புதன், 17 ஆகஸ்ட், 2011

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?


(தற்போது சில கிறிஸ்தவ தளங்களில் பைபிளில் தடைசெய்யப்பட்ட இயேசுவால் தடுக்கப்பட்ட - அதே சமயம் பவுலால் அனுமதிக்கப்பட்ட பண்றியின் மாமிசத்தை (PORK) உண்ணலாம் என்று போலி உமரால் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அந்த கட்டுரையில் உள்ள மடத்தனமான - முட்டாள்தனமான வாதங்களுக்கும் பதிலாக அவர்களாலேயே எதிர் கேள்விகள் எழுப்பப்பட்டு பதிவுகள் இடப்பட்டுள்ளது. (புகழனைத்தும் இறைவனுக்கே)

பண்றியின் மாமிசத்தை உண்ணுவது என்பது இயேசுவின் கொள்கைக்கும் பழைய ஏற்பாட்டுக் கொள்கைக்கும் எதிரான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. (பார்க்க லேவியராகமம் 11:7- 8, மத்தேயு - 5:17-19) இவற்றுக்கொல்லாம் மாற்றமாக இன்றைய கிறிஸ்தவத்தின் நிறுவனரான பவுலால் அனுமதிக்கப்பட்ட இந்த பண்றியின் மாமிசத்தை உண்பது கூடும் என்று நியாயப்படுத்தும் உமரின் கட்டுரைக்கு கிறிஸ்தவர்களாலேயே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு - எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றது என்பதைப் பார்க்கும் போது போலி உமரின் போலித்தனங்களை முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் உணரத் தொடங்கி விட்டனர் என்பது புலனாகின்றது.

எது எப்படி இருந்தாலும், இந்த பண்றியின் மாமிசத்தை இஸ்லாம் தடை செய்தது ஏன்? என்பது குறித்து சகோதரர் ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கத்தை இங்கே தருகின்றோம் -ஏகத்துவம்)


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
பதில்: இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

சில கிருஸ்தவ மதபோதகர்கள் பொதுக்கூட்டத்தை கூட்டி ஜெபத்தினால் முடவனுடைய கால்களை குணமாக்குகிறோம், பிரவிக் குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம், ஊமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா?

ஏமாறாதே!

சில கிருஸ்தவ மதபோதகர்கள் பொதுக்கூட்டத்தை கூட்டி ஜெபத்தினால் முடவனுடைய கால்களை குணமாக்குகிறோம், பிரவிக் குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம், ஊமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறுகிறார்கள் இது உண்மையா?
தேவன் அல்லாஹ்வுடைய விசுவாசியின் பதில்கள்
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தான் எந்த மதத்தை சார்ந்து வாழ்கிறானோ அந்த மதம்தான் தலைசிறந்த மதம் என்றும் அதுதான் தன்னை சுவர்கத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் தீர்மானிக்கிறான் இந்த குருட்டு நம்பிக்கையின் பிரகாரம் தன் வாழ்க்கை அமைத்துக்கொண்டு தன் மதத்தை பரப்புகிறான். ஆனால் மக்கள் இந்த மதங்களை விரும்புகிறார்களா? என்றால் இல்லை மாறாக அவர்கள் ஏதாவது ஒரு அதிசயத்தை கண்களால் கண்டால்தான் அந்த மதம் உண்மை சொல்கிறது என்று நம்புவார்கள்.
மக்களை திசை திருப்ப மத நாடக கூட்டங்கள்
கிருத்தவர்கள் பொதுமக்களை திசை திருப்பி தங்கள் மதத்தை பரப்ப தங்களுடைய மதத்தின் பெயராலும், ஏசு என்ற தீர்க்க தரிசியின் பெயராலும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுகிறோம் என்று பொய்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதோடு மட்டும் நின்றுவிடாமல் பொதுமக்களிடமிருந்து தேவ ஊழியங்களுக்கு காணிக்கை செலுத்துங்கள் என்று கணிசமான தொகையை சுரண்டவும் வழிவகை செய்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடத்திற்கு 3 பொது கூட்டங்கள் குறையாமல் போடுவார்கள் அந்த கூட்டத்தில் பிறவிக்குருடனுக்கு பார்வை வரவழைக்கிறோம்! சப்பானியின் கால்ககளை குணமாக்குகிறோ்ம! உமையை பேச வைக்கிறோம், பிசாசு பிடித்தவனை குணமாக்குகிறோம் என்று கூறி ஜெப கூட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில் பெரும்திரளாக உடல் ஊணமுற்ற மக்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துக் கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள் இதை மனித உரிமை அமைப்பும் வேடிக்கை பார்க்கிறது!
அப்பாவிகளை ஏமாற்றும் ஜெப ஆராதணை கூட்டங்கள்
ஜெபத்தால் உடல் குறைகள் குணமாக்குவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கண்பார்வையற்ற, கால்கள் முடமான, வியாதிகளால் அவதிப்படக்கூடிய மற்றும் புத்திசுவாதீனமற்ற குழந்தைகளுக்கு சுவரொட்டிகள் மூலமாகவோ, மீடியாக்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த அப்பாவி குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் ஏதோ நல்லது நடந்தால் போதும் என்று எண்ணி லட்சம்பேர் பங்கேற்கும் அந்த பொதுக்கூட்டங்களில் தட்டுத் தடுமாறி அடி உதைபட்டு கூட்டத்தின் நடுவே புகுந்து நம்மை இந்த பாதரியார் எப்போது அழைத்து குணமாக்குவார் என்று ஏங்கித் தவிப்பார்கள் இந்த கோர காட்சிளை காணும்போது எறிச்சல்தான் வரும்! ஊணமுற்ற நபர்களும் அவர்களது பெற்றோரும் நமது நேரம் எப்போது வரும் என்று அழுவார்கள், தவிப்பார்கள், ஏசுவே ஏசுவே என்று சப்தமாய் புலம்புவார்கள்! இந்த புலம்பல்களை மேடையில் அமர்ந்திருக்கும் கிருஸ்தவ பாதரியார்கள் ரசித்துக்கொண்டே அல்லேலூயா என்ற கத்துவார்கள் பிறகு தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு அழைத்து வந்திருக்கும் அறைகுறை ஊணமுள்ள நபர்களை மேடையில் ஏற்றிவிட்டு ஜீஸல் காப்பாத்துங்கோ என்று ஒப்பாரி வைப்பார் உடனே அந்த மேடையில் நடிக்க வந்திருக்கும் அறைகுறை சப்பானியோ கால் வந்துவிட்டது என்று துள்ளி குதித்து நாடகமாடுவான் இதை காணும் கூட்டத்தார் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று கருதும் வேளையில் அந்த அல்லேலுயா பாடிய பாதரியாரோ இயேசு வந்து தன்னிடம் பேசினார் நான் அவரை பார்த்தேன் அவர் என் மீது ஆசிர்வாதமாய் இறங்கினார் என்று பொய்யை இட்டுக்கட்டுவான்! அங்கேயே ஒப்பாரிகளி்ன ஓலங்கள் அரங்கேறும்.
இப்படி ஊரை ஏமாற்றும் போலி பாதரியார்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது!
சுத்தமான இருதயமுள்ள கிருத்தவ சகோதர சகோதரிகளே சற்றே சிந்தித்துப்பாருங்கள் முடவர்களை ஏமாற்றுவது இயேசு கற்றுத் தந்த வழியா இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களே இது கூடுமா? இதோ உங்கள் பைபிளின் இந்த வசனம் என்ன போதிக்கிறது என்று சற்று கூர்ந்து கவனியுங்கள்!
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். (நீதிமொழிகள் 14:05)
ஆம் சுத்தமான இருதயமுள்ளவர்கள் இந்த பித்தலாட்டங்களை எதிர்ப்பார்கள் ஆனால் இப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கிருத்தவ மதத்தில் எத்தனைபேர் உள்ளனர். இந்த பித்தலாட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் கிருத்தவர்களே உங்கள் போலி பாதரியார்கள் ஊணமுற்றோரை குணமாக்குகிறேன் என்று பொய்களை அவிழித்து விடுகிறார்களே அப்போ மேலே உள்ள பைபிள் வசனத்தில் உள்ள நீதிமொழியான பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான் என்ற வார்த்தை உங்களால் 100க்கு 100 உண்மையாகிவிட்டதே! இதற்கு உங்கள் பதில் என்ன? மேலும் இந்த பொய் பித்தலாட்டங்களை நீங்கள் எதிர்க்காமல் இருப்பதனால் நீங்களும் பொய்யர்களின் ஆதரவாளர் களாக மாறிவிட்டீர்கள் எனவே இதோ உங்கள் தேவனாகிய (அல்லாஹ்) கீழ்கண்டவாறு பைபிளில் கூறுவது பற்றி சற்றே செவிதாழ்த்தி கேளுங்கள்!
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். (நீதிமொழிகள் 12:22)
இனிமேலாவது ஜீஸல் காப்பாத்துங்கோ! அல்லேலுயா! என்று மேடை ஏறி ஒப்பாரி வைக்கும் போலிப் பாதரியார்களை எதிர்த்து நில்லுங்கள்!
இந்த ஜெப ஆராதனை கூட்டம் மோசடி என்பதற்கு ஆதாரம்
நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
ஈரோடு (மே 07, 2010)
தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ‘புது சிருஷ்டி சபை’ என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். ‘சபைக்கு வந்து ‘ஜெபம்’ செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்’ என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.
ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, ‘சிறிது நேரத்தில் சரியாகி விடும்’ என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.
சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது:
சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், ‘சுமதிக்கு நோய் சரியாகி விடும்’ என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், ‘சுமதிக்கு ‘பேய்’ பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்’ எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. ‘மாத்திரை கொடுக்கலாம்’ என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.
கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ”கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,” என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி- தினமலர்
முடிவுரை
சுத்த இருதயமுள்ள கிருத்தவர்களே சற்று கீழ்கண்ட வசனத்தை படித்துப்பாருங்கள் இந்த வசனத்தில் ஊணமுற்றோர் இயேசு என்ற தீர்க்கதரிசியின் மூலம் குணமாக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த இயேசுவுக்கு வல்லமை கொடுத்தது யார்? தேவன் (அல்லாஹ்)தானே!
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. (மத்தேயு 11:5)
மேற்கண்ட இந்த வசனத்தை படித்துக்கொண்டு தாங்களும் ஊணமுற்றோரை குணப்படுத்துவோம் என்று கூறும் உங்கள் போலி பாதரியார்கள் எல்லோரும் இயேசுவின் அவதாரமாகி விட்டார்களா? அல்லது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களா? அப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் பைபிளில் உள்ள தேவனுடைய அதிகாரம் கொண்ட தேவ வார்த்தைகளை காட்டுங்கள்.
இதோ ஊணமுற்றோரை இயேசு குணமாக்கினாலும் அக்கால மக்கள் இயேசுவை பாராட்டினார்களா? ஆதாரம் இதோ
இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். (மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:8)
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (நீதிமொழிகள் 16:16)
அன்புக் கிருத்தவர்களே இயேசு என்பவர் தேவகுமாரனில்லை அவர் முஸ்லிம் அவர் நபிமார்களில் (இறைதூதர்கள்) ஒருவர் எனவே ஏசுவின் மார்க்கமான இஸ்லாத்திற்குள் வாருங்கள்!
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். (நீதிமொழிகள் 13:16)

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?


தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?

தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!
பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!

தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்
குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.
மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!
பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.
முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!

தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?
மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!
ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்
நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!

தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?
முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.

தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!

தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி
1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!

தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்
இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!

இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை  பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?

இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன
1. முதல் கலிமா
அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்

2. ஐவேளை தொழுகை
உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!

3. இலம் மற்றும் ஜிக்ரு
அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது

4. இக்ரமே முஸ்லிம்
தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது

5. இக்லாஸ்-ஏ- நிய்யத்
மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!

6. தாபிர்-ஏ- வக்த்
குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்

புதிய தத்துவம் எண் 7
மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.

சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான  தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!
தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்

இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!

அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!

தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்
தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.
தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது
வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!
வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!

சர்வதேச தப்லிக் கூட்டம்
முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA-World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.

இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.

தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?
அரசியல் தலைவர்கள்
  • பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
  • பரூக் லெஹரி,
  • நவாஸ் ஷெரீப்,
  • முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
  • பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்

கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்
  • ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
  • ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
  • இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
  • முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
  • சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
  • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
  • மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
  • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
  • பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
  • குல்ஜார் ஆலம்
  • ஆலம்ஜேப் முஜாஹித்
  • தலைசிறந்த எழுத்தாளரான  டாக்டர் நாதிர் அலிகான்

(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).
தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?

மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!

அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான் என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)

அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 2:86)

நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)

நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?
அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)

தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)

அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)
ஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமனவர்கள் (23-103)

சிந்திக்க சில தேன் துளிகள்
  • இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?

  • இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது  உண்டா?

  • இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?

நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

அழகிய அழைப்பு
தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.
குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!
குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)
அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!
குறிப்பு
இந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்!
தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல்  அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா? ஏன் இந்த இருதலைப்பட்சம்!
ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்!

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் (அல்குர்ஆன்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – (அல்குர்ஆன் 6:108)
பிற மதத்தவர்கள் வணங்குபவற்றை ஏசக்கூடாது என்று நம் மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்ற எளிமையான மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்கக்கூடாது என்று ஓரிரைக்கொள்கையை போதிக்கிறது ஆனால் இந்த கொள்கையை தகர்க்கும் விதமாக வரம்பு மீறி மாற்றுமதத்தவர்கள் நம் மார்க்கத்தை தங்கள் வழிபாட்டுத்தளங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சபரிமலை ஐயப்ப கோவில் அதற்கு உதாரணமாக விளங்குகிறது. எனவே உண்மையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவற்றை பற்றி ஏசவில்லை மாறாக விளக்கிக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். (மாற்றுமதத்தவர்கள் மன்னிக்கவும்)
1)      ஐயப்பன் பிறப்பு எத்தகையது
2)      ஐயப்பன் கடவுளா? மனிதரா?
3)      ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!
4)      வாபர் (வாவர்) பற்றிய கட்டுக்கதைகள்
5)      வாவர் என்பவர் முஸ்லிமா?
6)      வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்களும் ஆதாரங்களும்
ஐயப்பன் பிறப்பு எத்தகையது

ஐயப்பனுக்கு தகப்பன் யார்?
சைவ சமயத்தில் மூன்று ஆண் கடவுள்களை தங்கள் முக்கிய கடவுள்களாக வகுத்துள்ளார்கள் அவர்களை மும்மூர்த்திகள் என்று அழைப்பார்கள் அவர்களின் பெயர்களாவன:
  • பிரம்மா (படைத்தல்),
  • விஷ்ணு (காத்தல்,)
  • சிவன் (அழித்தல்)

இந்த மும்மூர்த்திகளில் சிவன் (அழிக்கும் கடவுள்) என்ற வஸ்துவை இந்துக்கள் தங்களின் பிரதான கடவுளாக கருதுகிறார்கள். இந்த சிவன்தான் ஐயப்பனின் முதல் தகப்பன் என்று ஐதீகம் கூறுகிறது.

ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர்!
ஐயப்பனின் பிறப்புதான் இங்கு சர்ச்சையை உருவாக்குகிறது அதாவது மும்மூர்த்திகளில் சிவன் மற்றும் விஷ்ணு என்ற இரண்டு ஆண்கடவுள்களும் உடலுறவு கொண்டு பிறந்தவர்தான் ஐயப்பன்! ஓரினச் சேர்க்கை எவ்வாறு நிகழந்தது என்று அந்த ஐதீகமே விளக்குகிறது.
விஷ்ணு என்கிற ஆண்கடவுள் மோகினி என்ற பெண்ணாக உருமாறி சிவனை மயக்கி உறவு கொண்டராம் இந்த உறவின் அடையாளம்தான் ஐயப்பனாம்! இது முழுக்க முழுக்க ஓரினச் சேர்க்கைதானே.

இங்கு கேள்வி என்னவெனில் 
  • படைக்கும் பிரம்மா இருக்கும் போது ஏன் அவர் ஐயப்பனை படைக்கவில்லை மேலும் ஏன் சிவனையும், விஷ்ணுவையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ஐயப்பனை படைத்தார்.

  • பிரம்மா நாடியிருந்தால் மோகினி என்ற பெண்ணை படைத்துவிட்டு அந்த பெண்ணை சிவனிடம் உறவுக்கு அனுப்பி ஐயப்பனை படைத்திருக்கலாமே ஏன் இவ்வாறு செய்வில்லை!

  • சிவன் நெற்றிக்கண்ணால் கூட பார்க்க வல்லமை படைத்தவர் என்கிறார்கள் அப்படியானால் இந்த மோகினி வேடத்தில் வந்த விஷ்ணுவை இந்த சிவனால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை

  • சிவனும் விஷ்ணுவும் இரண்டு ஆண் கடவுள்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு மோக கழியாட்டம் போடுவதை ஏன் பிரம்மா தடுக்கவில்லை அல்லது தேவாதி தேவர்கள் ஏன் புலம்பவில்லை!

  • சிவனுடைய பாதி அங்கம் பார்வதியாக இருக்கும்போது விஷ்ணு பெண் வேடமிட்டு அவரிட்ம உறவு கொண்டது சிவனுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

ஐயப்பனின் பிறப்பே கற்பனையாக உள்ளது அதை நியாயப்படுத்த இஸ்லாமியர்களின் பெயர்களை இணைத்து கூட்டு சேர்த்துள்ளார்கள். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னப்பா சம்பந்தம்?

ஐயப்பன் கடவுளா? மனிதரா?
ஐயப்பனின் பிறப்பை பற்றி குறிப்பிடும் போது அந்த நபர் கேரள நாட்டு பாண்டாலம் பகுதியின் மன்னருடைய வளர்ப்பு மகன் என்று கூட செய்தி கிடைக்கிறது. அந்த காலத்தில் பாண்டாலம் பகுதியை ராஜராஜசேகரன் என்ற மன்னர் ஆண்டு வந்தானாம் இவர் ஒரு நதிக்கரையோரம் வேட்டையாட சென்றானாம் அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த நதியில் தென்பட்டதாம் சென்று பார்த்த போது அங்கு ஒரு குழந்தை இருந்ததாம் அதன் கழுத்தில் விலைமதிப்பற்ற மணி மாலை இருந்ததாம் அதனால் அந்த குழந்தையை மணிகண்டன் (மணியை கழுத்தில் அணிந்தவன்) என்று அழைத்தாராம்.
இந்த மன்னர் தீவிர சிவ பக்தனாம் மேலும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடையதாம் இதனால் நதிக்கரையோரம் கண்டெடுத்த குழந்தை மணிகண்டனை சிவன்தான் கொடுத்தான் என்று நம்பினானாம். மன்னர் இந்த மணிகண்டனுக்கு கல்வியையும் மற்ற கலரிபயட்டு என்ற வர்மக்கலைகளையும் கற்றுத்தந்தானாம். (கடவுளின் குழந்தைக்கு கலரிப்பயட்டு தெரியதா?)
மணிகண்டன் கிடைத்த பிறகு ராணி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாலாம் ஆனால் ராஜராஜசேகரனோ ஐயப்பன்தான் தனது மூத்தமகன் அவன்தான் பட்டத்து இளவரசன் என்று கூறினானாம்.

ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்!
சபரி மலையிலுள்ள ஐய்யப்பன் கோவில் பழமை வாய்ந்த நிலையில் இருந்ததாகவும் அதை மீண்டும் புதிய பொழிவுடன் வடிவமைத்து மறுநிர்மானம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மறுநிர்மானம் ஐயப்பன் கூறிய முறையில் நடைபெற்றதாகவும் அந்த பக்தர்களால் நம்பப்படுகிறது. புதிய கோவிலுக்கு கிழக்கு பார்த்த வாசலும் 18 படிக்கட்டுகளும் கட்டினார்களாம். 
இந்த 18 படிக்கட்டுகளின் பின்னனி 
5 படிக்கட்டுகளை இந்திரியா என்றும், எட்டு படிக்கட்டுகளை ராகா என்றும், 3 படிக்கட்டுகளை குன, வித்ய, அவித்ய என்றும் தீர்மாணித்து வடிவமைத்தார்களாம். இந்த 18 படிக்கட்டுகளையும் பாதுககாக்கும் பணியை வார் (வாபர்) மற்றும் கடுத்தா ஆகியோர்தான் கவனிக்க வேண்டும் என்று ஐயப்பன் கூறினானாம். மேலும் 18வது படிக்கட்டு வாவர் என்ற தனது முஸ்லிம் நண்பருடைய நினைவாக கட்டப்பட்டதாக இவர்கள் நம்புகிறார்கள்.

வாவர் (வாபர்) பற்றி கட்டுக்கதைகள்
கடுத்தசுவாமி மற்றும் வாவர்சுவாமி (வாபர்) ஆகியோரின் கதைகள் பூதநாத புராணத்தில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடுத்தசுவாமி என்பவரது கதை
இவன் பாண்டல நாட்டு ராஜாவின் படைத்தளபதியாம். இவன் கரடு முரடான மலைகளில் தந்திரமாக போர் நடத்தும் திறமைசாளியாம். பாண்டிய மன்னர்களை வெற்றிகொண்ட மாவீரனாம் இதனால் கடுத்தா என்ற கடுத்தசாமியை மன்னர் தனது பாதுகாவலராக தேர்ந்தெடுத்தராம். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இவன் அந்த சபரிமலையை மறு நிர்மாணிக்கும் பணியை செய்தானாம் மேலும் தீவிர ஐயப்ப பக்தனாக மாறினானாம்.
வாவர் என்ற முஸ்லிம் என்பவரின் பிறப்பு பற்றிய சர்ச்சை 
கதை 1   ஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14 மற்றும் 15ம் ஆம் நூற்றாண்டுகளில் (ஆங்கில நாட்காட்டிப்படி கிருஸ்துவுக்கு பின் 1301 முதல் 1400ம் ஆண்டு வரை) வாவர் என்பவர் வாழந்துவந்ததாக கூறுகிறார்கள். இந்த வாவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள். 
கதை 2   இந்த வாவர் என்ற மனிதன் பாண்டிய தேசம் என்று அழைக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவராம். மேலும் திருமலைநாயக்கன் என்ற பாண்டிய மன்னனுடைய படையெடுப்பின் போது வாவருடைய குடும்பம் திருவணந்தபுரத்தை தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
கதை 3  வாவர் என்ற இந்த மனிதர் அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க இந்தியா வந்தாராம். 
கதை 4  வாவர் என்பவன் ஒரு கடல்கொள்ளையனாம் இவன் கப்பலில் பயணம் செய்து நாடுகளை கொள்ளையிட்டு வந்தானாம் இறுதியாக ஐயப்பனிடம் போரிட்டு தோற்றுப்போனானாம்.  இறுதியாக ஐயப்பனிடம் சரணடைந்து அவனுடைய பக்தனாக மாறினானாம். இவன் போரிட்டதற்கு ஆதாரமாக பழைமையான ஒரு வாள் இன்று கூட அந்த தர்காஹ்வில் வைத்துள்ளார்களாம். இறுதியாக ஐயப்பனே பாண்டல தேச மன்னருக்கு ஆணை பிறப்பித்து வாவருக்கு என்ற தனது நண்பருக்கு எருமலி என்ற இடத்தில் ஒரு தர்காஹ் கட்ட ஆணையிட் டனானாம்.
கதை 5  வாபர் என்பவன் ஒரு முஸ்லிம் என்றும் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். இந்த வாபர் என்ற வழிபறி கொள்ளைக்கூட்டத் தலைவன் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவன் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்ததாகவும் அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள். எனவே அரசர்கள் ஐயப்பனிடமே முறையிட்டதாகவும். ஐயப்பனே வாபர் என்ற முஸ்லிமை காணச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் சிறுவனாக இருந்தானாம் வாபரை கொல்ல முயன்றானாம் அப்போது வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டானாம்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றாரனாம் அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது.  வாபருக்கு ஐயப்பன் கொடுத்த வாக்குறுதி 
எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது பள்ளிவாசலுக்கும் வருவார்கள் அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.  இதன்படி
சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டானாம்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக ஐயப்ப பக்தர்கள் நம்புகிறார்களாம். இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இங்கு உண்மை நிலை என்ன? 
  • ராஜராஜசேகரன் ஒரு மனிதன் பாண்டலநாட்டு அரசன்
  • மணிகண்டன் என்பது நதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
  • கடுத்தசுவாமி என்பவன் ராஜராஜசேகரனின் படைதளபதி
  • வாவர் என்பவர் போர் திறமை பெற்றவன் (வாள் உள்ளது)

இங்கு முஸ்லிம்களின் பெயரை தங்களுடன் சாதகமாக பயன்படுத்தி அந்த நபரை பற்றி நான்கு கதைகள் புணையப் பட்டுள்ளன. வாவர் என்பவர்
1)      பிராமண மதத்தவர் மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தார்
2)      மதுரையை சேர்ந்த தமிழர்
3)      அரேபிய நாட்டிலிருந்து இஸ்லாத்தை போதிக்க வந்தவர்
4)      கடல் கொள்ளையன் (வாள் ஆதாரமாக உள்ளது)

வாவர் உண்மையில் முஸ்லிமா? 
வாவர் என்பவர் உண்மையிலேயே அரேபியநாட்டிலிருந்து வந்து இந்தியாவில் இஸ்லாத்தை பரப்புபவராக இருந்திருந்தால் ராஜராஜசேகரன் என்ற பாண்டல நாட்டு மன்னனிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்து மடிந்திருக்க வேண்டும் அல்லது அந்த மன்னரை முஸ்லிமாக மாற்றியிருக்க வேண்டும் இங்கு இந்த இரண்டு காரியங்களும் நடைபெறவில்லை எனவே வாவர் என்பவரை அரேபியர் என்று நம்புவது இயலாத காரியமாகும் காரணம் அரேபியாவிலிருந்து வந்த நபர் இங்கு வந்து மார்க்கத்தை பரப்பி ஐயப்பனின் காலில் சரணாகதியாகி அவனுடைய தாசனாக இருப்பதைவிட அரேபியாவிலேயே தங்கி அங்கேயே தடம்புரண்டு வாழ்ந்திருக்கலாம். எவனாவது மார்க்கத்தை பரப்ப கடல்கடந்து வந்து ஐயப்பனை வழிபடுவானா?
மதுரையை சேர்ந்த தமிழர் என்றும் கேரளத்தை சேர்ந்த பிராமணர் என்றும் மதம் மாறி இஸ்லாத்திற்குள் வந்தவர் என்றும் கூறப்படுகிறது மேலும் கடல்கொள்ளையன், வழிப்பறி கொள்ளையன் என்ற மற்றுமொரு கதையும் உள்ளது இந்த 3 கதைகளை வைத்து பார்க்கும் போது இந்த வாவர்
  • தமிழ் பேசும் தமிழனாக இருக்கலாம்!

  • பிராமனராக வாழந்தவர் என்று கூறப்படும் செய்தியின் அடிப்படையில் மாற்றுமதத்தவராக கருதப்படும் இவர் இஸ்லாத்தை சீரழிக்க முஸ்லிமாக நடித்திருக்கலாம்!

  • பிராமண மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவியவர் என்ற கோணத்தில் பார்த்தால் இந்த வாவர் என்ற மனிதர் அல்லாஹ்வின் மீதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறியாதவராகவும், தமிழகத்து தர்காஹ்களை பார்த்துவருவோம் என்ற ஸ்டைலில் தர்காஹ் வழிபாடுகளில் ஈடுபாடு கொண்ட இணைவைப்பாளராக கூட  இருந்திருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது ஆனாலும் தர்காஹ்வாதியான எந்த இணைவைப்பாளரும் அவ்லியாவை வணங்குவார்களே தவிர ஐயப்பனை வழிபடமாட்டார்கள். கூறுவதற்கே கஷ்டமாக உள்ளது!

  • கொள்ளைகாரன் என்று கூறும்போது பெண், பொன் மற்றும் பொருளாசை கொண்டவராக இருந்து அதற்கு அடிமையாகி ஐயப்பன் என்ற பெயர் கொண்ட அநாதை மனிதனும் பட்டத்து இளவரசனாகிய மணிகண்டனிடம் (கடவுள் கிடையாது) தன்மானத்தை இழந்தவராக இருந்திருக்கலாம். அற்ப இலாபத்திற்காக கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் யாரிடமும் அடிபணியமாட்டார்கள் என்பதும் உண்மைதான் எனவே உண்மையில் வாவர் கொள்ளையனாக இருந்திருந்தால் ஐயப்பனுக்கு அடிமையாக வாழ்வதைவிட வேறு பகுதிக்கு தப்பி ஓடி கொள்ளையடித்திருக்கலாம்!

எனவே வாவர் என்ற ஒரு நபர் இருந்திருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது! காரணம் அவருடைய தர்காஹ்வில் சமாதி கிடையாது! 


வாவர் தர்காஹ்வில் நடைபெரும் கூத்துக்கள் 
சபரிமலையில் உள்ள 18 படிகட்டுகளில் இறுதியாக உள்ள 18ம் படிக்கட்டு வாவர்சாமி படிக்கட்டு என்று பெயராம். அதே சமயம் வாவர் தர்காஹ அந்த மலைப்பாததையில் அமைந்துள்ளதாம் இந்த பகுதிக்கு எரிமேலி என்று பெயர். 
இந்த இடத்தில் ஐயப்பன் அரக்கியை கொன்றானாம் இதை கொண்டாடும் விதமாக அவனுடைய பக்தர்கள் உடலில் வண்ணப்பொடி பூசி, இலை, தழைகளை கட்டிக்கொண்டு, மரத்தாலான ஆயுதங்களுடன் மேளதாளம் முழங்க, ஆடிப்பாடிக்கொண்டு பேட்டை சாஸ்தாவையும், ஐயப்பனின் நண்பரான வாபரையும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வார்களாம். அதுசமயம் வாபர் தர்காஹ்வில் விபூதி பிரசாதம் தரப்படுகிறதாம். 

தர்காஹ் கட்டிடமும் சர்ச்சையும் 
வாவர் என்ற முஸ்லிம் துறவியை ஐயப்பனின் நண்பர் என்று வர்ணிக்கும் இந்த ஐயப்ப பக்தர்கள் வழிபடும் வாவர் தர்காஹ்வில் வாவருடைய சமாதி கிடையாதாம். சமாதிக்கு பதிலாக கல்வெட்டு போன்ற ஒரு கல் மட்டும்தான் உள்ளதாம்.
தர்காஹ்வுக்குள் 4 சுவர்கள் உள்ளதாம் அதில் 3 சுவர்களின் மீது பச்சை பட்டாடையை போர்த்தியிருப்பார்களாம். ஒரு பக்க சுவர் மட்டும் பார்வையில் படுமாறு வைத்திருப்பார்களாம். இந்த தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதும்போது தப்ருக் தட்டில் கொடைமிளகாய்யை தான் வைப்பார்களாம். ஒரு உண்டியல் இருக்கிறதாம் அதில் ஐயப்ப பக்தர்கள் காணிக்கை போடுவார்களாம். இதில் மிக பயங்கரமான சம்பவம் எது எனில் ஐயப்பன் சந்நிதானத்திற்கு செல்வதற்கு ஆடுகள் பயன்படுத்து வார்களாம் இந்த ஆடுகள் தர்காஹ்வுக்கு நேர்ச்சை செய்து கொள்வது போல சொல்கிறார்கள்.  இறுதியாக இந்த ஆடுகளை ஐயப்ப தேவஸ்தான அரக்கட்டளை ஏலத்தில் விற்றுவிடுகிறதாம்.
தரம்கெட்ட தர்காஹ்வாதிகள் கூறும்போது 
வாவர் என்பவன் சூஃபி ஞானியம் இவன் இந்துக்களால் வாவர்சுவாமி என்று அழைக்கப்படுகிறாராம். இவருடைய தர்காஹ் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். வாவர் தர்காஹ்வில் ஐயப்ப பக்தர்கள் ஃபாத்திஹா ஓதுவார்களாம்.
ஐயப்ப பக்தர்களில் யாராவது இந்த வாவர் தர்காஹ்வில் ஃபாத்திஹா ஓதாமல் சென்றால் பல்வேது இன்னல்களை சந்திப்பதாக ஐதீகமாம்!
முடிவுரை 
  1. ஐயப்பன், அவனது பிறப்பு, வாவர் தர்காஹ் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே பொய்தான் என்பது தெளிவாக புரிகிறது.

  1. கேரளத்து மக்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பதால் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டை தகர்த்தெரிய துள்ளியமாக சதித்ததிட்டம் போட்டிருக்கிறார்கள் எனவேதான் வாவர் என்று பெயர் கொண்ட முஸ்லிம் கற்பனை கதையை வளர்த்துவிட்டு அந்த முஸ்லிம் ஐயப்பனுக்கு நண்பர் என்றும் ஐயப்ப பக்தர் என்றும் கட்டுக்கதையை சரமாரியாக அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

  1. ஐயப்பன் ஓரினச் சேர்க்கையில் பிறந்தவர் என்றும் கி.பி.1400ம் ஆண்டில் வாழந்த வாவருடைய நண்பர் என்றும் கூறுவது காலத்திற்கு சற்றும் ஒவ்வாத நிலையில் இருக்கிறது காரணம் இந்து சமயம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று இவர்களே கூறுகிறார்கள்.

  1. கேரளத்து மாந்ரீகர்களின் தெளிவான சூனிய விளையாட்ட அதாவது மனதை ஈர்க்க நடந்த நாடகக்கூத்து என்று இந்த ஐயப்பன் மற்றும் வாவர் விஷயத்தில் தெளிவாக நமக்கு தெரிகிறது.

சிந்தித்துப்பாருங்கள் சிவனும், விஷ்ணுவும் ஓரினச் சோர்க்கை புரிந்ததாக ஐதீகம் கூறுகிறது இவர்களின் கதையே இப்படி இருக்கும் போது இன்றைய பிரேமானந்தாவும், நித்யானந்தாவும் ஏன் விபச்சாரம் புரியமாட்டார்கள்.
மாற்றுமதத்தவர்களின் இந்த நாடகம் ஆரம்பம் முதலே கோணலாக உள்ளது  அதன் முடிவும் கோணலாகத்தான் உள்ளது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரமில்லை என்ற வசனம் இந்த அத்தனை கட்டுக்கதைகளையும் தரைமட்டமாக்கிவிட்டது

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்
 
ஆவி இருக்கு என நம்பினால் சிர்க்-ல் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்)

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும்

ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்!

ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்!

தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!

இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

இயற்கை மரணமும் – மூட நம்பிக்கையும்
உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆவி கொள்கையில் ஒருமித்த கருத்தை முன்மொழிகின்றன அதாவது ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம் இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்! அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்! நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!

தற்கொலையும் – மூட நம்பிக்கையும்
ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம் ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன்  வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்! அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!

ஆவி எப்படி இருக்கும்? இதோ சில குருட்டு நம்பிக்கைகள்
ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!
ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!
நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!
தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்! இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!
கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!
ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்
ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்!
ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம் பசி தீர பிரியாணி, முட்டை, சாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்!
மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!
ஆவி எப்போதும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தில்தான் அதிகம் தங்குமாம்!

ஆவி யாருக்கு பிடிக்கிறது!
சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்! அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது! இதற்கான காரணம் என்ன?

அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும்
குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்! இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள் எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.

சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள் 
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!

திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்! குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை! தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!

வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற  நாடகம் ஆடுவார்கள்!

பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்
ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்!  பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு

ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்! இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)

குறிப்பிட்ட நசாராக்களின் தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!

பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.

வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?
ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?

1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்? தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?

2வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து  ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. ஹிரோசிமா நகரில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள். இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?

ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?

திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?
அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி
சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி
விமான பைலட் ஆவி
மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்? சிந்தித்துப்பாருங்கள் இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும் எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!

இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?
நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!

கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?

தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!

தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?

1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடு களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!

வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை? தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

பிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள் ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை? குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?

ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???
மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான்.  நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!

இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!

ஆவி, காத்து கருப்பு அடிக்குமா?
இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும் இது அறிவியல் உண்மை ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள். இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா? மூளை குழம்பிப் போகாதா? அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை! இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!


ஆவி பயம் உருவாக்கப்படுகிறது!
பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட் இல்லாத பேய் சினிமா வருகிறதா? படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்! இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது! குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?

அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள் இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறது? சுய பரிசோதனை செய்து பார்ப்போமா!

இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள் அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள் கேமிராவின் அசைவும், பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒருசில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!

திடீர் மரண புள்ளிவிபரங்களும் ஆவிகளும்




முடிவுரை
ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள் இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்! ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது! ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா? ஆவி என்பது இல்லை? ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!

ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக! 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)

இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)

இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்
அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்
நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

ஆங்கில நாட்காட்டியை கி.மு. மற்றும் கி. பி என்று கூறுவது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது மற்றொன்று தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது
இவரது வாழ்க்கையை விவரிக்க இரண்டாக பிரித்து கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு ஏனெனில் மிர்ஸா குலாம் அஹ்மது தன் தந்தையின் அரவணைப்பில் ஒழுங்கான மனிதராக இருந்தார் ஆனால் தந்தையின் மரணித்திற்கு பின்னர் தரம்புரண்ட மனிதனாக காஃபிரா மாறினான். எனவேதான் தரம்புரள்வதற்கு முன் இருந்த மிர்ஸா குலாம் அஹ்மதை அவர் என்றும் காஃபிரான பின்னர் அவன் என்றும் இங்கு குறிப்பிடுகிறேன் இந்த மனிதனது வாழ்க்கையை பற்றி விரிவாக காணுவோம்.

தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது
கல்வி கற்கும் குழந்தைப் பருவத்தில் இவர் பாரசீக மொழியையும் அரபு மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார். (இதை நினைவில் நிறுத்துங்கள்). கூடவே மருத்துவப் பணியாற்றிய தன் தந்தையாருக்கு ஒத்தாசையாகவும் இருந்தார். பின்னர் இளைமைப் பருவத்தில் தன் தந்தையின் அறிவுரையின் படி 1864 முதல் 1868 வரை சியால்கோட் நகரில் கிளர்க் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் கிருத்தவர்களோடு மதவிவாதங்களில் ஈடுபடலானார். பின்னர் தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 1868ல் மீண்டும் காதியாண் என்ற நகரில் உள்ள தனது தந்தையாரின் எஸ்டேட் விவகாரங்களை கவனித்து வந்தார்.

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது
மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்
1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்
மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும்.

சில்லாஹ்-நஸ்ஹினி (Chilla-nashini) என்றால் என்ன?
சில்லாஹ் நஸ்ஹினி என்ற வார்த்தை பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும் CHILLA என்பது CHEHEL அதாவது 40 (நாற்பது) நஸ்ஹினி என்பது தனிமையில் தியானித்தல். அதாவது பாரசீகர்கள் பின்பற்றும் 40 நாள் தியானமாகும். இந்த 40 நாள் இரவு பகல் தவத்தின் போது தவத்தை மேற்கொள்பவர் பேசுதல், உணவு உட்கொள்ளுதல், தூக்கம், தண்ணீர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பார்கள்.

பாரசீகர்கள்தான் இந்த தவத்தை கண்டுபிடித்தனர் ஆனால் அவர்களே இந்த தியான முறையை மூடத்தனம் என்று வர்ணிக்கின்றனர் ஏனெனில் இந்த தவத்தின் மூலம் வெற்றி கிடையாது தோல்விதான் ஏனெனில் 40 நாட்கள் கடும் தவத்தின் மூலமாக தியானம் மேற்கொள்பவர்கள் உடநலம் கெட்டு புத்திசுவாதீனம் ஏற்பட்டு மரணித்துவிடுவார்கள். ஆதாரம் இதோ!

சில்லாஹ் நஸ்ஹினி தவத்தின் போது மரணம் நிச்சயம்!
14ம் நூற்றாண்டில் இந்த தவம் சூஃபிக்களின் புகழ்பெற்ற பாடகர் ஹபேஃஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய கொள்கையை பின்பற்றி 1884ம் ஆண்டு முதல் முறையாக ஷரியர் முன்டேகர் இராணி என்பவர் (அதாவது மெஹர் பாபா என்பவரின் தந்தை) இந்த சில்லாஹ் நஸ்ஹினி என்ற கடுமையான தவத்தில் ஈடுபட்டார் ஆனால் 40ம் நாளை நெறுங்குவதற்கு முன் 30வது தவத்திலேயே மரணித்துவிட்டார். ஏனெனில் எந்த ஆகாரமும், நீரும் எடுத்துக்கொள்ளாததே!

தியானத்திற்காக ஜும்மா தொழுகையை விட்ட மிர்ஸா குலாம்
சில்லாஹ் நஸ்ஹினி என்ற 40 நாள் தியானத்தின் போது தவமிருப்பவர் கடுமையை கடைபிடிப்பதால் யாரிடமும் பேசாமல், சிறிதளவும் உணவு உண்ணாமல், துளியளவும் தண்ணீர் பருகாமல், சிறுதூக்கம் கூட போடாமல் கடுமையாக தவமிருப்பார்கள் மேலும் இத்தவத்தை வெட்ட வெளியில் மேற்கொள்வார்கள் அதுசமயம் எப்படிப்பட்ட மிருகம் தாக்கினாலும் தாங்கிக்கொள்ளவார்கள் ஆனால் இந்த மிர்ஸா குலாம் என்பவனோ தனிஅறையில் மிருகங்கள் அண்டாத வகையில் தம்மை பாதுகாத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி ஒழிந்து மறைந்து உணவு உட்கொண்டான், தூங்கினான்.

இந்த மிர்ஸா குலாம் அஹ்மது தாம் மேற்கொண்ட தவத்தின் போது ஜும்மா தொழுகையை கூட தொழவில்லை அதாவது 40 நாள் தனிமை தவத்தில் வீட்டை விட்டே வெளியேறாமல் இருந்தான் எனவே இவனுக்கு ஜமாஅத் தொழுகை உண்டா?

தவம் மூடித்து மிர்ஸா குலாம் செய்த பிரகடனம்
ஆரிய சமாஜத்தாரின் சவாலுக்கு பதில் கூற தவத்தை மேற் கொண்ட மிர்ஸா குலாம் தவத்தில் தில்லுமுல்லுகளை மேற்கொண்டு உயிர்பிழைத்தான் 40ம் நாள் தவத்திற்கு பின்னர் தாம் இறைவனிடம் அருள்வாக்கு பெற்றதாக இட்டுக்கட்டி பொய்யை பரப்பினான்.

பின்னர் 1888ம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடம் வஹி வந்ததாகும்  மக்கள் அனைவரும் மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தன்னிடம் பைஅத் பெற வேண்டும் என்று கட்டளையி்ட்டதாகவும் அல்லாஹ்வின் மீது வேண்டுமென்றே புரளியை கிளப்பினான்!
1889ம் ஆண்டு இந்த புரளியை தூண்டுப் பிரச்சுரங்கள் மூலமாகவும் ஊர் ஊராக பரப்பினான். பின்னர் அவசர அவசரமாக தன்னிடம் பைஅத் பெற்ற 40 மூரிதுகளின் உதவியால் 1889ம் ஆண்டு மார்ச் 23ம் நாளன்று அஹ்மதியா அமைப்பை உருவாக்கினான்.

மிர்ஸா குலாம் தன்னை இறுதி நபி என்று வாதிட்டான்
தவம் முடித்த மிர்ஸா குலாம் தன்னை மஸீஹ் என்றும் இமாம் மஹதி என்றும் பிரகடனப்படுத்தி பொய்களை பரப்பினான் அந்த பொய்களை வஹி (இறைவனிடமிருந்து வந்த செய்திகள்) என்று கூறினான். இந்த பொய்கள் மூலம் கிருத்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பிரச்சினையை காட்டுத்தீயாக பரப்பிவிட்டான்.

ஈஸா நபி மீது இட்டுக்கட்டிய செயல்
கிருத்தவர்கள் ஏசு எனும் ஈஸா மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள் ஆனால் இஸ்லாம் இதை மறுக்கிறது மாறாக சிலுவையில் அறையப்படும் முன் ஈஸா நபி மரணிக்கவில்லை விண்ணுலகிற்கு உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் கியாமநாளுக்கு முன்னர் இறங்கி தஜ்ஜாலை கொன்று ஆட்சி நடத்துவார் பின்னர்தான் மரணிப்பார் என்பதாகும். ஆனால் இந்த இரண்டு கொள்கைளைக்கும் முரணாக மூன்றாவதாக ஒரு கொள்கையை இந்த குலாம் அஹ்மது கிளப்பினான் இதுதான்

ஈசா (ஏசு) நபி தம் பிரச்சாரத்திற்காக இந்தியா வந்தபோது இயற்கையாகவே மரணடைந்தார் என்றும் அவரை காஷ்மீரில் நல்லடக்கம் செய்யப்பட்டவிட்டது என்றும் கப்ருகூட உள்ளது என்றும் மாபெரும் பொய்யை இட்டுக்கட்டினான்.

மிர்ஸா தம்மை இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்துதல்
இந்த பொய்யன் மிர்ஸா குலாம் தம்மைத்தாமே இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டான் அதற்கு இவன் அவிழ்த்து விட்ட மாபெரும் சூழ்ச்சியுடன் கூடிய பொய் இதுதான்

நபி மூஸா அவர்களுக்கு மறித்து 1400 ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸா நபி வருவார் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது போன்று போன்றுதான் நபி முஹம்மதுவுக்கு பின்னர் 14 நூற்றாண்டுகள் கழித்து இமாம் மஹதி வருவார் என்று முன்னறிவிப்பு உள்ளது அந்த முன்னறிவிப்பின் படி மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தாம்தான் இமாம் மஹதி என்றான். இந்த பொய்களை வஹி என்று அறிவிப்பு செய்து அருள்மறை குர்ஆனுக்கு எதிராக தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலை உருவாக்கி அதில் எழுதிக்கொண்டான்.

தம்மை இறுதி நபி என்று பிரகடனப்படுத்துதல்
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள இமாம் மஹதியின் வருகைக் குறிப்புகளை திருடி தன்னுடைய தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலில் எழுதிக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நபிமார்களுடன் ஒப்பிட்டு காட்டி தாம்தான் இஸ்லாத்தின் இறுதி நபி என்று பிரகடனப்படுத்தினான்.

நபிமார்களின் முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் பிரகடனப் படுத்தியதற்கு மாற்றமாக இந்த மிர்ஸா குலாம் சூழ்ச்சி செய்தான் பின்னர் அல்லாஹ்வி்ன் அதிகாரத்தை கையில் எடுத்தான் முஹம்மது இறுதி நபியல்ல மிர்ஸா குலாம் ஆகிய தாம் மட்டும்தான் இறுதி நபி என்றும் தாம் இஸ்லாத்தை கட்டிகாக்க வந்தவன் என்றும் அபாண்டமான பொய்யை இட்டுக்கட்டினான்!
மிர்ஸா குலாமுக்கு விடப்பட்ட ஃபத்வா
தன்னை இமாம் மஹதி என்றும் இறுதி நபி என்றும் பிரகடனப்படுத்திய மிர்ஸா குலாம் முஸ்லிம்களை நோக்கி இனிமேல் யாரும் ஆயுதங்களைக் கொண்டு ஜிஹாது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினான் இதை அறிந்ததும் அக்காலத்து மார்க்க மேதைகள் மிகுந்த மனவேதனையடைந்தனர் அவர்களிடம் மிகப் பெரும் சலசலப்பு காணப்பட்டது மேலும் இதே காலகட்டத்தில் சூடான் நாட்டை மற்றொருவன் தன்னை இமாம் மஹதி என்ற பிரகடனப்படுத்தியதும் மார்க்க மேதைகளின் குழப்பத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

பின்னர் மார்க்க மேதைகள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதில் ஒரு முடிவு பிறந்தது அதாவது ஆங்கிலேயர்கள்தான் ஜிஹாதை தடைசெய்தார்கள் என்றும் இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் அதை ஆதரித்து பேசும்விதமாக ஜிஹாதை தடை செய்வதால் இவன் ஆங்கிலேயே கைக்கூலிதான் என்று பிரகடனப்படுத்தினர். இவன் ஆங்கிலேய நாய்களின் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் அடங்கிய  வாக்குமூலம்
Behold! I have come to you people with a directive that henceforth jihad with the sword has come to an end but jihad for the purification of your souls still remains. This injunction is not from me but rather it is the will of God. British Government and Jihad pg.15
இறுதியாக காதியாணிகளின் தலைவனான பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது என்ற மனிதன் சாதாரண மனிதர்தான் என்றும் இந்த மனிதன் தன்னை இறுதி நபி என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மீறிய செயல் என்றும் இவன் முழுக்க முழுக்க காஃபிர்தான் என்றும் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்தனர். இந்த ஃபத்வாவை இந்தியாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து, புத்த, கிருத்த மத மற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் ஒருமனதாக ஏற்றனர். (சுப்ஹானல்லாஹ்)

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு எதிர்ப்பு வலுத்தது
அன்றைய காலகட்டத்தில் வாழந்த மார்க்க அறிஞரான அஹ்மத் ரிதா கான் என்பவர் பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது பற்றிய தகவல்களை சேகரித்து ஹேஜாஸ் எனும் நகருக்கு பயணம் மேற்கொண்டார் அங்கு மக்கா மற்றும் மதீனத்து மார்க்க மாமேதகளின் கருத்துக்கணிப்பை கேட்டறி்ந்தார். அங்குள்ள மார்க்க மாமேதைகள் அனைவரும் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவை கைது செய்து தூக்கிலடவேண்டும் என்று முடிவு கூறினர்.

மிர்ஸா குலாம் அஹ்மது அரங்கேற்றிய பெருநாள் திடல் நாடகம்
1900ம் ஆண்டு தியாகத்திருநாள் (பக்ரீத்) அன்று பெருநாள் திடலில் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது உரையாற்றினான். இதுதான் காதியாணிகளின் முக்கிய பெருநாள் உரை நிகழ்த்தப்பட்ட தினமாகும். இந்த பெருநாள் உரையை இரண்டு காதியாணிகளின் குறிப்பெடுத்துவந்தனர் இறுதியாக இந்த பெருநாள் உரைக்கு குத்பா இல்மியாஹ் என்று பெயர் சூட்டினர்.

இந்த பெருநாள் உரையின் போது அங்கு குழுமியிருந்த காதியாணி அமைப்பின் பிற தலைவர்கள் மாபெரும் பொய்யை இட்டுக்கட்ட ஆரம்பித்தனர் அதாவது பெருநாள் உரையாற்றும் போது மிர்ஸா குலாம் அஹ்மதுவின் கை இதுவரை பார்த்திராத கையாக தென்பட்டது என்றும் கனீர் கனீர் என்ற குரள் புதுவிதமாக இருந்தது என்றும் இதுவரை பார்த்திராத கை, கேட்டிராத குரள் என்றும் பொய்யை ஜல்ரா தோரணையில் கூறினர் இட்டுக்கட்ட இதை கேள்விப்பட்ட பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவோ பொய்யை மெருகூட்டும் விதமாக தன்னுடைய ஹகீகத்துல் வஹி என்ற நூலில் எழுதிய கட்டுக்கதை இதோ.

எனது பெருநாள் உரையானது மாபெரும் அதிசயமானது அந்த உரையை எனது நாவில் பேசியது நானா? அல்லது வானவர்களின் தூதரான மலக்குமார்களா? என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது! நான் எனது நாவை அசைத்தேன் அந்த நாவினில் வந்தது எல்லாம் இறைவனிடமிருந்து வந்த வஹியாகும்பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம்
தந்தையின் அரவணைப்பில் மிர்ஸா குலாம் அஹ்மது அரபு மொழியை கற்றனான் என்பதை நினைவில் நிறுத்துங்கள் என்று மேலே சுட்டிக்காட்டியிருந்தேன். இதோ அதற்கான விளக்கம் கீழே உள்ளது.

தமக்கு அரபு மொழி தமக்கு தெரியாது என்றும் அல்லாஹ்தான் தமக்கு அரபு மொழியில் புத்தகம் எழுத உதவினான் என்றும் மிர்ஸா குலாம் அஹ்மது உளறினான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Seerat-ul-Mahdi, Narration No. 104)

மேற்கண்ட வாக்குமூலத்தின் மூலம் இவன் அல்லாஹ்விடம் கல்வி கற்றதாக (தம்மை ஆதம்நபிக்கு ஈடாக) வாதிட்டு அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைக்கிறான்!

மேற்கண்ட வாதம் பொய் என்பதற்கு இவனுடைய மற்றொரு நூலே ஆதாரம் இதோ கீழே உள்ளது

தம்முடைய 10ம் வயதில் ஃபஜல் அஹ்மது என்ற அரபு மொழி ஆசிரியரின் உதவியால் தாம் அரபு மொழி கற்றதாக இந்த பொய்யனின் வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது (ஆதாரம்– Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

பள்ளிப் பருவத்தில் தாம் அரபு இலக்கணம் படித்ததாக ஒப்புக்கொண்டுள்ளான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

மிர்ஸா குலாம் அஹ்மதுவின் மரணம்
1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானான். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினான். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மேமாதம் 26ம்நாள் மரணமடைந்தான்.

அஹ்மதியாக்களை காஃபிர்களாக உலக நாடுகள் பிரகடனம்
பாகிஸ்தான் நாட்டின் அறிவிப்பு
1974ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு தனது பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி மிர்ஸா குலாம் அஹ்மது என்பவனையும் அவனை பின்பற்றும் அஹ்மதியாக்களை காஃபிர்கள் என்று பிரகடனப்படுத்தினார்கள்.

1984ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பீனல் கோடு செக்சன் காஃபிர்களாக மாறிய அஹ்மதியாக்கள் எனும் காதியாணிகள் இனி தங்கள் பிரச்சாரங்களை அரங்கேற்றக்கூடாது என்றும் அவ்வாறு மேற்கொள்பவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப் படுவார்கள் என்றும் சட்டமியற்றியது.

2007ம் ஆண்டு பெலாரஸ் நாடு காஃபிர்களான காதியாணிகள் தங்கள் கீழ்த்தரமான பொய்களை அவிழ்த்துவிடுவதை தடை செய்தது.

காஃபிர்களின் நாயகன் மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வழிமுறையை படித்திருப்பீர்கள் இதோ கீழ்கண்ட இந்த அருள்மறை வசனம் இதை மெய்ப்படுத்துகிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு பொய்யன்
இவனை பின்பற்றும் காதியாணிகள் பொய்யர்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு காஃபிர்
இவனை பின்பற்றும் காதியாணிகள் காஃபிர்களே

காஃபிர்களுக்கு உதாரணம்
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்அன் 24:39)


காஃபிர்களின் வைராக்கியமும் முட்டாள்தனமும்
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை – முட்டாள்தனமான வைராக்கியத்தை – தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் – அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:26)