்து விட்டவரின் உடலிலுள்ள கண், சிறுநீரகம், இதயம் போன்றவை அக்குறிப்பிட்ட நேரத்திற்குள் இறந்தவரின் உடலிலிருந்து சரியான முறையில் பிரிக்கப்பட்டால் அதனை உயிருடன் இருப்பவர்களுக்கு பொருத்தி பயன் அடையலாம் என்பதை மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். அதனை செயல்படுத்தி வருவதையும் கன்கூடாக பார்க்கிறோம்.
    அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்் அவர்களுக்குக் கண்கள் உண்டு் ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்் இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குா்ஆன7:179)
    இதயங்களைக் கொண்டும், கண்களைக் கொண்டும், காதுகளைக் கொண்டும் நல்லுபதேசங்கள் பெறவேண்டும். அவ்வுறுப்புகள் மூலம் பெறாதவன் மிருகத்தைவிட மோசமானவன் என்பதை (7:179) வசனத்தின் கருத்தாக இருக்கிறது.
மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குா்ஆன5:32)
    உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்்  எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பாிகாரமாகும்். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (
அல்குா்ஆன5:45)
    பலிக்கு பழி வாங்குவதைவிட அதனை மறந்து மன்னித்து விடுவதையே பெரும் தர்மமாகவும், பாவத்திற்கு பரிகாரமாகவும் காட்டும் இஸ்லாம், சமுதாயத்தில் வாழ தவணையுள்ளவர்களுக்கு தனது தவணைக்குப்பின் தனது உறுப்புக்குள்ள தவணையைத் தந்து வாழ வைப்பது எவ்வளவு சிறப்புக்குறியது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
    உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்் (அல்குா்ஆன67:2)
    இவ்வசனத்தில் முதலில் மரணத்தையும், வாழ்வையும் என முதலில் மரணத்தை குறிப்பிடுகிறான். எனவே, ஒருவரின் மரணத்தின் மூலமும் அவரது அழகிய செயல் வெளிப்படுவதை அறியலாம். மரனமடைந்தவர் தனது உடல் உறுப்புகளை தேவையுடையோருக்கு கொடுப்பதன் மூலம் அழகிய செயல் செய்தவராகவே கணிக்கப்படுகிறார் என்பது தெளிவு.
    உயிரோடு இருப்பவர்கள் தனது உறுப்புகளை தரும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உயிரோடி இருப்பவர் தனது உறுப்புகளை தருவதால் அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் உண்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுகிறவர் வரம்பு மீறி தன்னை அழித்துக் கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.
   அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்். (அல்குா்ஆன2:195)
    எனவே உயிரோடு இருப்பவர் இதயம் போன்ற ஒரு உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக்கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை. இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக தந்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றால் கொடுப்பது தவறில்லை. மறு உறுப்பால் வாழ்க்கையில் அது வீணாகி அதன் மூலம் தனக்கு உயிர் வாழும் பிரச்சனை ஏற்படுமெனில், சந்தேகம் வந்தால் மற்றெவரின் உறுப்பை பெறவும் வாய்ப்பிருக்காது என நினைத்தால் இரண்டில் ஒன்றை தானமாகத் தருவதை இஸ்லாம் தடுக்கிறது.
    எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்் (அல்குா்ஆன17:36)
    உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களில் பால் சென்றுவிடு என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி)
    eநிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்  (அல்குா்ஆன9:111)
    என்ற இறைவசனப்படி மூமின்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அல்லாஹ்வின் அமானிதமாகும். அதனை விலை பேசுவதற்கு நமக்கு உரிமையில்லை. எனவே உறுப்புகளுக்கு பணம் வாங்குவது தடுக்கப்படுகிறது. ஒருவரின் எண்ணம் நிய்யத்தை பொருத்துதான் அவரது செயல்கள் கணிக்கப்படும் என்பதையும் நபி صلى الله عليه وسلم எடுத்துரைத்துள்ளார்கள்.
    நபி صلى الله عليه وسلم கூறியதாக, எவரொருவர் மக்களிடம் இரக்கம் காட்டவில்லையோ அவரிடம் அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (ஜாபிர் பின் அப்துல்லாஹ்  رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி, முஸ்லிம்)
    பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள். இப்னு உமர்  رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:திர்மிதீ, அஹமது)
    தாகத்தால் வருந்திய நாய்க்கு உதவிய ஒரு தீய பெண்ணுக்கு பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். மேலும் ஈரமான இதயமுள்ள பிராணிகளுக்கு உதவுவதாலும் நன்மையுண்டு என்றார்கள். (அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்:புகாரி, முஸ்லிம்
    மேற்காணும் ஹதீஸ்களில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மனித இனத்தின்மீது முழுமையாக இரக்கம் காட்டுவதையே குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம்கள், மூமின்கள் மீது மட்டும்தான் இரக்கம் காட்டவேண்டும் என குறிப்பிடவில்லை. அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட இறுதி வேதம். நபி صلى الله عليه وسلم அவர்கள் முந்திய நபிகளைப்போல ஒரு இனத்திற்கோ நாட்டுக்கோ அனுப்பப்படவில்லை. நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள்.
    ஆனால், அதே நபி صلى الله عليه وسلم அவர்கள் மரணித்து விட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் எலும்பை முறிப்பது போலாகும். எனவும் கூறினார்கள். (ஆயிஸாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)
    இந்த நபி மொழியில் எவ்வித நலனும் கருதாமல் மரணித்தவரை ஊனப்படுத்தவும், வெறுப்பை, குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்யப்படும் செயலாக செய்வதையே தடுத்தார்கள். உதாரணமாக உஹது போரில் மரணித்த ஹம்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்களை ஹிந்தா என்ற பெண்மனி அசிங்கப்படுத்திய  செயல் போன்றவற்றையே தடுத்தார்கள் என கொள்ளவேண்டும்.
    வளரும் எதிர்கால  சமுதாய நலன் கருதி மருத்துவத்துறையில் ஆபரேஷன், போஸ்ட்மார்டம் போன்றவற்றால் பற்பல உண்மைகள் உலகுக்குத் தெரிய வருகிறது. மரணித்தவரின் உண்மைக் காரணங்கள் தெரிய வருகின்றன. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் நாடி உலக ஆதாயங்களை எதிர்பாராமல் ஒருவர் தர்மத்திற்காகவோ, மனிதாபிமானத்திற்காகவோ  தனது உறுப்புகளை பிர மனிதர்களுக்கு கொடுப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடும். உயிரோடு இருப்பவர்கள் தனது உயிரை பாதிக்காத வகையில் தேவையுள்ளவர்களுக்கு  தானம் கொடுப்பது கூடும். அவ்விதம் தானம் செய்பவரின் எண்ணம் நிய்யத்துக்கொப்ப அல்லாஹுவிடம் அவர் கூலி பெறுவார்.
    அல்லாஹ்் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்் இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (
அல்குா்ஆன
6:3)
    ஒரு சிலர் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள் என ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும் என்பது போன்ற பல கருத்துகளை குர்ஆன் எடுத்துக் கூறுகிறது. எனவே இப்புற உறுப்புகளுக்கும், மறுமையில் எழுப்பப்படும் நிலைக்கும் வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
    சிலர் உடல் அல்லாஹ்வுக்கு சொந்தம், இதனை பிறருக்கு கொடுக்க இவனுக்கு உரிமையில்லை. அவ்வுடலை மண்ணுக்கே சொந்தப் படுத்த வேண்டுமென மார்க்க தீர்ப்பு அளிக்கின்றனர். உண்மையில் உடல் மட்டுமல்ல உயிர், உடல், செல்வம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அல்லாஹ்வுக்கு சொந்தமான செல்வத்தை தேவையுடையோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்று வலியுறுத்துகிறான் எனில் அவனுக்குச் சொந்தமான உடல் உறுப்புகளையும் தேவையுடைவர்களுக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்கவே செய்வான் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வுறுப்புகள் அதன் தவணை முடிந்ததும் மண்ணில்தான் போய்ச்சேரும் என்பதிலும் ஐயமில்லை