புதன், 5 அக்டோபர், 2011

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?


பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை
உம்மு ஷஹீரா W/o முஹம்மது ஷரஃபுதீன், Banawi Container Group, Jeddah

ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும்.

1.  முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.
2.  உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.
3. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.
4.  ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.
5. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.
6.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்).
7. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.
பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும்.
அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:-
பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
"நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்".
(அல்குர்ஆன்-33:59)
இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள்.
(அல்குர்ஆன் 24:31)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167)
எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும்.
பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:-
ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு ஷரீகா ஷா என்கிற கல்லூரி மாணவியை ஆட்டோவில் சென்ற ரவுடிகள் அவளை பிடித்து இழுத்து ஆட்டோவின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அப்பெண் தெருவில் இழுபட்டு மரணித்ததை அவ்வளவு விரைவில் யாரும் மறந்திருக்க முடியாது. சரிவர உடலை மறைத்து உடை உடுத்தாததினால் தான் பெண்களுக்கு இப்படியான சம்பவங்கள் நேருகிறது என்று காவல் அதிகாரிகளால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள்.
ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
(ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு)
தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார்.
(ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு)
பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்:
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.
பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு.
உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார்.
கேரள முஸ்லிம் மக்களிடையே பர்தா கலாச்சாரம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒன்றுக்கு 50 பர்தாக்கள் விற்ற கடைகளில் இப்பொழுது 200 பர்தாக்கள் வரை விற்பதாக ஒரு கடைக்காரர் கூறுகிறார்.
(ஆதாரம்: http://us.rediff.com/news/2004/sep/15igi.htm)
மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார்.
(ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002)
லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள்.
ஆதாரங்கள்:
பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:
மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான்.
நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி "சிகாகோ டிரிபியூன்" என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார்.
ஆதாரம்: (http://www.oprah.com/tows/pastshows/towns_past_20011005_g.jhtml)
ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள்.
(ஆதாரம்: http://www.islamfortoday.com/hijabcanada.htm)
இந்த பெண்களின் மூலம் பர்தாவின் அவசியத்தை மேலைநாட்டவரும் உணர்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
பர்தாவை பிற்போக்குத்தனம் என கூறுபவர்களின் நோக்கம்:
மேற்கத்திய மக்கள் பெருவாரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாத்தின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக யூதர்கள் பல வழிகளில் முயல்கின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாத்தை பிற்போக்குவாத மதம் என்றும், தீவிரவாத மதம் என்றும், காட்டுமிராண்டிதனமான மதம் என்றும், பெண்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய மதம் என்றும் பலவாறாக சித்தரித்து மக்களை திசைதிருப்ப முயல்கின்றனர். இதில் ஒரு முக்கிய ஆயுதமாக பர்தாவையும் கையில் எடுத்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்கிற ரீதியில் பர்தா பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் பரவச் செய்கின்றனர்.
உதாரணமாக பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் பர்தா அணிவதை தடை செய்துள்ளார்கள். இதன் உள்நோக்கம் கிறிஸ்தவ பாரம்பரியத்தை காப்பாற்றுவது தான். மேலும், சமீபத்தில் நடந்த ஐக்கிய ஐரோப்பிய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் இஸ்லாம் தளைத்தோங்குவதை தடுக்கும் எண்ணத்துடன் பர்தா அணிவது பெண்களை பிற்போக்கு படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற சர்ச்சையை ஏற்படுத்தி பர்தாவை தடை செய்துள்ளனர். இதே தடையை ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாண்ட், ஆகிய நாடுகளிலும் அமல்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
(ஆதாரம்: http://www.freep.com/new/nw/islam/8_20040308.htm)
முஸ்லிம் நாடான துருக்கியை ஐக்கிய ஐரோப்பிய அமைப்பில் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ள இஸ்லாத்தின் கொள்கையை அடகு வைக்க கூறுகின்றனர். இதன் காரணமாக அங்கேயும் பர்தாவை தடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பிளிட்ஸ் பியாஸ் என்ற கல்லூரி மாணவி பர்தா அணிந்து பல்கலைகழகத்திற்குள் நுழையும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டாள்.
(ஆதாரம்: http://www.inminds.co.uk/hijab-ban/personal.html)
நாகரீகம், படிப்பு, சுயகட்டுப்பாடு இவையே சிறந்த தற்காப்பு. இவையிருந்தாலே போதும்; பர்தாவின் அவசியம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மேலைநாடுகளில் ஒன்றான கனடா நாட்டில், அந்நாட்டுப் பெண்கள் ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் வீதம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.
(ஆதாரம்: http://www.forumhub/expr/13422.20393.00.27.24.hg/)
இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவ மிஷனரியிலிருந்து பண உதவிகள் பெறுவதற்காக இலங்கையின் விடுதலைப்புலி அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம்களை ஒடுக்கும் விதமாக பர்தாவையும் ஒரு பகடைக் காயாக பயன்படுத்துகின்றனர்.
(ஆதாரம்: http://www.Muslimedia.com/archives/world99/sri-hijab.htm)
அல்லாஹு எல்லா பெண்களையும் பேரழகுடன் படைத்திருக்கிறான். பர்தாவினுள் இருக்கும் அவ்வழகை ரசிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் காமவெறி பிடித்த கயவர்கள் பர்தாவை பிற்போக்குத் தனம் என கூறுகிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் தருகிறோம். மேலை நாடுகளைப் போல நம் நாட்டையும் நவீனமாக்குகிறோம் எனக் கூறி அழகிப் பேட்டி, மாடலிங், மற்றும் விளம்பரப் படங்கள் போன்ற கலாச்சார சீரழிவை விளம்பர முதலாளி வர்க்கத்தினர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்துகிறார்கள். கணவர் மட்டுமே பார்க்க வேண்டிய அழகை எல்லோரும் பார்க்க வரும்படி விளம்பரப்படுத்தி நுழைவுச் சீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பர்தாவை ஆதரித்தால் எங்கே இது மாதிரி அரைகுறை ஆடைகளுடன் பெண்களை நடக்கவிட்டு அவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்க இயலாமல் போய்விடுமோ என்கிற பயத்தினால் பர்தாவை பிற்போக்குத்தனம் என்றும் கூறுகிறார்கள்.
இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாமல் பர்தா அணிவதற்கு எதிரான வாதங்களை மாற்றுமதத்தினர் வாதிட்டாலும் அதே தரப்பினரில் இஸ்லாத்தின் மேன்மையையும் பர்தாவின் முக்கியத்தையும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவி கொண்டே தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பர்தா அணிவது எந்தவிதத்திலும் அவர்கள் சுதந்திரத்தை பாதிக்கவில்லை, அவர்கள் முன்னேற்றத்திகு எந்த தடையாகவும் இல்லை எனபதை மேலே தொகுத்தளித்திருக்கும் கருத்துக்கள் தெளிவாக விளக்குகின்றன.
எனவே எல்லா பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படி அவர்கள் மரணம் வரை பர்தாவைப் பேணி தன்னை அன்னிய ஆண்களின் பார்வையிலிருந்து காத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுவின் பொருத்தத்தை தேடி கொள்ள வேண்டும்.

வேதங்களில் இறைக்கோட்பாடு

வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
 
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
 
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
 
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
 
குர்ஆன் கூறுகிறது:
 
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
 
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது. 
 
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
 
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் ன்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
 
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
 
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
 
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
 
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
 
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
 
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
 
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H.  கிரிப்ட் பக்கம் 541)
 
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
 
ரிக் வேதம் (6:45:16)
 
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

 
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
  
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)    
 
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு
 
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
 

ஏழு கிராத்துகள்

ஏழு ஹர்ஃபுக்கள் மற்றும் ஏழு கிராஅத்துகள்
 
திருகுர்ஆனின் தனிச் சிறப்புக்களில் ஓன்று, அது ஏழு ஹர்ஃபுக்களில் (ஏழு எழுத்துக்களில்) இறக்கப்பட்டது. இப்போது, ஒரே ஹர்ஃபைத் தவிர வேறு எந்த ஹர்ஃபும் நடைமுறையில் ஓதப்படுவதில்லையே ஏன்? என்ற கேள்வி எழலாம்.
ஒரு ஹர்ஃப் தவிர்த்து மற்ற ஹர்ஃபுக்களில் குர்ஆனை ஓதுவதை உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் நிறுத்தினார்கள். (இதனை பாடம் ஒன்றில் கண்டோம்.) ஏனென்றால் குர்ஆன் முழுமையாக ஏடுகளில் ஏழுதப்படுவதற்கு முன்னால் ஓதுவதற்கு இலகுவாயிருப்பதற்காகத்தான் ஏழு ஹர்ஃப் முறை, குர்ஆன் முழுமையாக ஏடுகளில் வந்த பின்பும் பல ஹர்ஃபுகளில் ஓதுவது குழப்பத்திற்கு வழி வகுக்கும். ஆகவே ஒரே ஹர்ஃபில் ஓதப்படுவதே குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு சரியான வழி முறை என்பதால் ஸஹாபாக்கள் அனைவரும் உஸ்மான்(ரலி) அவர்களின் முடிவை ஏக மனதாக ஒப்புக்கொண்டார்கள். இஸ்லாமிய உம்மத் முழுவதும் சேர்ந்து ஒன்று பட்டு தவறு செய்யாது என்ற அடிப்படையின் படி, ஒரே ஹர்ஃபில் எல்லோரும் ஒன்றுப்பட்டு ஒதுவது சரியான வழியே ஆகும்.
ஏழு ஹர்ஃபுகள் என்பதற்கு நாம் மேலே கண்ட விளக்கத்தின் படி, ஏழு ஹர்ஃபுக்கள் என்பது ஏழு கிராத்துகள் அல்ல என்பது புலனாகும். ஆனால் சிலரது கருத்துப்படி ஏழு கிராஅத்துகள் ஏழு ஹர்ஃபுக்களில் சேரும். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.
 
ஏழு கிராஅத்துக்கள்:
ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வெவ்வேறு ட்டத்தை பிரயோகிப்பது. உதாரணமாக
ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி  ــُ  என்கிற அடையாளமிட்டு படிப்பது அதே வார்த்தைக்கு இலக்கணத்தின் இன்னொரு சட்டத்தைப் பிரயோகித்து  ــَ ன்கிற அடையாளம் கொடுத்து படிப்பது. அதே போல் ஒரே வார்த்தையை வெவ்வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம், நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு படிப்பதால் கிராஅத்துகள்(ஓதுதல்கள்) பலவாறாக ஆகின்றது.
அப்படி வேறுபட்ட கிராஅத்துகளின் எண்ணிக்கை ழு. இத்தகைய வேறுபாட்டினால் அர்த்தம் வேறு படுவதில்லை. அப்படியே அர்த்தம் வேறு பட்டாலும் முரண்பாடான அர்த்தம் வருவதில்லை.
சூரத்துல் ஃபாத்திஹாவில் கிராஅத்துக்கள் வித்தியாசப்படும் இடங்கள் உதாரணத்திற்கா கீழே தரப்பட்டுள்ளது:
 
வித்தியாசப்படும் கிராஅத்:
مَلِكِ يَوْمِ الدِّينِ மலிகி என படிப்பது
வித்தியாசப்படும் கிராஅத்தில் "மலிக்" என்ற வார்த்தைக்கு அரசன் என்று பொருள். இது நடைமுறை கிராஅத்திலுள்ள "மாலிக்" என்ற வார்த்தையின் பொருளாகிய அதிபதி என்ற அர்த்தத்தோடு வித்தியாசப்பட்டாலும் இரண்டு பொருளும் அவ்விடத்தில் பொருந்திப் போவதைக் கவனிக்கவும்.
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ   - சிவப்பு மார்க் செய்யப்பட்ட இடத்தில் அரபி எழுத்து சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ  - - சிவப்பு மார்க் செய்யப்பட்ட இடத்தில் அரபி எழுத்து சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).
 
ஏழு கிராஅத்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து சஹாபாக்கள் படித்து சஹாபாக்கள் தாபியீன்களுக்கு படித்துக் கொடுத்ததாகும். ஏழு கிராஅத்தில் ஒவ்வொன்றையும் ஏழு காரீக்கள் (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிராஅத்) ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் மக்களுக்குப் படித்துக் கொடுத்து பிரபலமடைந்தார்கள். அவர்களில் சிலர் தாபிஈன்கள் சிலர் தபஉத்தாபியீன்களாவர்.
 
ஏழு கிராஅத்களின் இமாம்கள்:
1) அபூ அம்ர் பின் அல் அலாஃ அல்பஸரீ, மரணம் 154 ஹிஜ்ரி
2) அப்துல்லாஹ் இப்னு கஸீர் அல்மக்கீ, தாபிஈ, மரணம் 120 ஹிஜ்ரி
3) நாஃபிஉ பின் அப்துர்ரஹ்மான் அல்மதனீ, மரணம் 169 ஹிஜ்ரி
4) அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்யஹ்ஸுபீ, தாபிஈ, மரணம் 118 ஹிஜ்ரி
5) ஆஸிம் பின் அபின்னஜ்வத் அல்கூஃபி, தாபிஈ, மரணம் 128 ஹிஜ்ரி
6) ஹம்ஜா பின் ஹபீப் அல்கூஃபி, மரணம் 156 ஹிஜ்ரி
7) அல்கஸாஈ அலி பின் ஹம்ஜா அல்கூஃபி, மரணம் 189 ஹிஜ்ரி
மேற் கூறிய ஏழு கிராஅத்களுடன் இன்னும் ஏழு கிராஅத்கள் உண்டு. ஆனால் அவை குறைந்த அளவில் ஓதப்படுபவை பிரபலமாகாதவை.
ஏழு கிராஅத்களில் நடைமுறையில் நாம் ஓதிக் கொண்டிருப்பது, ஆஸிம் பின் அபின்னஜ்வத் அவர்களின் கிராஅத்தாகும்.
 
ஏழு கிராஅத்களையும் விளக்கி எழுதப்பட்ட முற்கால நூற்களில் சில:
நூல் ஆசிரியர் மரணம் (ஹிஜ்ரி)
السبعه في القراءات ابو بكر بن مجاهد 324
الحجه للقراء السبعه ابو علي الفارسي 377
التيسير في القراءات السبع ابو عمر الداني 444

தற்காலத்தில் எல்லா கிராஅத்களையும் விளக்கி விரிவாக எழுதப்பட்ட நூல் முஃஜமுல் கிராஆத் ஆகும். அதன் ஆசிரியர் அப்துல்லத்தீஃப் அல் கத்தீப், இது 11 வால்யூம்களைக் கொண்டதாகும்.
 
கிராஅத்களை உள்ளடக்கிய குர்ஆன் வெளீயீடுகள்:
நூல் فيض الرحيم في القران الكريم
ஆசிரியர் سعيد محمد اللحام
 
இதில் நடைமுறையிலுள்ள கிராஅத்தைக் கொண்ட குர்ஆன் நடுப்பக்கத்திலும் ஓரங்களில் மற்ற ஆறு கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் مصحف القراءات العشر என்ற குர்ஆன் பதிப்பில் நடுவில் நடைமுறையிலுள்ள கிராஅத் குர்ஆனும் ஓரங்களில் ஒன்பது கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹத் குர்ஆன் வெளியீட்டு நிறுவனத்தால் அபூ அம்ர் அவர்களின் கிராஅத்திலும் நாஃபிஉ அவர்களின் கிராஅத்திலும் தனித்தனியாக குர்ஆன்கள் பிரசுரித்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்:
القران الكريم برواية الدوري عن ابي عمر
القران الكريم برواية ورش عن نافع
 
குர்ஆனின் கிராஅத்கள் பற்றிய கல்வி இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் குர்ஆன் பிரிவில் படித்துக் கொடுக்கப்படுகிறது, குறிப்பாக மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ அல் இஸ்லாமிய பல்கலைக் கழகத்திலும் கெய்ரோ ஜாமிஉல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலும் முக்கியத்துவத்துடன் அதிக அளவில் படிக்கப்படுகிறது.
சவூதி அரேபியா தலைநகர் ரியாதிலிருந்து ஒலி பரப்பாகும் "இதாஅத்துல் குர்ஆன்" ரேடியோ ஒலிபரப்பில் பல கிராஅத்துகளில் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்கலாம்.
 

அரபி எழுத்துக்களும் உச்சரிப்பும்

அரபி எழுத்துக்களும் உச்சரிப்பும்
Audio source from www.madinaharabic.com
Compiled by Mufti
Best Media Player: Real Player.  Also set Real player as default.
For better view of Arabic letters install Traditional Arabic Font
ஆடியோ ஓசையை கேட்க அரபி எழுத்துக்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.



எண்
உச்சரிக்கும் விதம்
படத்தின் மூலம் விளக்கம்
உச்சரிப்பு
(ஆடியோ)
பெயர்
(ஆடியோ)
1
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவை உயர்த்த வேண்டாம். குரல் அடித் தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.
اَ ا
2
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டும். பற்களைச் சேர்க்க வேண்டாம். நாவை மேலே உயர்த்த வேண்டாம். குரல் அழுத்தமாக வெளிப்பட வேண்டும்.
بَ ب
3
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் நுனிப்பகுதியை மேல் முன் பற்களிலும் அவற்றின் ஈறிலும் இலேசாக அழுத்த வேண்டும். குரல் நடுத்தரமாக ஒலிக்க வேண்டும்.
تَ ت
4
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு பற்களையும் சேர்க்க வேண்டாம். நுனிநாக்கு மேற்பல்லைத் தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டும். நுனிநாக்கு, பல்லை விட்டும் சற்று வெளியே வரவேண்டும். குரல் மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.
ثَ ث
5
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் மத்திய பகுதி மேல் வாயை அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் அழுத்தமாக இருக்க வேண்டும்.
جَ ج























 
 
 
 
 

நேரத்தின் முக்கியத்துவம்,


நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை:
1) நேரத்தின் முக்கியத்துவம்,
2) நேரம் வீணாவதற்கான காரணங்கள்
3) நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்
I. நேரத்தின் முக்கியத்துவம்:
நேரம் என்பது என்ன? மனிதன் வாழுகின்ற வாழ்க்கை. நேரம் கடந்து விடும்பொழுது வாழ்க்கையும் நம்மைவிட்டு கடந்து விடுகிறது. எனவே நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம். சரி, வாழ்க்கை என்பது என்ன? இம்மை, மறுமை வெற்றி எனும் இயக்குகளை உள்ளடக்கியது. இம்மை, மறுமை வெற்றியின் அவசியம் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. வெற்றிகரமான வாழ்க்கையின் அவசியம், நேரத்தை முக்கியத்துவப்படுத்திவிடுகிறது. இன்னும் நேரத்தின் தன்மைகளை விளங்கிக் கொண்டால்தான் அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
நேரத்தின் தன்மைகள்:
1) தீதோ நன்றோ, நலனோ பலனோ, வீணோ விரயமோ நேரத்தை எதில் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாமல் விட்டாலும் நேரமானது சங்கிலித் தொடர் போன்று சீராக நம்மை விட்டு ஒவ்வொரு கனமும் நிற்காமல் கடந்து சென்று கொண்டே இருக்கும்.
2) கடந்து சென்ற காலத்தை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் மீளப்பெற முடியாது. மரித்துவிட்ட, கைசேதம் அடைந்த கெட்ட ஆத்மா கேட்கும் ''இறைவா! எனக்கு சிறிது காலம் அவகாசம் கொடு, நான் நல்லது செய்து திரும்புகிறேன்" என்று. ''அவ்வாறு அல்ல, நீ பொய்யுரைக்கின்றாய்" என்று இறைவன் சொல்வான். ஏனெனில் அவன் வாழும் போதே அவன் வாழ்க்கை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும், மரணம் குறித்து உணர்த்தப்பட்டும் இன்னும் அவனுக்கு பல அவகாசங்கள் கொடுக்கப்பட்டும், உணராதவனாகவும், கெட்டவனாகவும் மரித்தவன் ஆவான். ஆகவே தங்குமிடம் நரகம்தான்.
3) பிற பொருட்களைப்போல சேமித்து வைக்கமுடியாது. எதிர்கால தேவைக்கென்றோ அல்லது இப்போது விரும்புவதையெல்லாம் மனம் போன போக்கில் அனுபவித்துவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு சாதிக்கலாம், நல்லது செய்யலாம் என்று பயன் படுத்துவதற்கோ நேரத்தை சேமித்து வைக்க முடியாது.
4) பயன்படுத்தாமல் விட்டால், பனிக்கட்டியைப் போன்று கரைந்தே போய்விடும். இன்றை, இக்கணத்தை, இப்போதே பயன்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் நேரம் கரைந்து காணாமல் போய்விடும்.
5) இரு தருணங்களுக்கு இடையில் தடையை ஏற்படுத்தி தொலைவை ஏற்படுத்த முடியாது. நாம் சிந்தித்து, விழிப்போடு நேரத்தை செய்ய வேண்டிய பணியை செய்யாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே! சரி பரவாயில்லை அந்த நேரம் வராமல் ஒரு தடையை ஏற்படுத்தி பணியை முடித்து விட்டு பின்பு தடையை நீக்கி நேரத்தை வரச்செய்வோம் என்று கற்பனையும் செய்ய முடியாது. ''பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்'' - எச்சரிக்கை!
6) நேரத்தை விலைக்கு வாங்கவோ விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. நமது தேவைக்குத் தக்கவாறு நேரத்தின் கன பரிமாணத்தை விரிக்கவோ, சுருக்கவோ, கூட்டவோ குறைக்கவோ முடியாது. அது அதற்குரிய அளவில்தான் இருக்கும்.
7) கடந்து சென்ற தருணங்களைபாய்ந்து சென்று பிடிக்க முடியாது. ச்சே! கொஞ்ச நேரம் முன்னால் வந்திருந்தால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்குமே, ஃபிளைட் கிடைத்திருக்குமே, பஸ் தவறி இருக்காதே ம்ஹீம்... தருணங்கள் கடந்தது கடந்ததுதான்.
இவை எல்லாவற்றையும் விட நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக்கொண்டது. அதனை விட மிக முக்கியமான விடயம் அந்தக் கால அளவு எவ்வளவு என்பதை எவருமே அறிய முடியாத வகையில் மரணம் எனும் சூட்சுமத்தை இறைவன் வைத்திருக்கிறான். ஆக, நேரம் என்பது முக்கியமானது அல்ல. அதிமுக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் மனதிலே இருத்தியாக வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையிலே அல்அஸ்ர் எனும் 103 வது அத்தியாயத்தில், எந்தக் காலத்தை மனிதன் வீணடித்துவிடக்கூடாதோ அந்த காலத்தின்மீது சத்தியமிட்டு கூறுகின்றான்.
''காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நட்டத்திலிருக்கிறான். எவர்கள் விசுவாசங்கொண்டு நற்கருமங்களைச் செய்தும், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அத்தகையோரைத் தவிர''. ஆக நேரத்தை வீணடித்தவன் நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்துக்குரியவன்.
இன்னும் இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி.

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். ஆதாரம்: திர்மிதி

அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் பிரார்த்தனையில் இடம் பெறும் ஒரு வாசகம். ''இறைவா! எங்களை நேரம் குறித்து அலட்சியமாக இருக்க விட்டு விடாதே'' என்பதாகும்.

அடுத்து உமர்(ரலி) அவர்கள், ''இறைவா! எனது நேரத்தை அதிகப்படுத்துவாயாக. நேரத்தை சரியாக, சிறப்பாக பயன்படுத்தும் நற்பேற்றை அருள்வாயாக'' என்று பிரார்த்திப்பார்கள்.

இன்னும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் முதுமை வருமுன் இளமையை, மரணம் வருமுன் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள் என்ற நேரம் குறித்த பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது. அல்லாஹ்விடத்தில் 2 மணிநேரத்திற்கு உட்பட்டதாகும். ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வாழ்க்கை எனும் கேள்வித்தாளை வழங்கி உலகம் எனும் ஹாலில் பரீட்சை வைத்திருக்கின்றான். இன்னும் முஃமின்களுக்கு இது ஒரு சோதனைக் களமாகவே இருக்கிறது எனச் சொல்லிக்காட்டுகின்றான்.
I.A.S பரீட்சை எழுதுபவனின் துடிப்பையும், பரபரப்பையும், பதபதைப்பையும் எண்ணிப்பாருங்கள். அந்த தருணங்களை அவன் வீணாக்கமாட்டான் என்பது அல்ல, வீணானதை நினைத்துக்கூட பார்க்கமாட்டான் என்பதுதான் முக்கியம். அதனைவிட லட்சம் மடங்கு முக்கியமாண வாழ்க்கை எனும் பரீட்சையில் உட்கார்ந்து கொண்டு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம் வாருங்கள்!
II. நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பொதுவாக நேரம் வீணாவதற்கான காரணங்களை நாம் அறிவோம். என்றாலும் அதனை பகுத்து ஆய்ந்தால்தான் வீணடிப்பதிலிருந்து விடுபட முடியும். ஆகவே நாம் இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். 1) நேரமானது எப்படி வீணாகிறது? 2) ஏன் அவ்வாறு வீணாகிறது?
நேரம் வீணாவதற்கான காரியங்கள்:
இதில் முதல், முதலில்... இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % நன்மையைப் பெறுவதற்காக 95% கெட்டு நாசமாகிறோம். அதுவும் நல்ல விஷயத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கத்தான். எந்த நோக்கமும் இல்லாமல் ஷைத்தான் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பவர்களுக்கு அதுவும் இல்லை. இன்னும் அந்த 5% நன்மையை, தீமையில் குறைவான பங்கு வகிக்கக்கூடிய பிற மீடியாக்களின் வாயிலாக நாளிதழ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். T.V -யைப் பயன்படுத்தாமல் இருப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நட்டம் உறுதி. அதுமட்டுமல்ல நாம் விரும்பாத நாசத்தையும் வா, வா என்று வலிய அழைத்து விருந்துவைக்கும். இதன்கூடவே இதன் அக்காவையும் சொல்லியாக வேண்டும். அதுதான் சினிமா.
சின்னத்திரையும் வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லிமாளாது. குடும்ப கட்டமைப்பை, தனிமனித ஒழுக்கத்தை, சமூக கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது. பிஞ்சு உள்ளங்களில் காமம், கயமை, குரோதம், வக்கிரம், திகில் என எல்லாவிதமான நஞ்சையும் விதைக்கிறது. மனித இனத்தின் முன்னேற்றமான, பகுத்தறிவான சிந்தனை போக்கையே மழுங்கடித்து, மறக்கடித்து, சிதைத்து, திசைதிருப்பி, மனிதத்தின் புனிதத் தன்மைக்கு பெரும் தீங்கிழைக்கிறது.
கிரிக்கெட் - அறிவாளிகள் மத்தியில் இது ஒரு சிறந்த விளையாட்டா? என்ற சர்ச்சை ஒருபுறமிருக்கட்டும், இதற்கு இருக்கக்கூடிய மோகம், இல்லையில்லை வெறி.... சூதாட்டம் போல் ஆகிவிட்ட இதில் நமது நேரத்தை செலவிடுவது பெரிய அறிவீனம்.
அரட்டை - முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருடைய பெருவரியான நேரங்களை சாகடிப்பது இந்த அரட்டைத்தான். மனம் சலிக்காது, கண்கள் துஞ்சாது, நடு நிசியிலும் பிரிய மனம் இல்லாது செய்த அரட்டையினால் சாதித்தது எனன்? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அறிவுள்ள புத்தகங்களை விடுத்து அனாச்சாரமும், வீணும், விளையாட்டும் நிரம்பிய வார, மாத, வாரம் மிருமுறை இதழ்களுக்கென்றே வாழ்க்கையை அர்பணிப்பது. இவ்வாறு பரவலாக காணப்படுகிற சில முக்கியமான நேரத்தை வீணடிக்கும் காரியங்களை எடுத்துக்கூறியுள்ளேன். இவை போன்று ஊர் சுற்றுதல், தேவையற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் என்று எத்தனை எத்தனையோ உள்ளன. கட்டுரையின் பக்கங்களைக் கருதி, விரிவஞ்சி சுருக்கித்தருகின்றேன். இதுவரை காரியங்களைப் பார்த்தோம். இனி இவ்வாறு நாம் வீணர்களாக இருப்பதன் காரணங்களை ஆராய்வோம்.
நேரம் வீணாவதற்கான காரணங்கள்:
பயனுள்ள காரியத்தை விடுத்து பயனற்ற காரியத்தை நோக்கி நமது மனோ இச்சை செல்வதற்கும், அதிலேயே லயித்து நேரம் வீணாவதற்கும் பல உளவியல் காரணங்கள் இருக்கின்றன.
மனக்கட்டுப்பாடின்மை, சோம்பல், தோல்வி, பயம் பிறகு செய்யலாம் என்ற எண்ணம், பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் மனப்பான்மை, அலட்சியப் போக்கு, தேவையற்ற மன உளச்சல்கள், துன்பங்கள், துயரங்கள், கவலைகள், திறமையின்மை, சீரான, உறுதியான முயற்ச்சியின்மை நிதானமின்மை... என்று பல வகையான உளவியல் பிரச்சினைகளே நேரம் வீணாவதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. மேற்சொன்ன காரியங்கள் அனைத்துமே இதன் வெளிபாடுகள்தான். சரி இந்தப் பிரச்சினைகள் இல்லாதவர்களும் நேரத்தை வீணடிக்கிறார்களே என்றால் அவர்கள் வாழ்வில் இலட்சியமோ இலக்கோ அற்றவர்கள் ஆகவே அவர்களும் வீணர்களே. வாழ்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க, யாரும் விரும்பி நேரத்தை வீணடிப்பதில்லை. இருப்பினும் தங்களது இயலாமை, தாழ்வு மனப்பான்மை, உறுதியின்மை போன்ற மேற்சொன்ன சில அல்லது பல காரணங்களால் காரியங்களை தள்ளிப்போடுகிறோம். பிறகு செய்யாமலேயே விட்டுவிடுகிறோம், தோல்வி பயத்தால் நடுநடுங்குகிறோம், இலக்கின்றி வாழுகின்றோம். இதனால் வாழ்வில் விரக்தி, நேரத்தில் வெற்றிடம் ஏற்படுகிறது. இதனை மறக்க, அல்லது நேரத்தை போக்க மனம் எண்ணுகிறது. ஷைத்தான் இந்த தருணத்தை கன கச்சிதமாக பயன்படுத்துகின்றான். எவையெல்லாம் தீமையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மனதுக்கு இதம் அளிப்பதாகவும், சந்தோஷம் அளிப்பதாகவும் காட்டுகின்றான் விளைவு அழிவுப்பாதை...
நாளை வரும், நமது கவலைகள் தீரும், இன்பக்கடலில் நீந்துவோம் என்று இன்றை மறந்து இக்கணத்தை துறந்து நாளை கனவில் மூழ்குபவர்களுக்கு அந்த நாளை என்பது வரவேயில்லை, வரவும் செய்யாது.
என்ன ஆகிவிட்டது நமக்கு! வாழ்வு குறித்த சரியான கண்ணோட்டம் இல்லை, லட்சியம் இல்லை, லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்று கொப்பளிக்கும் ஆர்வம் இல்லை, திட்டம் இல்லை, கொள்கை இல்லை, கடந்து விட்ட நாட்கள் குறித்து நமக்கு கவலையில்லை, இனிவரும் தினங்கள் குறித்தும் அக்கரையில்லை, ஏன் இன்றைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவும் கூட நம்மிடம் ஒரு செயல் திட்டமில்லை. இதே நிலை நீடித்தால் சாதிக்க முடியாது என்பது இருக்கட்டும், தோல்வியை தவிர்க்க முடியாது என்பது நினைவில் நிற்கட்டும். சரி! வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன செய்ய? வாருங்கள் வெற்றி பெறுவோம்.

III நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
நேரம் வீணாவதைத் தடுத்து, நல்ல பயன்பாட்டில் அதனை வீரியப்படுத்தி வெற்றி பெற்றிட செய்ய வேண்டியது என்ன? முதலில் நேரம் குறித்த விழிப்புணர்வு நம்முள் ஆழமாக வேர் விடுவது மிக மிக அவசியம். நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்று விரக்தியுடன் அமர்ந்துவிட்டாலும் அது நேரத்தை வீணாக்கிவிடும். அதேபோல எதிர்காலத்துக்கு திட்டமிடலாம், ஆனால் எதிர்காலத்தை இப்போதே பயன்படுத்த முடியாது. ஆகவே இன்று, இக்கணம், இதைத்தான், இப்போதே பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.
நாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.
முதலில் சுயசீர்திருத்தம் அவசியம். நமது ஆளுமையை, நமது நடத்தையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சீரான பழக்க வழக்கங்களுக்கான பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நமது அன்றாட அலுவல்களை ஒரு பெரிய அறுவை சிகிச்கை செய்து, தேவையற்றதை நீக்கி, அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். நான், எனது விருப்பம், எனது திட்டம் என்று இல்லாமல் குழு உணர்வு, கூட்டுணர்வு வேண்டும். பல்வேறுபட்ட மக்களையும் அனுசரிக்க, அரவணைக்க, புரிதலுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இது குறுகிய காலத்தில் இலகுவான வெற்றியைப் பெற்றுத்தரும்.
நமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது வாழ்வின் லட்சியம் குறித்து நம்மிடம் தெளிவான, தீர்க்கமான முடிவு இருக்க வேண்டும். அப்போது தான் அதனடிப்படையில் திட்டமிடவும், காரியங்களை அமைத்துக்கொள்ளவும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலைகளையும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளையும் அதற்கொப்ப பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இவ்விதமாக தாஃவா சென்டர் மூலம் ஏன் அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடாது? என்கிற சிந்தனை புரட்சி வெடித்துக்கிளம்ப வேண்டும்.

நமது இலக்குகளை, பணிகளை நீண்டகால, இடைக்கால, குருகியகால திட்டங்களாக தீட்டி, ஒருங்கிணைத்து. ஒழுங்குபடுத்தி, எளிதாகச் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். புதிது புதிதாக சோதித்துப் பார்ப்பதைவிட வெற்றிகரமான அனுபவங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். விழிப்புணர்வும், தொலைநோக்கு பார்வையும் வேண்டும். அவ்வப்போது ஆய்வும், சுயமதிப்பீடும் அவசியம் செய்தாக வேண்டும். மறுமைச் சிந்தனை இம்மை குறித்த விழிப்புணர்வை ஊட்டவல்லது. ஒரே நாளில் நாம் நம்மை சீராக்கிவிடமுடியாது. தேவை சிறந்த பயிற்ச்சியும், தொடர்ந்த முயற்ச்சியும்தான். இன்ஷாஅல்லாஹ்!
இன்று நமதாகட்டும்!
நாளை நம்பிக்கையாகட்டும்...

வஸ்ஸலாம்.

பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்ட

பன்றிக் கொழுப்பு.. உஷார்..
மாலிக் கான்
 
கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:

அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.