வியாழன், 11 ஆகஸ்ட், 2011

அழகை நேசித்த அண்ணல் நபி அவர்கள்

அழகை நேசித்த அண்ணல் நபி அவர்கள் Print E-mail
ஏ.பி.எம். இத்ரீஸ்
அழகை நேசித்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அல்குர்ஆனில் அல்லாஹ்வின் ஆயத்துக்கள் அழகின் அத்தாட்சிகளாக மாறியது மதங்களின் வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

குர்ஆன் பிரதியின் அழகியல் அதன் அற்புதத்தின் சவாலின் வெளிப்பாடகும். குர்ஆனிய உள்ளடக்கத்தின் ஆடையும் அதுதான். அதேவேளை அது ஆதாரமாகவும் இருக்கின்றது. வாசகர்களை அது அழகியல் அடிப்படையில்/ ரசனையுள்ளவர்களாக பயிற்றுவிக்கின்றது. பிரக்ஞை பூர்வமாக இப் பிரபஞ்சத்தின் அழகை ரசிக்கவேண்டுமென அது தூண்டுகின்றது.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அலகிலும் உட்பொதிந்திருக்கும் அழகை ஆராதிக்கத் தூண்டுகின்றது. உலகமாந்தருக்கான அழைப்பை அழகியலே கொண்டு செல்ல வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.
அரபு மொழியில் ஸீனத் என்பது அழகியலின் உச்சத்தைக் குறிக்கும் பதமாகும். ஸீனத், ஜமால் என்ற பதங்கள் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வுலகப் பொருட்களின் பயன்பாட்டையும், அழகியலையும் ஒரு சேரக்குறிக்கும் சொற்றொடர்களாகும். (அந்நஹ்ல் 5-8) கால்நடைகள் பயன்பாடும் அழகியல் கொண்டது. அவ்வாறே கோள்களும் நட்சத்திரங்களும் (அல்குர்ஆன் - அஸ்ஸாஃப்ஃபாத் 6,7) (அல்குர்ஆன் - புஸ்ஸிலத் 12) (அல்குர்ஆன் - அல்ஹிஜ்ர் 16,17) (அல்குர்ஆன் - காஃப் 6). அழகின் வெளிப்பாடுகளாகும்.

பூமி முழுவதும் வழிபடும் ஆலயமாகவும் அழகியலுக்கான பொருளாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்தில் வழிபாடு அழகியலோடு இணைக்கப்பட்டுள்ளது. அழுக்கு நிறைந்த துறவறத்திலிருந்து புதிய அறத்தை அது முன்மொழிகின்றது. (அல்குர்ஆன் - அல்அஹ்ரா 31-32)
நபிகள் அல்குர்ஆனின் இந்த அழகிய கோட்பாட்டை நன்கு புரிந்து வைத்திருந்தது மட்டுமன்றி நடை முறைப்படுத்தியும் காட்டினார். அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்பின்றான். (முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா) என்று பிரகடனம் செய்தார்.
அல்குர்ஆன் அழகிய ராகத்தில் ஓதுமாறும் பயிலுமாறும் பணித்தார். உங்கள் குரல்களால் அல்குர்ஆனை அழகு படுத்துங்கள் (நூல்: புகாரி) குதிரை அழகானது அதை அழகியலோடு வைத்திருக்க வேண்டுமென சொன்னார். ‘குதிரை மனிதர்களுக்கு பாதுகாப்பானதும் அழகானதுமாகும். எனவே அவர்கள் அதனை நன்கு பராமரிப்பதோடு அலங்கரிக்கவும் வேண்டும்’. (நூல்: முஸ்லிம்)
அழகுக்குப் பஞ்சம் நிலவும் காலத்தில் அழகைக் கேட்டுப் பிரார்த்தித்தார். ‘இறைவா எமது பூமியில் அதன் அழகை பொழியச்செய்வாயாக!’ மழைதேடி நிறைவேற்றும் தொழுகையில்தான் அவ்வாறு பிரார்த்தித்தார். பயணத்திலும் அழகிய காட்சிகளைக் காணவே விரும்பினார்.
அபுஸைத் அல்அன்ஸாரி என்ற தோழருக்காக பிரார்த்திக்கும் போது ‘இறைவா அவரை அழகு படுத்துவாயாக! அவர் அழகை தொடர்ந்திருக்கச் செய்வாயாக!’ (நூல்: அஹ்மத்)
மனத வாழ்வு முழுவதும் இந்த அழகைக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் போதித்தார். உலகுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வானத்துக்கு முகத்தைக் காட்டும் துறவு நிலையை அவர் ஆதரிக்கவில்லை.
உலகை அவர் அபசகுணமாகப் பார்க்கவில்லை. நற்சகுணமாகவே பார்த்தார். இந்த உடன்பாடான கண்ணோட்டம் அவரிடமிருந்தது. அழகிய பெயர் அவருக்கு பிடித்திருந்தது. இதுவும் அழகியல் ரசனையின் உச்சமாகும். உள்ளடக்கத்தை சுட்டும் ஒன்றுதான் தலைப்பு. பெயரே அழகாக இருந்தால் அந்தப் பெயரைச் சூட்டியவருக்குள் அழகியல் இருக்கும் என்பது நபிகளின் கணிப்பாகும். இப்னு அப்பாஸின் அறிவிப்பொன்று பின்வருமாறு அமைந்துள்ளது. இறைத்தூதர் நற்சகுணமாகவே பார்த்தார். அபசகுணமாகப் பார்க்கவில்லை. அழகிய பெயர் அவருக்குப் பிடித்திருந்தது’ (நூல்: அஹ்மத்)
உணவிலும் கூட அவர் அழகையும் ருசியையுமே விரும்பினார். தேனையும் அல்வாவையும் விரும்பினார் என்று புஹாரி, முஸ்லிம் ஆகியோர் தனது கிரந்தங்களில் பதிவுசெய்துள்ளனர். இனிமையான குளிர்ந்த பானமும் அவருக்கு விருப்பமாக இருந்தது என்று இமாம்களான திர்மிதியும் அஹ்மதும் குறித்துள்ளனர்.
ஆடையிலும் ரோமநாட்டு ஜிப்பாவே விரும்பி அணிந்தார். (நூல்: திர்மிதி) தங்க இழை பின்னப்பட்ட தீபாசு ஜிப்பா அன்பளிப்பாக கிடைத்த போது அதை அணிந்து கொண்டு பள்ளி மின்பரில் ஏறி, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் சற்று நேரம் இருந்து விட்டு கீழே இறங்கினார். மக்கள் அதைக் காணவேண்டும் என்றே விரும்பி என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு தோழர்கள் இதை விட அழகான ஆடையை நாம் கண்டதேயில்லை என்று கூறினர். அதற்கு நபிகள் ஸஃத் இப்னு முஆதின் கைக்குட்டை சுவனத்தில் இதைவிட அழகாக இருக்கும் என்றார். நபிகளுக்கு காயம் ஏற்பட்டு அந்தக் காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்த போது ஸஃதினுடை கைக்குட்டையால் தான் துடைக்கப்டபட்து. (ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத்) தன் தோழர்கள் இதுவரை காணாத ஆடையை தான் அணிந்திருந்த போது அதை விடச் சிறந்த ஒன்றை தனது தோழர்களுக்கு நினைவு படுத்துகின்றார்.
வீட்டு உபயோகப் பொருட்கள், தளபாடங்களிலும் அவர் அழகையும் பயன்பாட்டையும் விரும்பினார். நபிகளுக்காக அனஸ் பயன்படுத்திய பாத்திரம் அழகிய வெள்ளிப் பாத்திரம் என்று ஹுமைத் அறிவிக்கின்றார். (நூல்: அஹ்மத்)
உலகில் மூன்று மிகவும் விருப்பத்துக்குரியவை பெண்கள், நறுமணம், தொழுகை என்றார். ஆயிஷா நபிகளுக்கு தலைவாரி விடுவார். ஒரு முறை நபிகள் பள்ளியில் இஃதிகாப் தரித்திருந்த போது ஆயிஷா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. ஆயிஷா தலைவாரிவிடுவதற்கு தனது தலையை பள்ளிக்குள் இருந்து கொண்டு அருகிலிருந்த வீட்டு வாசலை நோக்கி சாய்த்துக் கொடுத்தார். (நூல்: அஹ்மத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகியலைப் பற்றி அவருக்குப் பணிவிடை செய்த அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வர்ணிப்பதைப் பாருங்கள்.
நபிகளின் வாசனையை விட சிறந்த அம்பரோ, கஸ்தூரியோ, வேறு நறுமணத்தையோ நான் முகர்ந்ததில்லை. நபிகளின் கையைவிட மிருதுவான தீபாஸையோ, பட்டையோ நான் தொட்டதில்லை. அவர் பிரகாசமான நிறத்தில் இருந்தார். அவரது வியர்வை முத்துப் போன்றிருந்தது என்று கூறுகின்றார். (நூல்: முஸ்லிம், அஹ்மத்)
அழகியலுக்கான இஸ்லாமியக் கோட்பாடு அவரது வாழ்வில் இருக்கின்றது. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்தும் வியபூட்டுவதாக உள்ளது. அவரது மனைவியும் நபித் தோழியுமான ஆயிஷா இறக்கைகள் கொண்ட பொம்மை விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். அப்பொம்மைகள் சுலைமானின் குதிரைகள் என்று பெயரும் தைதிருந்தார். நபிகளின் வீட்டுக்கு அயல் வீட்டுக் குழந்தைகள் வந்து விளையாடி விட்டுப் போய்விடுவார்கள். ஆயிஷாவின் தோழிகள் நபிகளைக் கண்டு வெட்கப்பட்டால் ஆயிஷா வோடு விளையாடி விட்டுச் செல்லுமாறு நபிகளே அத்தோழிகளை அழைப்பார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புதிய சிந்தனையோடு அரேபியாவுக்கு வருகின்றார். சிதறிக் கிடந்த இனக்குழுக்களை ஒருங்குபடுத்துகின்றார். அன்றைய அலைதல் வாழ்விலிருந்து வித்தியாசமான நாகரீக வாழ்வை உருவாக்குகின்றார். புதிய காலாசார அம்சங்களை உருவாக்குகின்றார். மனைவியுடன் ஓட்டப் போட்டியில் ஈடுபடுகின்றார். கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி விட்டு அவர் ஓட்டப்போட்டி நடத்தவில்லை. திறந்த வெளியில் பொது மக்களின் முன்னால் போட்டி நடக்கின்றது. இது வாழ்வின் அழகியலை எப்படியெல்லாம் நபிகள் ரசித்து வாழ்ந்துள்ளார் என்பதையே காட்டுகின்றது.
ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வெல்கிறார். மறுமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெல்கிறார்கள். முன்னைய தோல்விக்கு இது தான் பதில் என்று சிரித்துக் கொண்டு கூறினார். இதை விடவும் வாழ்வின் ரசிப்பைக் காட்ட முடியுமா? நபிகளின் இந்த வாழ்வை வியப்பூட்டுவதற்காக கூறவில்லை. இது மானிட இயல்பாகும். ‘வாழ்க்கையை ரசிப்பது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அழகியலைத் தேடுவதும் இயல்பான ஒன்றே’ (அல்குர்ஆன் - அல் கஸஸ் 77)
இறைவன் இயற்கையில் எல்லாவற்றையுமே அழகாக வெளிப்படுத்தி தந்துள்ளான். ஆக அவற்றை மனமுவந்து வரவேற்பதுதான் நாம் அவனுக்குச் செய்யும் கைமாறாகும். அது தான் நாம் அந்தக் கர்த்தாவுக்குச் செய்யும் காணிக்கை.
மனிதனின் மானுடத்தை மேலும் மேலும் உயர்த்தும் அத்தனை செயல்பாடுகளும் வழிபாடுதான். அம்பெறிதல், குதிரையைப்பேணல், பெண்ணுடன் கொஞ்சி விளையாடுதல் எல்லாமே நற்செயல், சத்தியம் என்று நபிகள் கூறுகின்றார். பெண்ணின் அழகை, அனுராகத்தை அனுபவிப்பதில் மற்றெல்லா தலைவர்களையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு படி மேலேதான் நிற்கின்றார்.

ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்

78:5 ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்

ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்
    ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)
    நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களை நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர். தஜ்ஜாலின் வருகை, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை, மேற்கில் சூரியன் உதிப்பது, அதிசயப்பிராணியின் வருகை ஆகியவற்றை இதுவரை கண்டோம். ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகுக்கு வருகை தருவதும் அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
    இந்த அடையாளத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் அடிப்படை விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் ஈஸா (அலை) அவர்களின் வருகை விஷயத்தில் சிலர் சந்தேகம் கொள்கின்றனர். தர்க்கரீதியான சில விவாதங்களை முன் வைத்து ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுக்கின்றனர்.
    அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்து விட்டால் – அந்த முடிவு நமக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும் நமது அறிவு அதை ஏற்கத் தயக்கம் காட்டினாலும் இதை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். ஏனெனில் நமக்கு விருப்பமில்லாதவற்றை முடிவு செய்யும் அதிகாரம் இறைவனுக்கு உண்டு. நமது அறிவு ஏற்க மறுப்பதையும் செய்து காட்டும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது.
    இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் எப்படி உயிருடனிருக்க முடியும்? அவர் எதை உண்கிறார்? அவர் எப்படி மலஜலம் கழிக்கிறார்? என்பது போன்ற கேள்விகளை இத்தகையோர் கேட்கின்றனர்.சாதாரண நிலையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது உண்மைதான். அல்லாஹ் நாடினால் இவ்வாறு நடத்திக் காட்டுவது சந்தேகப்படக் கூடியதன்று. அதிசயமான ஒரு விஷயத்தை சாதாரண நிலையில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பதை உணர்ந்தால் இவ்வாறு கேட்க மாட்டார்கள்.
    ஈஸா (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக இருந்த போது பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். (3:45, 5:110) இதுவும் சாதாரணமாக நடப்பது கிடையாது. ஆயினும் இறைவன் அவ்வாறு கூறுவதால் அதில் குதர்க்கம் செய்வதில் நியாயம் இல்லை. இறந்தவர்களை உயர்ப்பித்தல் சாதாரணமாக நடக்கக் கூடியதன்று. ஆயினும் ஈஸா (அலை) அவ்வாறு செய்ததாக அல்லாஹ் கூறுவதால் அதை நம்பித்தான் ஆக வேண்டும். இறைவனின் வல்லமைக்கு முன்னே இது பெரிய விஷயமன்று. களிமண்ணால் பறவை செய்து அதை நிஜப்பறவையாக மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமற்றவைதான் அதை அல்லாஹ் கூறுவதால் (3:49) அதையும் நம்பித்தான் ஆக வேண்டும். இது போல் பலநூறு விஷயங்களில் குதர்க்கமான கேள்விகள் கேட்க வழியுண்டு. ஆயினும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை நம்பத் தயங்க மாட்டார்கள். நம்பத் தயங்கினால் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நம்பியவர்களாக முடியாது.
    இறைவல்லமையை மறந்து அதைக் கேலி செய்யும் போக்குடையவர்களின் குதர்க்க வாதங்களுக்கு நாம் இதையே பதிலாக்குவோம்.
    இதைத் தவிர குர்ஆனின் சில வசனங்களைக் கொண்டு ஈஸா (அலை) அவர்களின் வருகையை மறுப்பவர்களும் உள்ளனர். அவற்றுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
    நான் உயிரோடிருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் எனக்கு போதித்துள்ளான். (19:31) என்று ஈஸா (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.
    ஈஸா (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடனிருந்தால் அவர்கள் இன்று வரை தொழ வேண்டும், ஸகாத் கொடுக்க வேண்டும். மக்களுடன் தொடர்பில்லாத அவர்கள் யாருக்கு எப்படி ஸகாத் கொடுப்பார்கள்? அவர்கள் ஸகாத் கொடுக்க வில்லை என்பது உறுதியானால் அவர்கள் உயிருடன் இப்போது இல்லை என்பதும் உறுதியாகின்றது என்பது இவர்களின் வாதம்.
    மேலோட்டமாகக் கேட்கும் போது இது நியாயமான வாதமாகவே படுகின்றது. சிந்திக்கும் போது இது அர்த்தமற்ற வாதம் என்பது புலனாகும்.
    அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் நிறைவேற்ற வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
    மூமின்களே! உங்கள் குரலை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான். மூமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் ‘அதற்கான சூழ்நிலை இருக்கும் போது’ என்று கூறாவிட்டாலும் அதுதான் பொருள் என விளங்குகிறோம்.
    ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விடமுடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.
    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்று அல்லாஹ் கூறுகிறான். (3:185, 21:35, 29:57) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும் என்பதற்கு முரணாக ஈஸா (அலை) உயிருடன் உள்ளனர் என்பது அமைந்துள்ளது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
    ஈஸா (அலை) அவர்கள் ஒருபோதும் மரணிக்கவே மாட்டார்கள் என்று கூறினால் இவர்கள் கூறக்கூடிய முரண்பாடு ஏற்படும். ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறக்கூடியவர்கள் ஈஸா (அலை) மரணிக்க மாட்டார்கள் என்று கூறுவதில்லை. அவர்கள் இவ்வுலகுக்கு வந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவுவார்கள் என்றே நம்புகின்றனர். மரணம் தாமதமாக வருகின்றது என்று தான் நம்புகின்றனரே தவிர மரணமே அவருக்கு வராது என நம்புவதில்லை. எனவே அந்த வசனத்தினடிப்படையில் ஈஸா (அலை) மரணித்து விட்டனர் என வாதிக்க முடியாது.
    ‘முஹம்மது அல்லாஹ்வின் தூதரைத் தவிர வேறில்லை, அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (3:144) ஈஸா (அலை) அவர்கள் உட்பட எல்லாத் தூதர்களும் சென்று விட்டனர் என்பதையே இது காட்டுகிறது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
    மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது சில நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். உடனே அந்த நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டதாக ஏற்றுக் கொண்டனர் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
    எல்லா நபிமார்களும் மரணித்து விட்டதாக இந்த வசனத்தை நபித்தோழர்கள் புரிந்து கொண்டிருந்தால் தான் நபியவர்களின் மரணத்தை நம்பியிருக்க இயலும். ஈஸா (அலை) மட்டும் மரணிக்கவில்லை என்று அம்மக்கள் நம்பியிருந்தால் இந்த வசனம் அவர்களின் தவறான நம்பிக்கையைப் போக்கியிருக்க முடியாது. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பினால் அதே போல நபி (ஸல்) அவர்களும் உயிருடன் இருக்க முடியும் என்று நம்புவதற்கு தடை ஏதுமில்லை. எனவே இந்த வசனமும், இந்த நிகழ்ச்சியும் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
    ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் இவர்களின் வாதம் வலுவானதுதான். ஆனால் ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றிய பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. (அதைப் பின்னர் காணவுள்ளோம்)
    அவர்களின் வருகை பற்றி ஏனைய ஆதாரங்கள் உள்ளதால் மேற்கண்ட வசனங்களிலிருந்து ஈஸா (அலை) மட்டும் விதிவிலக்குப் பெற்றுள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், அவர்கள் வருவார்கள் என்று கூறக்கூடிய ஆதாரங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
    ஈஸா (அலை) மரணிக்கவில்லை என நபித்தோழர்கள் நம்பியிருந்தால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தையும் அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள் என்ற வாதமும் ஏற்கக் கூடியதன்று. ஈஸா (அலை) அவர்களின் வருகையை நம்பக் கூடியவர்கள் அவர்கள் உயிருடனும் உடலுடனும் உயர்த்தப்பட்டார்கள் என்றே நம்புகின்றனர். உடல் இங்கே கிடக்க உயிர் மட்டும் உயர்த்தப்பட்டது என நம்புவதில்லை. நபித்தோழர்களும் இவ்வாறு நம்பியிருந்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்புவதற்கு தடை ஏதுமில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் உடல் கண் முன்னால் இருந்தது. அந்த உடலில் எந்த இயக்கமும் இல்லாமலிருந்ததும் அவர்களுக்குத் தெரிந்தது. ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் காணாமல் போனது போல் நபி (ஸல்) அவர்களும் உடலுடன் காணாமல் போயிருந்தால் ஈஸா (அலை) அவர்களைப் போலவே நபி (ஸல்) அவர்களும் உயிருடன் உள்ளதாக நம்பலாம். இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரியும் போது ஈஸா நபியைப் போல் நபியவர்களையும் அவர்கள் கருத வேண்டியதில்லை.
    ஈஸா நபி இன்றளவும் உயிருடன் இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. எனவே எங்கள் ஈஸா நபியே உங்கள் நபியைவிடச் சிறந்தவர் என்று கிறித்தவர்கள் வாதம் செய்வதற்கு இந்த நம்பிக்கை உதவி செய்கிறது. எனவே கிறித்தவர்களின் வாயை அடைக்க ஈஸா நபியின் மரணத்தை நம்பியே ஆக வேண்டும் என்பதும் அவர்களின் வாதம்.
    இது முட்டாள்தனமான வாதமாகும். ஒரு நபிக்குக் கொடுக்காத சில சிறப்பை வேறொரு நபிக்கு அல்லாஹ் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறான். ஓரிரு சிறப்பு உள்ளதால் எல்லா வகையிலும் ஒருவர் சிறந்தவராக முடியாது.
ஈஸா நபி தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள். நபி (ஸல்) அவர்களோ தந்தையின் விந்துத்துளி மூலம் பிறந்தார்கள். அதனால் ஈஸா நபியே சிறந்தவர் என்று கூட கிறித்தவர்கள் வாதிடலாம். இதனால் ஈஸா நபி தந்தைக்குத் தான் பிறந்தார் என்று கூற வேண்டுமா?

    இவர்கள் கூறியது போல் கிறித்தவர்கள் வாதம் செய்தால் அந்த வாதத்தை அறிவுப்பூர்வமாக சந்திக்க இயலும்.
    எவ்வளவு காலம் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் சிறப்பு ஏதுமில்லை. என்ன செய்திருக்கிறார் என்பதிலேயே சிறப்பு உள்ளது. இது பகுத்தறிவுள்ள அனைவரும் ஏற்கக்கூடிய வாதம் தான். இதை விளக்கமாக எடுத்துச் சொல்லி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும்.
    கர்த்தர் ஏசுவுக்கு அருளிய வேதம் இன்று வரை பாதுகாக்கப்பட வில்லை. தீமைக்கு எதிராக ஏசு போர் புரிந்ததாக வீர வரலாறு இல்லை. வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் சரியான தீர்வை ஏசு கூறியதாக பைபிள் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கோ இந்தச் சிறப்புக்கள் உள்ளன. இப்படி ஆயிரமாயிரம் சிறப்புக்களைக் கூறி அவர்களின் வாதத்தை முறியடிக்க முடியும். அவர்களின் தவறான வாதத்திற்காக சரியான உண்மையை மறுக்கத் தேவையில்லை.
    ஆக இது போன்ற வாதங்களை அலட்சியம் செய்து விட்டு ஈஸா (அலை)அவர்களின் வருகை சம்பந்தமான ஆதாரங்களைக் காண்போம்.
    இன்னும் மரியமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை சிலுவையில் அறையவுமில்லை எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:157,158)
    இவ்விரு வசனங்களையும் அல்லாஹ்வின் வல்லமையையும் உணர்ந்து, விதண்டாவாதமும் வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம்.
    ‘அவர்கள் அவரைக் கொல்லவில்லை’ என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத் தான் குறிக்கும். வேறுவழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று இவர்கள் சமாதானம் கூறுகின்றனர். அத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது சமாதானம் பொருத்தமானதே. ‘மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களும் கொல்லவுமில்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.
    அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கிறன்றனர்.
    அவருடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும் போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.
    அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகின்றது.
    ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம் வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எரிகின்றன.
    நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)
    ஈஸா (அலை) அவர்கள் இறுதிக்காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா (அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனி மேல் அந்த அடையாளம் எற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.
    கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதிலிருத்திக் கொண்டு அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட ‘மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்’ என்பது மிகத் தெளிவாக இந்த உண்மையைக் கூறி விடுகின்றது. ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூறமுடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
    கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
    ‘எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாக கதையளந்தனர். ‘யாரும் வாங்காத அளவுக்கு செல்வம் கொழிக்கும்’ என்பதற்கு எந்த சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
    முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் ‘போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்’ என்று நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்த போது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.
    ‘அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்’ என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்தப் பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.
    தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
    தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது நன்மைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். ‘லுத்’ (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன் (ரலி) நூல்: திர்மிதி)
    இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.
    (ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைக் கொன்ற பின் ஏற்படக்கூடிய நிகழ்ச்சிகளை யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிக் கூறும் போது குறிப்பிட்டுள்ளோம். அதையும் பார்த்துக் கொள்க)
    ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.

தொடர்புடைய ஆக்கங்கள்

கல்வியறிவு பெற்றோர் 74

இந்திய மக்கள் தொகை 121.2 கோடி!-கல்வியறிவு பெற்றோர் 74%

Cricket Scores
3rd Test , Edgbaston, Birmingham
England: 93 / 0, 27.5 Overs
Literacy Rate
Ads by Google
Keep Environment Green 
Become pure air lover society member. Join Now ! www.pals.in/Environment
Ads by Google
Test Drive Fiesta Classic  India.Ford.com/Fiesta_Classic
Thrilling Performance, Better Fuel Efficiency & Refreshing Interiors!
டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

English summary
According to the provisional 2011 Census report released today, India's population pegged at 1,210.2 million (Male--623.7 million and Female--586.5 million). India's population growth in 2011 is 17.64 per cent in comparison to 21.15 per cent in 2001. Since the last census, population has increased by 181 million.
மார்ச் 31, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க

கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியலில் எதுவும் நடக்கலாம்-ராமதாஸ்

சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதியை இன்று ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.அவருடன் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார்.....

சென்னை மக்கள் தொகை 50.5 லட்சம்!

சென்னை: தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.65 கோடியாக உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 50.5 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மேயர் சுப்பிமணியமன் கூறினார். சென்னை மாநகராட்சியி்ன் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி மாநகராட்சியில் நடந்த விழாவில் பேசிய சென்னை மேயர் சுப்பிரமணியன், 1987ம் ஆண்டு உலக.....

இந்திய மக்கள் தொகை



First Published : 01 Apr 2011 12:00:00 AM IST


புது தில்லி, மார்ச் 31: இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் இங்கு வாழ்கின்றனர்.அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக்கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கம் விகிதம் 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001-ல் மக்கள் தொகை பெருக்க விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி இத்தகவலை செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையும் இருந்தார்.முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்: மக்கள் தொகை அதிகம் வாழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 19.90 கோடி பேர் வசிக்கின்றனர். மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 64,429 பேர் வாழ்கின்றனர்.உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் மக்கள் தொகை அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.மிக அதிக அளவில் தில்லியின் வடகிழக்கில் சராசரியாக 37,346 சதுர மீட்டர் பரப்பில் ஒருவர் வசிக்கின்றனர். அருணாசலப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் வீதம் வசிக்கின்றனர்.பெண்குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந்தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்று சந்திரமெüலி கூறினார்.எழுத்தறிவு: எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவீதமாக உள்ளது. 2001-ம் ஆண்டு இது 64.83 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2001-ல் 53 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவீதமாகவும், ஐஸ்வாலில் 98 சதவீதமாகவும், கேரளத்தில் 93 சதவீதமாகவும் உள்ளது.மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவீதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவீதத்துக்கும் அதிகமான கல்வியறிவு பெற்றோரைக் கொண்டவையாக உள்ளன.6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். ஐந்து மாநிலங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.மக்கள் தொகை நெருக்கம் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 382 பேர் வசிக்கின்றனர். இது 2001-ல் 325 ஆக இருந்தது.இப்போது மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியா மேற்கொண்ட 15-வது கணக்கெடுப்பாகும். 1872-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்முறை இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2001 பிப்ரவரி 2 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கான செலவு ரூ. 2,200 கோடி. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 27 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியில் 8 ஆயிரம் டன் பேப்பரும், 10,500 டன் எடையுள்ள பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தேசியக் கொடி

இந்திய தேசியக் கொடிhttp://tawp.in/r/cbw

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தேசியக் கொடி
FIAV 111000.svg உயர நீள பாகுபாடு: 2:3
இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] கொடி உருவாக்கம்

தேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும்.
வண்ணம் HTML CMYK துணி வண்ணம் பான்டோன் வண்ணம்
காவி #FF9933 0-50-90-0 சிவப்பு 1495c
வெள்ளை #FFFFFF 0-0-0-0 குளிர் சாம்பல் 1c
பச்சை #138808 100-0-70-30 இந்திய பச்சை 362c
கடற்படை நீலம் #000080 100-98-26-48 கடற்படை நீலம் 2755c

[தொகு] கொடியின் அம்ச பொருள் விளக்கம்

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.

[தொகு] வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன.
கல்கத்தா கொடி
முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.
பைக்கஜி காமா அம்மையார் ஏற்றிய கொடி, 1907
பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடியில், பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்கு பிறகு, பெர்லின் குழுமக் கொடி என பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமேரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.
1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி.
பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறவில்லை.
1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி.
ஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசிய கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தை கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.
அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது.
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி.
இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.
இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.
அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.
1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.

[தொகு] கொடி தயாரிப்பு முறை

கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1 6300 × 4200
2 3600 × 2400
3 2700 × 1800
4 1800 × 1200
5 1350 × 900
6 900 × 600
7 450 × 300
8 225 × 150
9 150 × 100
India's largest flag atop the Mantralaya building in Mumbai.
Closeup of the flag.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.