திங்கள், 26 செப்டம்பர், 2011

தொழுகையில் ஏற்படும் மறதி அத்தியாயம் : 22

22-தொழுகையில் ஏற்படும் மறதி

அத்தியாயம் : 22
22-தொழுகையில் ஏற்படும் மறதி
பாடம் : 1
கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்...?
1224 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்த போது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்த போது, அந்த இருப்பிலேயே சலாமுக்கு முன் தக்பீர் கூறி, இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு சலாம் கொடுத்தார்கள்.
1225 அப்துல்லாஹ் இப்னுபுஹைனா(ரலி) கூறியதாவது:
லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும் போது இரண்டு சஜ்தாச் செய்தார்கள். அதன் பின் சலாம் கொடுத்தார்கள்.
பாடம் : 2
(மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்...
1226 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம்? எனக் கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள் என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு சஜ்தாச் செய்தார்கள்.
பாடம் : 3
(நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது.
1227 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்' (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், இவர் கூறுவது உண்மைதானா? எனக் கேட்ட போது அவர்களும் ஆம்' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்த போது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்' எனக் கூறினார்கள்.
பாடம் : 4
சஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல்
அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை.
(அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1228 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்துக் கொண்ட போது துல்யதைன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா? எனக் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மைதானா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ஆம்' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்தைய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ சஜ்தாச் செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை).
சலமா பின் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் (மறதிக்குரிய சிரவணக்கம்) சஜ்தா சஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்கள்.
பாடம் : 5
சஜ்தா சஹ்வின் போது தக்பீர் கூறுவது
1229 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாலைத் தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸ்ர் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன் மேல் தம் கையை ஊன்றிக் கொண்டு நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறிய மக்கள், தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ எனப் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் மறக்கவும் இல்லை; (தொழுகை) குறைக்கப்படவும் இல்லை என்றவுடன் இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துப் பின் சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ சஜ்தாச் செய்து, பின்புதம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள்.
1230 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த போது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.
பாடம் : 6
தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா எனத் தெரியவில்லையென்றால் கடைசி இருப்பின் போது இரண்டு சஜ்தாக்கள் செய்வது.
1231 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, இதை இதையெல்லாம் நினைத்துப்பார் எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியா விட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 7
கடமையான தொழுகையிலும் உபரியான தொழுகையிலும் சஜ்தா சஹ்வு செய்தல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ருத்தொழுத( போது மறதி ஏற்பட்டமைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.
1232 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத்தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு சஜ்தாச் செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 8
தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும்.
1233 குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் ஆயி.ஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி (ஸல்) அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும்! என்று கூறினார்கள். நானும் இம் மூவரிடம் திரும்பிவந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு! எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும் என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
பாடம் : 9
தொழுகையில் சைகை செய்வது
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1234 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்களிடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்த போது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நபி (ஸல்) அவர்கள் (தமது பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. எனவே தாங்கள் மக்களுக்குத் தொழுவிக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நீர் விரும்பினால் செய்கிறேன் என்றவுடன் பிலால் (ரலி) இகாமத் கூற, அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னின்று மக்களுக்குத் தொழுவிக்கத் தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழும்போத திரும்பும் வழக்கமில்லாத அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கள் கைத்தட்டலை அதிகரித்த போது திரும்பி (முதல் வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் வாக்கில் நகர்ந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி மக்களே! தொழுகையில் (இதைப் போன்று) ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் ஏன் கைதட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் சுப்ஹானல்லாஹ்' எனக் கூறட்டும். ஏனெனில் யார் சுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறாரோ அவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார் எனக் கூறினார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) அபூபக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்த போது நீங்கள் ஏன் தொடர்ந்து மக்களுக்குத் தொழுவிக்கவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் தொழுவிப்பது அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும் எனக் கூறினார்கள்.
1235 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்ற போது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம் மக்களுக்கு என்னவாயிற்று? எனக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார்கள். நான் (இறை) அத்தாட்சியா? எனக் கேட்டதற்கு ஆம்' எனத் தம் தலையால் சைகை செய்தார்கள்.
1236 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உடல்நலிவுற்றிருந்த போது தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தொழுதார்கள். எனவே நபியவர்கள் மக்களை நோக்கி உட்காருமாறு சைகை செய்தார்கள். தொழுகையை முடித்துவிட்டு இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்காகவே! எனவே அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள் என்று கூறினார்கள்.
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி

செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி

phoneசெல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் விஞ்ஞானி சொல்கிறார்
 ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

அரசு ஆய்வுக் குழு எச்சரிக்கை

செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.

செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது.

இதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும். எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.
செல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.

மூளை புற்றுநோய் தாக்கலாம்

மும்பை ஐ.ஐ.டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறதுÓ என்றார்.


என்ன பாதிப்புகள்?

செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.

செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.

Read more: செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி | tamil4 http://tamil4.com/entertainment/technology/438-2011-03-22-00-50-01.html#ixzz10hnF6CKo

நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!

நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!!

Posted on ஜூன் 24, 2011 by
4

நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..!
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!!
அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?!
ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே கேட்க வர்றீங்க…….?!
அட, அதுலதாங்க சிக்கலே. அதுவும் பாரபட்சமா, முதிய வயதிலுள்ள ஆண்களுக்கு மட்டும் நினைவுகளை நியாபகம் வைத்துக்கொள்வதில் இருக்கிறது அப்படீன்னு சொல்லுது சமீபத்திய ஆய்வு ஒன்னு! அதாவது, சுமார் 70 வயதுக்கு மேலான ஆண்களுக்கு, நியாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் குறைந்துபோய்விடுகிறதாம். முக்கியமாக, இந்த குறைபாடானது பெண்களைக்காட்டிலும் சுமார் 1.5 தரம் அதிகமாக ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறதாம்.
“என்ன கொடுமை சரவணன் இது” அப்படீங்கிற மாதிரியான இந்த பிரச்சினைய பத்தி ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னு இன்னும் விரிவா தெரிஞ்சிக்கலாம் வாங்க……
லேசான அறிவுத்திறன் குறைபாடு (Mild cognitive impairment)!
Image: Google
லேசான அறிவுத்திறன் குறைபாடு ( Mild cognitive impairment) அப்படீங்கிறது, பொதுவாக முதுமையடைதலால் ஏற்படும் நியாபக சக்தி மற்றும் சிந்திக்கும் திறன் குறைபாடுகளைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் குறிக்கும் ஒரு குறைபாடு! இந்த குறைபாடு காலப்போக்கில் நியாபக சக்தி குறைபாடு தொடர்பான ஒரு நோயான அல்ஷெய்மர்ஸ் நோயாக மாறிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது நோயாளிகளில் அல்லாமல், சமூகத்தில் வாழும் பொதுவான, 70 முதல் 89 வயதான சுமார் 2050 மக்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதும், இந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்களின் நியாபக சக்தி மற்றும் சிந்திக்கும் திறன்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன என்பதும், இத்தகைய ஆய்வில் இதுவே முதல் ஆய்வு என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறார் அமெரிக்காவின் மயோ க்ளீனிக் நிறுவனத்தின் இயக்குனர் ரொனால்டு பீட்டர்சன்!
மேலும், இந்த ஆய்வில், லேசான அறிவுத்திறன் குறைபாடானது ஆண்களில் 19% மற்றும் பெண்களில் வெறும் 14% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. இந்த முடிவுகள் சரியானவை என்பது பிற ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால், இந்த குறைபாட்டில் பாலினத்தின் பங்கு இருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமாகும் என்கிறார் பீட்டர்சன்!
உதாரணமாக, ஆண்களின் அறிவுத்திறனானது வாழ்க்கையின் தொடக்க காலங்களிலேயே குறையத்தொடங்கி மெதுவாக மேலும் மேலும் குறைந்துகொண்டே செல்லும். மாறாக, இந்த குறைபாடு பெண்களுக்கு வாழ்க்கையின் பிந்தைய காலங்களில் (தாமதமாக) தொடங்கி, டிமென்ஷியா போன்ற நோய்களாக விரைவில் மாறிவிடும் என்கிறார்!
இந்த ஆய்வில் சுவாரசியமான ஒரு கூற்றும் தெரியவந்துள்ளது. அது, இந்த ஆய்வில் பங்குபெற்ற குறைந்த படிப்பறிவு மற்றும் திருமணமே செய்துகொள்ளாத (பிரம்மச்சாரி) மக்களுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு ஏற்படும் விகிதாச்சாரம் மிகவும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது! 
இந்த ஆய்வில், நியாபக சக்தி மற்றும் அறிவுத்திறன் குறித்து தெரியவந்துள்ள இரு முக்கியமான விஞ்ஞான உண்மைகள்:
  1. நியாபக சக்தியில் (முதிய வயதினரைப் பொறுத்தவரையில்) ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் அல்லது பாலின வேற்றுமை இருக்கிறது. அதாவது ஆண்களுக்கு குறைவாகவும், பெண்களுக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது.
  2. வயதானவர்களில் சுமார் 25%  நியாபக சக்தி பிரச்சினைகள் மற்றும் டிமென்ஷியா குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதால், இவற்றுக்கான புதிய வகை சிகிச்சைகளை கண்டறிய வேண்டியது மிக மிக அவசியம் என்பது புலனாகிறது!
இந்த ஆய்வு மூலமா தெரியவந்திருக்கிற ஒரு ஆறுதலான செய்தி என்னன்னா, வயதான காலத்தில் ஏற்படும் இந்த லேசான அறிவுத்திறன் குறைபாட்டினை தவிர்க்க அல்லது சற்று தள்ளிப்போட ஒரு வழி இருக்கிறது எனபதுதான்! அது என்னன்னா, நம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டு, கணக்குகள் போன்றவை போட்டு பழகுவதையும் அதிகப்படுத்திக்கொண்டோமானால், நியாபக சக்தி குறைபாட்டினை குறைத்து, தள்ளியும் போடலாம் என்பதுதான்.
என்னங்க, இனி நிறைய வாசித்து, கணக்குகள் போட்டு பழகலாமா…..?
தொடர்புடைய சில பதிவுகள்:

விஞ்ஞானம்: புத்திகூர்மைக்கான முத்தான 10 வழிகள்!!

அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!

மர்மம்: மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

மூளையை அழகாக்கும் உடற்பயிற்ச்சி தெரியுமா?!

அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பதிவு பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

ஆய்வில் புதிய தகவல் சிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்


முகப்பு>>உலகம்  >>ஆய்வில் புதிய தகவல் சிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்

ஆய்வில் புதிய தகவல் சிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்

லண்டன் : சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. மது குடிப்பவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னர் ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது சிகரெட் பிடித்தாலும் ஞாபக மறதி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னை குறித்து டாக்டர் டாம் ஹெபர்னன் தலைமையில் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆய்வு நடத்தியது.

அதற்காக சிகரெட் பிடிப்பவர்கள், அதை நிறுத்தியவர்கள் மற்றும் சிகரெட்டே பிடிக்காதவர்கள் என 3 பிரிவாக பிரித்து அவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டனர். அதில் சிகரெட் பிடிக்காதவர்களைவிட, பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படுவது தெரியவந்தது. அதாவது, நினைவாற்றல் சோதனையில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 59 சதவீத ஞாபக சக்தியும், சிகரெட் பிடிப்பதை கைவிட்டவர்களுக்கு 74 சதவீதமும், சிகரெட்டே பிடிக்காதவர்களுக்கு 81 சதவீத ஞாபக சக்தி இருப்பது தெளிவானது.

சிகரெட் பிடிப்பதால் ஞாபக மறதி ஏற்படுவது குறித்து மேற்கொண்ட ஆய்வு, புகை பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால், நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் நினைவாற்றல் பாதிக்காமல் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்று டாம் ஹெபர்னன் தெரிவித்தார்.

வேற்று கிரகவாசிகள்!

வேற்று கிரகவாசிகள்! - ரஹ்மத் ராஜகுமாரன் Print E-mail
ரஹ்மத் ராஜகுமாரன்
'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (அல் குர்ஆன் 23:17)
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1) உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)
திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள்.அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது.
இன்று, பறக்கும் தட்டு, வேற்றுலக மக்கள், அவர்களின் செயல்பாடுகள் இவைகள் எல்லா பத்திரிகைகளிலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பத்திரிக்கைகளிலும் தினம் தினம் இதுபற்றி குறிப்பு வரத் தொடங்கியுள்ளது. அமெரிக்கர் கூறும் வேற்று கிரகங்களைப் பற்றி சினிமா, கதைகள் என்று எழுதி உலக மக்களை மேலும் ஆர்வப்படுத்தியது. மேலும் வேற்றுகிரக மக்கள், பூமிவாழ் மக்களைக் கடத்தி அவர்களின் உடம்பிற்குள் தகவல் அனுப்பும் சாதனத்தைப் பொருத்தி பூமியையும் மக்களையும் கண்காணிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாயின.
வேற்றுலகம் என்பது சாத்தியமா? அங்கு வாழும் மக்கள் நம்மை விட அறிவில் முதிர்ச்சியானவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே திருக்குர்ஆனைத் திறந்தால், '(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (23:17)
மேற்கண்ட வசனத்தில் நம்மை மாதிரி வேறு படைப்பினங்களும் உள்ளன. அந்த படைப்பினங்களுக்குத் தேவையானதையும் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய அல்லாஹ் அடுத்த வசனத்தில் நம் பூமியை 7 பூமி என்று கூறுகிறான்.
'அவனே 7 வானங்களையும், பூமியிலும் அதே போன்றும் படைத்தான்.' (65:12).
இதைப் பார்க்கும் போது நாம் வாழும் பூமியைப் போன்ற வேறு பூமிகளும் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.
நவீன விஞ்ஞானம் இது பற்றிய என்ன கூறுகிறது என்று பார்ப்போம். 1882-ல் வால்டர் மாவுக்தர் என்கிற விண்ணியல் அறிவாளர் கிரீன்விச் வானாய்வகத்திலிருக்கும் போது பறக்கும் தட்டு ஒன்று விண்ணில் பறந்து வந்து விண்ணிலேயே மறைந்ததாகவும் அதன் வேகம் மிகமிக அதிகம் இருந்ததாகவும் கூறினார்.
அடிமரிக்காவின் முன்னணிப் பத்திரிக்கையான 'ஆம்னி' பறக்கும் தட்டு இருப்பதை நம்புகிறது. மேலும் அமெரிக்க அரசு இந்த உண்மையை உலகுக்குச் சொல்ல மறுக்கிறது, மறைக்கிறது என ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது. எச். ஸ்பென்ஸர் ஜோன்ஸ் என்கிற வானியல் அறிஞர் தமது 'முடிவற்ற உலகங்கள்' என்ற நூலில் 'பிற உலகங்களில் உயிர் வாழ்வது சாத்தியம் மட்டுமல்ல் உறுதியாக நம்பத் தகுந்த ஒன்றாகும்' என்கிறார்.
பிரபஞ்சத்தைப் படைத்து கோடான கோடி சூரியன்களைப் படைத்து கணக்கற்ற கோள்களையும் (கிரகங்களை) படைத்த அல்லாஹ்வுக்கு அவனது வல்லமைக்கு இந்த பூமி மிகச் சாதாரணமானது. மேலும் அல்லாஹ் இந்த பூமி மாதிரி 7 பூமியைப் படைத்ததாக குர் ஆனில்...'ஏழு வானங்களையும் அவைகளைப் போல பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக் கூடிய எல்லா வியங்கயைப் பற்றிய கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கின்றது.' குர்ஆன் (65:12). இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் வேற்றுகிரக வாசிகளைத் தேடி வருகின்றோம். தற்சமயம் சனிக்கிரகத்தின் துணைக்கோளான டைட்டான் என்கிற கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் இன்னும் நம்புகிறார்கள்.
அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள இன்னொரு சூரியனின் கிரகத்தின் துணைக்கோளைக் கண்டு பிடித்துள்ளனர். அந்தத் துணைக் கோளை
'ஸ்பிச்சர் ஸ்பேஸ்; டெலஸ்கோப்' என்ற அதிக சக்தி கொண்ட தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்தனர். அந்தக் கோளின் வான் பகுதியில் தண்ணீர் ஆவியாக நின்றது தெரிய வந்துள்ளது. எனவே அந்தத் துணைக்கோளில் தண்ணரும் இருக்க வேண்டும், ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
அந்தக் கோளுக்குப் பெயர் வைக்கவில்லை எச்.டி.189733 பி என்னும் குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 64 ஒளி வருடம் முழுவதும் பயணம் செய்வதைக் குறிப்பிடுவது ஆகும்.
இதுபோன்று கோடான கோடி கிரகங்களில் உயிரினம் வாழ்வதாகவும் அவைகளுக்குத் தேவையான தண்ணீர் நிரப்பப் பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்சு சான்றாக நம் உடல் எந்த அடிப்படை மூலப் பொருளால் ஆகியிருக்கின்றனவோ அதே புரோட்டீன் மூலக் கூறுகளான அமினோ ஆக்சைடு விண்வெளியின் மிகமிக தொலைதூரப் பகுதிகளிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியில் விழும் விண்கற்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
மேலும் வால் நட்சத்திரங்களிலும் ஆங்காங்கே காணப்படும் விண்துகள்களிலும் உயிரினத் தோற்றத்திற்கான அடிப்படை மூலக்கூறுகள் இருப்பதாகவும் இவை நீண்ட பயணத்தின் போது விண்வெளியில் பல இடங்களிலும் உயிரினத்திற்கான விதைகளை ஊன்றுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உண்மையானால் விண்வெளியில் பல இடங்களிலும் உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கும். அவைகள் மனிதர்கள் மாதிரியோ அல்லது மிருகங்கள் மாதிரியோ இருக்கலாம். இம்மாதிரி ஜீவராசிகள் நம் பூமி வாழ் மக்களைக் கடத்தியதாக நிறைய வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் காணலாம்.
கம்போடியாவில்
'அங்க்கார்' என்னும் ஊரில் உலகப்புகழ் பெற்ற 'அங்க்கார் வாட்' என்னும் கோயிலில் இருக்கிறது. 1431-ல் திடீரென்று இந்த ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனார்கள். மற்ற விஷயங்கள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தன. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் உடனே ஏராளமான ராட்சதப் பறக்கும் தட்டுகள் இரவோடு இரவாக இறங்கி அத்தனை மக்களையும் அள்ளிக் கொண்டு வேறு கிரகத்துக்கு சென்றுவிட்டன என்கிறார்கள் அங்க்கர்வாசி கூட கம்போடியா முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. வேறுகிரக வாசிகள் நம் பூமியன் நடவடிக்கைகளை கவனிக்க நம் கண்களுக்குத் தெரியாத மாயவலையை விரித்துள்ளதாகவும் ஒருசாரார் நம்புகின்றனர்.
நாமும் வேற்று கிரக மக்களைத் தேடி கார்ள்சேகன் போன்றவர்கள் 1977 வாயேஜர் 1, வாயேஜர் 2 போன்ற கலகங்களை விண்வெளியில் நெடும் தூரம் செல்ல அனுப்பும் போது வேற்று கிரக உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருந்தால் அவர்களுக்கு எப்படி நம்மைப் பற்றி செய்தி தருவது என்று யோசித்தார்கள். அத்தனை மொழிகளிலும் நம் பூமியின் வாழ்த்தைத் தெரிவித்து விட்டு உலகின் அத்தனை வித சங்கீதங்களையும் ஒரு சாம்பிளில் 100 கோடி வருடம் தாங்கக் கூடிய தங்க முலாம் தகட்டில் பதித்து அனுப்பினார்கள். அதிலும் இந்திய ராகம் ஒன்றும் உள்ளது. சங்கீதம் தான் பிரபஞ்ச பாஷை
என்பது அவர்களின் கணிப்பு. இதுவரையிலும் பதில் இல்லை. நமது பூமியை அல்லாஹ் பாதுகாப்பது போல் மற்ற கிரகங்களையும் பாதுகாத்து வருகிறான். அவன் விரும்பும் போது இந்த மக்களையெல்லாம் போக்கிவிட்டு இம்மக்களைப் போன்றே வேறு ஒரு படைப்பினத்தை கொண்டு வருவதாகவும் அல்லாஹ்வின் வேதம் சொல்கிறது. இந்த வசனத்தின் வாயிலாக தெரியவருவது மனிதர்களைப் போன்றே புதியதொரு படைப்பு என்பது வேற்றுகிரக வாசிகளை ஞாபகப்படுத்துகிறது.
நமது சூரியக் குடும்பத்தின் கிரகங்களுக்கு இடையேயுள்ள தூரம் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கிறது. இந்த இடைவெளியில் கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இடைவெளி செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையேயுள்ள தூரம் இருமடங்காக இருக்கிறது. செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே ஒரு கிரகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என வானவியல் விஞ்ஞானிகள் தேடும்போதுதான் தெரிந்தது. உடைந்து போன ஒரு கிரகத்தின் துண்டுகளும்; நமது சூரியனை வலம் சுற்றி வருகிறது. இந்த உடைந்த துண்டுகளுக்கு
'அஸ்டிராய்ட்ஸ்' என்று பெயர். இதில் பெரிய துண்டு 'ஸ்ரிஸ்' என்ற பெயர். இது 1000 கிலோ மீட்டர் விட்டமுடையது. மிகச்சிறியது சுமார் 100 மீட்டர். இதையும் விட சின்னது நிறைய உண்டு. இந்த உடைந்துபோன கிரகத்தில் நம்மை விட அதிபுத்திசாலியான மக்கள் வாழ்ந்திருக்கக் கூடும். அவர்களின் மீது அல்லாஹ் கோபமடைந்து அவர்கள் செய்த வினைக்கு அந்தக் கிரகத்தையே சுக்கு நூறாக (இல்லை 2500 துண்டுகள் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் பெரிய சைஸ் மட்டும் இன்னும் உள்ளது நம் கண்களுக்குத் தெரியவில்லை) உடைத்திருக்கலாம்.
ஆனால் நவீன விஞ்ஞானிகள், அந்த கிரகவாசிகள் அப்போதே அணுகுண்டு போன்ற மிகச் சக்தி வாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் கிரகம் உடைந்து போய் உள்ளது என்கிறார்கள்.
ஆக பிரபஞ்சத்தில் பூமிவாழ் மக்களாகிய நாம் தனியாக இல்லை. நம்மைப்போன்று படைப்பினங்கள் நம் கோளத்திலோ, அல்லது வேறொரு கோளத்திலோ கூட இருக்கலாம். அந்தப் புதிய படைப்பினத்தைத் தேடி விண்வெளியில் நம் பார்வை நீண்டு கொண்டே இருக்கிறது.
இதே தேடுதலில் வேற்றுகிரக வாசிகளும் நம்மைத் தேடி வரலாம். எதற்கும் நம் வீட்டுக் கதவை கொஞ்சம் திறந்தே வையுங்கள்.
உலகங்கள் (அகிலங்கள்) - குர்ஆன் (7:61) (7:67) (7:104) (7:121) (7:61) (10:10) (10:37) (26:109) (26:127) (26:145) (26:164)
'Jazaakallaahu khairan'  'ரஹ்மத் ராஜகுமாரன்'--செல்: 94434 46903 - நர்கிஸ் பிப்ரவரி 2009